search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    110 விவசாய தொழிலாளர்களுக்கு விதைகள், பண்ணை கருவிகள்
    X

    110 விவசாய தொழிலாளர்களுக்கு விதைகள், பண்ணை கருவிகள்

    • வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடன் கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக தாவர மரபணு மண்டல நிலையத்தின் சார்பாக வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடை பெற்றது.

    இம்முகாமில் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலை வர் கே.பிரதீப் முன்னிலை வகித்து அழிய கூடிய தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் தேசிய மரபணு வங்கி குறித்து தெரிவித்தார். ஈரோடு மாவட்ட விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் கலந்து கொண்டு அங்ககச்சான்றின் முக்கிய த்துவம் மற்றும் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடும் முறைகள், பயிர் மேலா ண்மை மற்றும் பாதுகாப்பு முறைகள், நச்சு இல்லாத காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    மேலும் முதன்மை விஞ்ஞானி லதா பராம்ப ரியமிக்க விதைகளை சேகரித்தல் மற்றும் சேமித்தல் குறித்து தெரிவி த்தார். இப்பயிற்சியில் திருமலைசாமி, வெங்க டேசன், பெருந்துறை விதைச்சான்று அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 110 விவ சாயம் மற்றும் விவ சாயம் சார்ந்த தொழிலாளர்க ளுக்கு காய்கறி விதைகள், பழச்செடி, கீரை விதைகள், கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மற்றும் ரப்பர் கூடை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ராதா மாரியப்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×