என் மலர்tooltip icon

    பாலஸ்தீனம்

    • கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
    • பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும்.

    ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் காசா முனைக்கு கடத்திச் சென்றது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 04 ஆயிரத்து 268 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரில் இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    முன்னதாக காசா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    சர்வதேச அரசியல், நீண்ட கால முரண்கள் என பல்வேறு காரணங்களை கூறி தாக்குதல் நடத்துவது, தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மற்றும் போர் என்ற பெயரில் அப்பாவி உயிர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவது உலக அமைதியை சீர்குலைத்து வருகிறது.

    அந்த வகையில் போரின் போர்வையில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருப்பது இருதரப்பு போரின் தீவிரத்தன்மையை குறைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியுடன் வந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது
    • ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

    அக்டோபர் 7 தாக்குதல் 

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

    காசா போர் 

    அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரை அமெரிக்கா, ஐநா என சர்வதேச அரங்கில் எடுக்கப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

     பெய்ட் லாஹியா தாக்குதல் 

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    நேதன்யாகு விஜயம்  

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா நகருக்கு நேற்று வருகை தந்துள்ளார். கடந்த மாதம் ஈரான் அணு சக்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட நேதன்யாகு தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் காசாவுக்கு திடீர் வருகை தந்துள்ளது முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது.

     

    இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு கவசம், பாலிஸ்டிக் ஹெல்மெட் சகிதம் காசாவில் நேதன்யாகு சுற்றிப்பார்த்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.

    பரிசு 

    ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனவே பணய கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலிடம் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு பணய கைதிக்கும் தலா 5 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் [இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்] சன்மானம் அளிக்கப்படும் என்று காசா சென்ற நேதன்யாகு அறிவித்துள்ளார்.

    பணய கைதியை எங்களிடம் ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். அந்த நபர் குடும்பத்துடன் காசாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இஸ்ரேல் அழைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    உயிருடனோ? பிணமாகவோ?

    மேலும் பணய கைதிகளின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அந்த முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை. அனைத்து பணய கைதிகளையும் உயிருடனோ? பிணமாகவோ? மீட்கும்வரை போரை தொடருவோம். யாரேனும் பணய கைதிகளுக்குத் தீங்கு விளைவிக்க நினைத்தால் அவர்கள் கொல்லப்படுவர் என்று நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது

    லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.

    முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,452 பேரும், காசாவில் இதுவரை 43,846 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன
    • சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளது

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

    அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

     

     ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.

     

    போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் நடப்பது இன அழித்தொழிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐநா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உயிரிழந்த 43,500 பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

     0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர்.

     

    • இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையே நடந்துவரும் போர் ஓர் ஆண்டை கடந்துள்ளது.
    • இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர்.

    காசா:

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓர் ஆண்டைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர்.

    மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

    ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே, கடந்த சில வாரமாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தள்ளி வைக்கப்பட்ட 3 ஆம் கட்ட முகாம் நேற்று நடத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதை தடுக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அடிப்படை சுகாதர வசதிகள் மற்றும் உணவு இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தில் உள்ளனர்.

    ஊட்டச்சத்து குறைபாடும் , நோய்த் தொற்று ஏற்படும் அபயமமும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உலக சுகாதர அமைப்பின் முயற்சியின் பேரில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

     

    இதன்படி, காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். இந்நிலையில் , 3-வது கட்ட சொட்டு மருந்து முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த அக்டோபர் 23-ந்தேதி நடக்க இருந்த இந்த முகாம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

     

    இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ், போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.

    • என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
    • வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் கடற்கரை நகரமான செசாரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்றைய தினம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்த பின்னர் இந்த தாக்குதலானது நடந்துள்ளது. டிரோன்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்ததால் சேதம்  தவிர்க்கப்பட்டது.

    இந்த கொலை முயற்சி குறித்து நேதன்யாகு பேசியதாவது, என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என்று எச்சரித்திருந்தார்.

    இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

     

    தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத்தத் தளங்களையே குறிவைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
    • சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல்வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக சின்வார் செயல்பட்டவர் ஆவார். இந்நிலையில் தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

     

    எனவே ஹமாஸின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் ஹமாஸ் வட்டாரங்களில் அடிபடுகின்றன. அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலில் உள்ளார். இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருபவர் ஆவார்.

    இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கையாக ஹமாஸ் துணைத் தலைவர் செயல்பட்ட கலீல் அல் ஹய்யா பட்டியலில் உள்ளார். கத்தாரில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் இவரே.

    ஆனால் இவர் வெளியுலகுக்கு அதிகம் தெரிந்தவராகவும் வெளிநாட்டில் உள்ளதாலும் யுத்த களத்தில் இவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக  இருந்த காலெத் மஸீல் தற்போது கத்தாரில் உள்ள நிலையில் அவரும் தேர்வு பட்டியலில் உள்ளார். மேலும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளார்.

     

    யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஹமாஸ் தீவிரமாகஆலோசித்து வருகிறது. போர் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். இதற்கிடையே யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

    • யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
    • இந்த தாக்குதலில் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் பேசியிருந்தார்.

    இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள்  என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

     

    ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன.  அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும்.

    • ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் 

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இஸ்ரேல் 

    தற்போது அதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வார் கட்டிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் டிரோன் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தங்களின் முக்கிய நோக்கம் நிறவெறி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர். 200 பேர் வரை பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் பெருமபலானோர் மீட்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா உள்ளிட்ட பாலஸ்தீனியர்களை நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    லெபனான்

    இதற்கிடையே ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து க்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால் எந்த நேரமும் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.

    ஹிஸ்புல்லா 

    இதற்கிடையே தலைவரின் மறைவால் சற்று தொய்வடைந்த ஹிஸ்புல்லா மீண்டும் தீவிரமாக இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    புதிய போர்

    மேலும் தற்போது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்தும் ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுக்கு எதிரான புதிய மற்றும் அடுத்த கட்ட போரை நோக்கி தாங்கள் முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தலைவர் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை இஸ்ரேலை எதிர்க்கும் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானும் ஹிஸ்புல்லாவும் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற பதற்றம் உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது. சிவார் கொல்லப்பட்டதை உறுதி செய்யாத ஹமாஸ், தங்கள் அமைப்பை அழைக்க முடியாது என்று மட்டும் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

    • பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
    • இதில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.

    பெய்ரூட்:

    பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன என லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அழ- புரெஜ் [Al-Bureij] அகதி முகாம்  மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா [Al-Awda] மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

    மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார். 

     

    ×