என் மலர்
நீங்கள் தேடியது "Rockets"
- ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பெய்ரூட்:
இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுக்ள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்துள்ளது. அதேபோல், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வின் தலைவராக இருப்பவர் சிவன். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை ஆகும்.
சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தான் சிவன் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். அவர் விஞ்ஞானி ஆன பிறகு தான் படித்த பள்ளிக் கூடத்திற்கு வந்து பார்வையிட்டு உள்ளார். மேலும் அவர் ‘இஸ்ரோ’ தலைவரானதும் அவருக்கு சொந்த ஊரில் வரவேற்பும் அளித்து ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.
தற்போது சரக்கல்விளை அரசு பள்ளியில் ஓட்டு கட்டிடங்களை மாற்றிவிட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டும் பணி ரூ.40 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் ஒரு வகுப்பறை டிஜிட்டல் வகுப்பறையாக உருவாகி வருகிறது. இந்த பணிகள் கடந்த மே மாதம் 17-ந்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் இன்று சரக்கல்விளை வருகை தந்தார். அரசுப்பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது ஊர் மக்கள் சார்பில் அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டுகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதியும் அவருக்கு வரவேற்பு அளித்தார். மேலும் அந்த பள்ளிக் கூடத்திற்கு புதிதாக சுற்று சுவர் கட்டித்தரவும், மின் வசதி, கழிவறை வசதி, வர்ணம் பூசுதல், புதிய இருக்கைகள், பூங்கா அமைத்தல் போன்ற கோரிக்கைகளை அவர் சிவனிடம் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் பணியில் இவை வருவதாகவும், பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவன் உறுதியளித்தார். இந்த கட்டிட பணிகளை திட்டமிட்டதற்கு முன்னதாக அக்டோபர் மாதமே முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளதாக அவர் கூறினார்.
அதன்பிறகு நிரூபர்களுக்கு பேட்டி அளித்த சிவன் கூறியதாவது:-
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன்மூலம் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையும், மேக் இன் இந்தியா திட்டத்தில் பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் ‘இஸ்ரோ’ 40 ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதில் 30 ராக்கெட்டுகள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளாகவும், 10 ராக்கெட்டுகள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஆகவும் தயாரிக்கப்படும்.
செயற்கை கோள்களுக்கு தேவையான சூரிய ஒளி மின் சக்தி பேட்டரிகளும் இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த பேட்டரிகள் இந்தியாவில் தயாராகும் செயற்கை கோள்களில் பயன்படுத்தப்படும்.
இந்த திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். கிராமப் புற மாணவர்கள் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று மேன்மை அடைய இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #ISROleadersSivan #ISRO






