என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khaled Ahmed"

    • வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வங்காளதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 280 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக அந்த அணிக்கு மதுசங்கா 2, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, சந்திமால் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்யாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து அசத்திய கேப்டன் தனஞ்செயா டீ சில்வா சதமடித்து 102 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் சதமடித்து அதே 102 ரன்களும் எடுத்தனர்.வங்காளதேசம் சார்பில் நகித் ராணா, கலிட் அகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கை தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் குவித்தது. மிடில் ஆர்டரில் அசத்திய கேப்டன் டீசல் வா சதமடித்து 108 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 164 ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை. இதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.

    சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார். 

    நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.

    அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

    ×