என் மலர்
நீங்கள் தேடியது "South Korean"
- கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
- தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம்.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சில மணி நேரங்களில் அவசர நிலையை திரும்ப பெற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் விலக கோரி போராட்டம் வெடித்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி அவரை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அப்போது யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இயோலின் வக்கீல்கள், புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே விசாரணைக்கு ஒத்துழைப்பதாக யூன் சுக் இயோல் தெரிவித்தார். அதன்பின் நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு யூன் சுக் இயோல் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை ஏற்கவில்லை. ஆனால் ரத்தக்களரியைத் தடுக்க விசாரணைக்கு இணங்குகிறேன். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது என்றார்.
தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம். அவரது காவலை நீட்டிக்க அதிகாரிகள் புதிய வாரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
- அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
சியோல்:
தென்கொரியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது.
எனவே டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
அரசின் இந்த அறிவிப்பால் டாக்டர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
முக்கியமாக அதிகளவில் டாக்டர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600-க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏராளமான ஆபரேசன்கள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
- விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
- வாலிபருக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்து தென் கொரிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.
தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194 பேர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால், விமானத்தில் இருந்த பயணகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார்.
இந்நிலையில், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.
மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.
கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
