என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • விமானத்தில் 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
    • விமானத்தின் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை.

    தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து நேற்று இரவு தென்கொரியாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

    தென்கொரியாவில் உள்ள விமான நிறுவனமான ஜெரு ஏர் பிளைட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 என்ற அந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.

    அந்த விமானம் இன்று அதிகாலை தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் மீது மிகப்பெரிய பறவை ஒன்று மோதியதாக தெரிகிறது. இதன் காரணமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    அதை விமானி சரி செய்ய போராடிய நிலையில் விமானம் முவான் விமான நிலையத்தை நெருங்கியது. அந்த சமயத்தில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனால் விமானத்தை உடனடியாக தரை இறக்க விமானி முயற்சிகளில் ஈடுபட்டார்.

    விமானத்தை தரையிறக்க விமானி ஏற்பாடு செய்தபோது விமானத்தின் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. இதனால் விமானி மேலும் தவிப்புக்குள்ளானார். அந்த விமானத்தில் அதிகளவு எரிபொருள் இருந்தது.

    எனவே எரிபொருளை காலி செய்துவிட்டு மெல்ல பத்திரமாக விமானத்தை தரை இறக்கி விடலாம் என்று விமானிகள் முடிவு செய்தனர். இதையடுத்து விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி வந்து வானில் 5 முறை வட்ட மடித்தது.

    இதற்கிடையில் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியரை விமானிகள் தொடர்ந்து இயக்கி பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எனவே எரிபொருள் தீரும் வரை விமானத்தை வானில் வட்டமிட்டபடி இருந்தனர்.

    விமானத்தின் எரிபொருள் அனைத்தும் தீர்ந்து விட்டது என்பதை உறுதி செய்ததும் முவான் விமான நிலையத்தில் விமானத்தை பெல்லி லேண்டிங் முறை யில் தரை இறக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, விமானம் ஓடுபாதையில் சறுக்கியபடி தரை இறக்கப்பட்டது. ஆனால் பெல்லி லேண்டிங் முறைக்கு பயன் கிடைக்கவில்லை.

    ஓடு பாதையில் சறுக்கிய படி சென்ற விமானம் ஒரு பக்கமாக இழுத்தபடி சென்றது. அதை விமானிகளால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக தரையில் சறுக்கியபடி சென்ற விமானம் அங்கிருந்த விமான நிலைய சுற்று சுவரில் பயங்கரமாக மோதியது.

    அடுத்த வினாடி அந்த விமானம் பயங்கரமாக வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் சிக்கி அலறினார்கள்.

    முன்னதாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்ததும் முவான் விமான நிலையத்தில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். விமானம் சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்ததை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    32 வண்டிகளில் சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினரும் பயணிகளை மீட்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். ஆனால் விமானம் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்ததால் விமானத்தின் அருகே செல்ல முடியாத நிலை இருந்தது.

    முதலில் அந்த விமானத்தில் 28 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பிறகு 40, 62, 85 என்று பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது. 10 மணி அளவில் 2 பேரை மட்டுமே பலத்த காயங்களுடன் மீட்க முடிந்தது. இதனால் 179 பேர் இந்த கோர விபத்தில் பலியானதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

    விமான விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமானது. பலியானவர்களின் உடல்கள் கருகி உள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணி நடந்தது. கருப்பு பெட்டி மீட்கப்பட்ட பின் விபத்துக்கான முழுவிவரம் தெரியவரும்.

    விபத்துக்கு ஜெரு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறும்போது, பலியானவர்கள் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் உணர்கிறோம். வழக்கமான சோதனைகளை செய்தபின் விமானத்தில் எந்திரக் கோளாறுகள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த அரசாங்க விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கி றோம் என்று தெரி வித்துள்ளது.

    விமானம் ஓடு பாதையில் சறுக்கியபடியே சென்று சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடந்த 25-ந்தேதி கஜ கஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் விமானம் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியதில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் கொரிய விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.
    • விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர்.

    தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியா திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.

    தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவர் ஒன்றில் வேகமாக சென்று மோதியது. இதில் விமானம் உடைந்த நிலையில், வேகமாக தீப்பிடித்து வெடித்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர்.
    • டிசம்பர் 14 ஆம் தேதி தற்காலிக அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

    மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். முதல் தீர்மானம் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தோல்வி அடைந்தது.

     

    ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர். எனவே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. எனவே யூன் பதவிநீக்க தீர்மானம் வெற்றி பெற்றது.

    தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும். எனவே அதுவரை, டிசம்பர் 14 ஆம் தேதி இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் திடீர் அவசர நிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூ -க்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறி அவரையும் பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 300 இல் 192 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதால் தீர்மானம் வெற்றி பெற்றது.

    இதனை கண்டித்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முந்தைய அதிபர் குறித்த பதவிநீக்கம் குறித்து முடிவெடுக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6 நீதிபதிகளே உள்ள நிலையில் புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க ஹான் மறுத்துள்ளார்.

    இதனால் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த பதவிநீக்கத்தில் வந்து முடிந்துள்ளது. மேலும் அவசர நிலை குறித்த குற்ற விசாரணையில் முந்தைய அதிபரோடு ஹான் மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

     

    ஹானின் பதவி நீக்கத்திற்குப் பிறகு, தென் கொரிய சட்டத்தின்படி, நிதியமைச்சர் சோய் சாங்-மோக், செயல் அதிபராகப் பதவியேற்க உள்ளார். 

    • இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
    • தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின.

    அவசர நிலை 

    பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். 45 வருட தென் கோரிய அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிரான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

     

    பதவி நீக்கம்

    ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்கிடையே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.

    இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று [சனிக்கிழமை] தென் கொரிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் யூன்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர். 8 வாக்குகள் செல்லாததாயின.

    இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அடுத்தது என்ன? 

    ஆனால் இதனால் யூன் உடனே பதவியை விட்டு விலகமாட்டார். தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும்.

     

    நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி வாக்களித்தால், யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.

    இந்த இடைப்பட்ட காலத்தில் யூன் சுக் நியமித்த பிரதமர் ஹான் டக்-சூ, அரசாங்கத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    • யூன் சுக் இயோல் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    • பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    சியோல்:

    தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்.

    பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அவருக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.

    இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை சனிக்கிழமை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியே விரும்புகிறது.

    இந்த நிலையில் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக் காட்சியில் பேசும்போது கூறியதாவது:-

    நான் அறிவித்த ராணுவ அவசர நிலை ஆணை என்பது ஆளுகைச் செயலை சார்ந்தது.

    இது விசாரணைகளுக்கு உட்பட்டது அல்ல. கிளர்ச்சிக்கு உட்பட்டது அல்ல. என் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். எனக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றக் குழுக்களை கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன்.

    எனது ராணுவ அவசர நிலை சட்டம் என்பது எதிர்க்கட்சியிடம் இருந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் கூறும் போது, பதவி நீக்கத்துக்கு பதிலாக யூன் சுக் இயோல் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தற்போது ஜனநாயகத்தையும் குடியரசையும் பாதுகாக்க, பதவி நீக்கம் மூலம் அதிபரை வெளியேற்றுவது தான் ஒரே வழியாக உள்ளது என்றார். இதனால் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    • இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் மக்ஜியோல்லி [அரிசி மது] குடித்து மகிழ்வார்கள்
    • மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம்.

    தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது.

    முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான விடுதிகளுக்குப் போவதும் வருவதுமாக நள்ளிரவிலும் ஜன நெருக்கடி நிறைந்த இடங்களும் சாலைகளும் தற்போது வெறிச்சோடி கிடப்பதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக தலைநகர் சியோலில் முன்பைப் போலல்லாது இரவில் வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள் இதை உறுதிப் படுத்துகிறது. மக்களுக்கு குடியின் ஆர்வம் குறைந்துவருவதை பல்வேறு புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்துகிறது.

     

     

    சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில்,  சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள்.

      

    பாப் - பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என்று கூறுகிறார்.

    மக்கள் மதுவைக் கைவிடுவதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

     

    கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.   

    • அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    சியோல்:

    தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    • அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
    • நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

    சியோல்:

    தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.

    பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.

    இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-

    அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

    அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.

    எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.
    • கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.

    எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.


    அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.

    இதற்கு முன், யூன் சுக்கின் அவசரநிலை அறிவிப்புக்கு அந்நாட்டின் மிக பெரிய, கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கொரியாவின் மிக பெரிய தொழிலாளர் அமைப்பான அதன் தலைவர் கிம் ஜின் யூக் கூறும்போது, சட்டவிரோத அவசரநிலை உத்தரவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம். அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    இந்த முட்டாள்தன செயலை அவர் செய்கிறார் என என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார். இந்த சூழலில், அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், அவசரநிலை அறிவிப்பை அதிபர் யூன் சுக் இயோல், முழுமையாக நீக்கும் வரை இந்த நிலையே தொடரும் என அந்நாட்டின் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    • சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் பார்க் மின் ஜே காலமானார்.
    • அவருக்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    தென்கொரியா நாட்டை சேர்ந்த இளம் நடிகர் பார்க் மின் ஜே (வயது 32). சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி தென்கொரியாவின் எக்ஸ்போர்ட்ஸ் நியூஸ் என்ற வலைதளம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நவம்பர் 29-ந்தேதி மாரடைப்பால் பார்க் மின் ஜே காலமானார் என தெரிவித்து உள்ளது.

    இந்த தகவலை அவருடைய பிக் டைட்டில் என்ற நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அதன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், நடிப்பை விரும்பிய அழகான ஒரு நடிகர் மற்றும் எப்போதும் சிறந்த முறையில் செயல்பட்ட பார்க் மின் ஜே சொர்க்கத்துக்கு சென்றிருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

    அவருடைய நடிப்பை இனி நாம் காண முடியாது. ஆனால், அவரை பெருமையுடன் எப்போதும் நாம் நினைவுகூர்வோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அவருக்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    அவர், மிஸ்டர் லீ (2021), லிட்டில் உமன் (2022), ஸ்னாப் அண்டு ஸ்பார்க் (2023 முதல் 2024 வரை) மற்றும் கொரியா-கீத்தன் வார் (2023 முதல் 2024 வரை) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பார்க்கின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

    • பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
    • தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்

    தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.

    பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

     

    இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

     

    இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும்  பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
    • இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

    முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×