என் மலர்
நீங்கள் தேடியது "South Korean president"
- கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார்.
- யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார். வடகொரியாவுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்ததால் ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தில் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தென் கொரிய சட்டப்படி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அரசியலமைப்பு கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது நடைமுறைகளை யூன் சுக் இயோல் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசியலமைப்பை மீறியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய நீதிபதிகள் குழு ஒருமனதாக வாக்களித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், யூனின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்றன. இதன் மூலம் அரசியலமைப்பு ஒழுங்கையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஜனநாயகக் குடியரசின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதனால் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும், புதிய அதிபரை தேர்வு செய்வ–தற்காக 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 2-வது தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆவார். இதற்கு முன் 2017-ம் ஆண்டு அரசியல் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய அதிபர் பார்க் குவென்-ஹே அதிபர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உதவியாளர், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்தினார்
- இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருட வட கொரியா பலமுறை முயன்றுள்ளது
கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.
யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.
ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.
தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.
வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.
தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.
இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆக்ரா நகருக்கு வந்த கிம் ஜங்-சூக், மொகலாய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கப்பட்ட பளிங்குக்கல் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலை கண்டு களித்தார்.
தென்கொரியாவில் இருந்து தன்னுடன் இந்தியா வந்துள்ள அதிகாரிகள் மற்றும் உ.பி. மந்திரிகளுடன் தாஜ் மஹால் எதிரே அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். #KimJungSook #TajMahal #KimJungSookinTajMahal






