என் மலர்
தென் கொரியா
- சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
- சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

- நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
- யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நேற்று (சனிக்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை, தென் கொரிய நீதிமன்றம் யூனின் கைது நடவடிக்கையை ரத்து செய்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவரை அவரது ஆதரவாளர்கள், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இரவு, பாராளுமன்ற கூட்டத்திற்கு பின்னர் நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
தொடர்ந்து அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றார். தனிச்சையாக செயல்பட்ட யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
இதன் விளைவாக அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். யூனின் ஜனாதிபதி பதவியை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதா என்பதை அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.
அரசியலமைப்பு நீதிமன்றம் யூனின் பதவி நீக்கத்தை உறுதி செய்தால், அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேசியத் தேர்தல் நடத்தப்படும்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு தற்போது யூன் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் மீதான விசாரணையை தடங்கல் இன்றி தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது.
- குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது.
எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது. ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 ஆயிரத்து 300 அதிகம் ஆகும். இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தென்கொரிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
- 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தென் கொரியாவில் விரைவு சாலை மீது கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தென் கொரிய தலைநகர் சியோல் -இல் இருந்து தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்சியோங் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலை பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு தூண் கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
தீயணைப்புத்துறை அறிக்கையின்படி, இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் படுகாயமடைந்தனர் மற்றும் ஒருவர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள மேலும் மூன்று பேரை தீயணைப்புத் துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தற்காலிக அதிபர் சோய் சாங் மோக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் கோரிய தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2020 முதல் 2023 வரை ஆண்டில் 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
- விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது.
- விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சியோல்:
தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி இன்று பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகள் 169 பேர், விமான பணியாளர்கள் 7 பேர் என அனைவரும் விமானத்தில் ஏறினர்.

விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. பின்னர் மளமளவென விமானத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு (ஊதப்பட்ட ஸ்டைடு) மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 29-ம் தேதி முவான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் விமானம் கான்கிரீட் அமைப்பில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது.
- மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது.
சியோல்:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கடந்த 29-ந்தேதி தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. விமான சிப்பந்திகள் உள்பட 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓடுதளத்தில் உரசியவாறு அங்கே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது. இந்த விபத்தில் 179 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விமான விபத்துக்கு விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவரும் காரணம் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 179 பேரை உயிரை குடித்த அந்த சுவரை உடனடியாக இடித்து தகர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
- தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம்.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சில மணி நேரங்களில் அவசர நிலையை திரும்ப பெற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் விலக கோரி போராட்டம் வெடித்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி அவரை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அப்போது யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இயோலின் வக்கீல்கள், புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே விசாரணைக்கு ஒத்துழைப்பதாக யூன் சுக் இயோல் தெரிவித்தார். அதன்பின் நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு யூன் சுக் இயோல் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை ஏற்கவில்லை. ஆனால் ரத்தக்களரியைத் தடுக்க விசாரணைக்கு இணங்குகிறேன். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது என்றார்.
தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம். அவரது காவலை நீட்டிக்க அதிகாரிகள் புதிய வாரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார்.
- யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.
தென் கொரியா நாட்டில் பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனனர். மேலும், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியிலும் புலனாய்வு அதிகாரிகள் இறங்கினர்.
யூன் சுக் இயோல் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதாரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். யூன் சுக் இயோல் எந்நேரத்திலும், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், புலனாய்வு அதிகாரிகளின் கைது முயற்சி வெற்றிபெறவில்லை. இது தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
யூன் சுக் இயோலை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் தவறியதை அடுத்து, தென் கொரிய ஊழல் தடுப்பு துறையினர் காவல் துறை நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய ஊழல் தடுப்பு துறை மற்றும் காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான வாரண்ட் காலாவதியாக உள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்ய புதிய வாரண்ட் பிறப்பிக்க கோரி ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.
- அதிபரை கைது செய்ய விடமாட்டோம் என கோஷமிட்டனர்.
- தென்கொரியா வரலாற்றில் அதிபர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
சியோல்:
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன்-சுக் இயோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு எதிராக சியோல் கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தென்கொரிய தலைநகர் சியோலில் அவர்கள் சாலையில் படுத்து உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
சியோலில் உள்ள அவரது இல்லம் முன்பும் ஏராளமானவர்கள் திரண்டனர். நேற்று இரவே மத போதகர்கள் உள்ளிட்ட பலர் குவிந்தனர். அவர்கள் விடிய விடிய பிரார்த்தனை நடத்தினார்கள். அதிபரை கைது செய்ய விடமாட்டோம் என கோஷமிட்டனர்.
அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்யவேண்டும் என்றும் வடகொரியாவை போல நமது நாட்டை சோசலிச நாடாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதால் 3 ஆயிரம் போலீசார் அதிபர் வீடு முன்பு குவிக்கப்பட்டனர். அவர்கள் தடுப்புகள் அமைத்து ஆதரவாளர்கள் மேலும் முன்னேற விடாமல் தடுத்தனர்.
இந்த நிலையில் யூன்-சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் இறங்கினார்கள். இன்று காலை அவர்கள் மத்திய சியோலில் உள்ள அவரது இல்லத்துக்குள் நுழைந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 68,000 பயணிகள் தங்கள் பயணத்தை ஒரே நாளில் ரத்துசெய்துள்ளனர்.
சியோல்:
தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
தலைநகர் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அதிபர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கான கைது வாரண்டிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
கைது வாரண்ட் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான உத்தரவை சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் அதிபருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் கைது வாரண்ட் இது என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்து தென் கொரிய புலனாய்வாளர்கள் யூன் சுக் கைது செய்யப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.
+2
- இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.
- 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள்
தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
தலைநகர் சியோலின் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.
பறவை ஒன்று விமானத்தில் இடித்ததே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகளிடம் இருந்து முதற்கட்ட தகவல் வந்துள்ளது. விபத்து தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு கருப்புப் பெட்டிகளும் - விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்த விமானப் பணிப்பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கண்விழித்து, என்ன நடந்தது, நான் ஏன் இங்கு இருக்கிறேன் என மிரண்டுபோய் கெட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே விபத்து நடந்த விமானத்தின் இருக்கைகள் மற்றும் சாமான்களின் துண்டுகள் ஓடுபாதைக்கு அடுத்துள்ள மைதானத்தில் சிதறிக்கிடந்தன. எரிந்த வால் பகுதியும் அங்கு காணப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற 177 பேரும் கொரியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு ஜிஜூ ஏர் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து, பறவை ஒன்று தாக்கும் எச்சரிக்கையை வழங்கப்பட்டுள்ளதும், விமானி "மே டே" [MAYDAY] அவசர அழைப்பை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இக்கட்டான நிலை ஏற்படும் போது விமானிகள் அனைவரையும் அலர்ட் செய்ய அறிவிக்கும் வார்த்தையே MAYDAY.






