என் மலர்
பாலஸ்தீனம்
- போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
- கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.
பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

- காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்
- 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதில் இருந்து காசாவில் போர் தொடங்கியது, இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டனர். சுமார் 100 பணயக்கைதிகள் இன்னும் காசாவிற்குள் உள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 46,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தெரிவித்துள்ளது. 110,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். 17,000 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அதனால் தர முடியவில்லை.
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் குண்டுவீச்சுகள் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியுள்ளது. காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] முழுமையாக நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை ஹமாஸும், பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரை இஸ்ரேலும் விடுவித்தது.
போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.
15 மாதங்களாக வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்த காசா மக்கள் கல்லாகவும் மண்ணாகவும் எஞ்சிய கட்டடங்களை கடந்து சிதிலங்களுக்கு ஊடாக தங்கள் வீடுகளின் எச்சங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.
தெருக்களை சுத்தம் செய்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர். ஆனால் சேதங்கள் சரிசெய்யப்பட்டு காசாவில் மீண்டும் இயல்வு வாழ்க்கை திருப்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே துரதிஷ்டவசமாக உண்மை.

காசாவில் புனரமைப்பு பணிகளை நடத்தி முடிக்க 350 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, காசாவில் உள்ள 69% கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

சுமார் 245,000 வீடுகள் உட்பட பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் நம்பிக்கை மிகுந்த ஒரு பால்ஸ்தீனியர் கூறுவதுபோல், "நாங்கள் இனியும் ஒரு கூடாரத்தில் இருக்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இரத்தக்களரி நின்றுவிடும், பயம் அகன்றுவிடும், நாங்கள் நிம்மதியாக தூங்குவோம்" என்பது ஒன்றே காசா மக்களுக்கு ஆறுதலாக அமைத்துள்ளது.

- குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது தாக்குதல் நடந்தது.
- கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை நியமித்துள்ளார்.
நேற்று மற்றும் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் உட்பட பல இடங்களைத் இஸ்ரேல் தாக்கியுள்ளது .
முவாசி மனிதாபிமான வலயத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது அங்கு தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மனிதாபிமான வலயத்தில் பதுங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் டெய்ர் அல்-பாலாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் உள்ளூர் பாதுகாப்புக் குழுக்களின் எட்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில், கான் யூனிஸில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் தனது சொந்த நோக்கங்களுக்காக உதவியைப் பயன்படுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் காசாவின் காவல்துறையை குறிவைத்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உதவி வழங்குவதில் தடையாக உள்ளது.
மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் மகாசியில் தெருவில் நடந்து சென்றபோது கொல்லப்பட்டனர். மகாசி மற்றும் நுஸ்ராத் அகதிகள் முகாம் உட்பட மத்திய காசாவில் நடந்த தாக்குதல்களில் நேற்று பிற்பகுதியிலும் இன்று அதிகாலையிலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை அங்கீகரித்துள்ளதற்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.

