என் மலர்
தென் கொரியா
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
- தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
சியோல்:
தென் கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.
பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
- இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சியோல்:
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன.
சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டது.
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்டட்டார்.
கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார்.
தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நான்கு பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
- இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவில் 4 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான ரோந்து பயிற்சி விமானம், திடீரென விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பி-3 என்ற ரோந்து விமானம் தென்கிழக்கு நகரான போஹாங்கில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என் கப்பற்படை தெரிவித்துள்ளது.
- புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
- துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என்றது அதிபர் மாளிகை.
சியோல்:
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார். இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜினாமா குறித்து ஹான் டக்-சூ கூறுகையில், எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.
- தென்கொரிய அரசியலமைப்பின்படி அதிபர் பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.
- அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
சியோல்:
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அப்போதைய அதிபர் யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவி நீக்கத்தை அந்த நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டும் கடந்த வாரம் உறுதி செய்தது.
தென்கொரிய அரசியலமைப்பின்படி அதிபர் பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும். எனவே அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ அறிவித்துள்ளார்.
- கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார்.
- யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார். வடகொரியாவுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்ததால் ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தில் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தென் கொரிய சட்டப்படி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அரசியலமைப்பு கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது நடைமுறைகளை யூன் சுக் இயோல் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசியலமைப்பை மீறியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய நீதிபதிகள் குழு ஒருமனதாக வாக்களித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், யூனின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்றன. இதன் மூலம் அரசியலமைப்பு ஒழுங்கையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஜனநாயகக் குடியரசின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதனால் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும், புதிய அதிபரை தேர்வு செய்வ–தற்காக 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 2-வது தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆவார். இதற்கு முன் 2017-ம் ஆண்டு அரசியல் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய அதிபர் பார்க் குவென்-ஹே அதிபர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.
- இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
சியோல்:
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 19 பேர் காயமுற்றதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
- யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சியோல்:
தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் வடகொரியாவுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ராணுவ அவசர நிலையை அறிவித்தார்.
இவரது இந்த செயலுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அறிவித்த சில மணி நேரத்திலேயே அதனை பின்வாங்கினார்.
எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக யூன் சுக்-இயோல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு தலைநகர் சியோலில் உள்ள அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவசர நிலை செயல்படுத்திய விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என உறுதியானது.
எனவே ஹான் டக்-சூ மீதான பதவி நீக்கத்தை ரத்து செய்த கோர்ட்டு அவரை மீண்டும் இடைக்கால அதிபராக நியமித்து உத்தரவிட்டது. அதேசமயம் யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த தீர்ப்பு யூன் சுக்-இயோல் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.
- காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
சியோல்:
தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.