மொசாட், ஷின் பெட் மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய தூதுக்குழு இன்று புறப்படும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 15 மாத கால மோதலில் அமெரிக்கா தலைமையிலான முந்தைய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வியடைந்தன.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
- ஜபாலியா நகரில் பாலஸ்தீனியர்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டது.
காசா:
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதனால் ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல் இதுவரை 117 பிணைக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டு நாளான நேற்று காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலியானோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகிலுள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டனர். அதேபோல, தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஜபாலியா நகரின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மருத்துவமனையின் அருகாமையில் விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் பலியாகினர்.
- ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்
காசா மீது இஸ்ரேல் கடந்த 14 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளர். லட்சக்கணக்கில் மக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களும் போதுமான மருத்துவ உதவிகள் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கடைசி பெரிய மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் மூடியுளளனர்.
வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா பகுதியில் செயல்பட்டு வந்த கமால் அத்வான் மருத்துவமனையில் நேற்று [சனிக்கிழமை] புகுந்த இஸ்ரேலிய படையினர் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சுமார் 240 மருத்துவ ஊழியர்களை சிறைபிடித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியாவை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஒரு ஹமாஸ் பயங்கரவாதி என்று இஸ்ரேலிய படை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை.
நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] மருத்துவமனையின் அருகாமையில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை எனக் கூறியுள்ள இஸ்ரேலிய படை, மருத்துவ ஊழியர்களில் டாக்டர் அபு சஃபியாவும் ஒரு ஹமாஸ் பயங்கரவாத செயல்பாட்டாளராகவும், ஹமாஸ் இன்ஜினியரிங் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை செயல்பாடுகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள், 50 பராமரிப்பாளர்கள் மற்றும் 20 சுகாதாரப் பணியாளர்கள் அருகிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியின் கடைசி பெரிய சுகாதார வசதி சேவையும் தற்போது இல்லை என்று கவலை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை அமைந்துள்ள வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரம், அக்டோபர் மாதம் முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இவ்ஸ்த்ரேலிய படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பயங்கரவாதிகள் கமல் அத்வான் மருத்துவமனையை ஜபாலியாவில் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாகப் பயன்படுத்துவதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் நேற்று [சனிக்கிழமை] 240 போராளிகளைக் கைது செய்ததாகவும் கூறியுள்ளது.
- அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
- காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் [Quds News] பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.

- உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது. இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.
போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். ஐ.நா.வின் பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கும் இஸ்ரேலில் தடை விதிக்கப்பட்டது.

ஐநா நவம்பர் அறிக்கை
கடந்த நவம்பர் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கைபடி, உயிரிழந்த 43,500 [அப்போதைய தரவு] பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர்.
ஜெனெரல்ஸ் பட்டினி திட்டம்
நிலைமையைத் தீவிரப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற புதிய திட்டம் ஒன்றையும் கடந்த அக்டோபரில் வகுத்துள்ளது. ஜெனெரல்ஸ் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திடம் வடக்கு காசாவுக்குள் எந்த ஒரு உணவும் அத்தியாவசிய பொருட்களும் செல்லவிடாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போடுவதே ஆகும். இந்த திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதம்
இந்த மாத தொடக்கத்தில்சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்தார். உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை சர்வதேச அரங்கில் மறைக்க இந்த முறையை இஸ்ரேல் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேதன்யாகு வீடு தாக்குதல்
கடந்த மாதம் வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து ஹிஸ்புல்லவால் முதல் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழிவாங்க வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்தனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தாக்குதல்
கடந்த மாதம் காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர்.
முகாமுக்காக தற்காலிக போர் நிறுத்தம் இருந்தபோதிலும் 3-வது கட்ட சொட்டு மருந்து முகாம்களின்போது வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
ரஃபா தாக்குதல்
பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்டது.
காசா போர் 2024 டைம் லைன்
ஜனவரி 26
சர்வதேச நீதிமன்றம், தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளித்து , காசாவில் இனப்படுகொலை நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.
பிப்ரவரி 29
"மாவு படுகொலை" என்று அழைக்கப்படும் நாள் . காசா நகரில் ரொட்டி தயாரிக்கும் மாவு உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களை விநியோகித்தபோது கூட்டத்தின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 118 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் மாதம்
மார்ச் 25
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோன்ற தீர்மானங்களைத் தடுக்க பல சந்தர்ப்பங்களில் வீட்டோ உரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா,இந்தியா உள்ளிட்டவை வாக்களிக்கவில்லை. எனவே தீர்மானம் தோற்றது
மே 7
இஸ்ரேல் ரஃபா அகதி முகாம்களை தாக்கி குழந்தைகள் உட்பட 45 பேரை கொன்றது.
ஜூன் 22
24 மணி நேரத்தில் 101 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றது.
ஜூலை 1
இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் குடிநீரைப் பறிப்பதற்காக மேற்குக்கரை நகரமான ஜெரிகோவின் வடக்கே அல்-அவுஜா நீரூற்றில் கழிவுகளை கொட்டியுள்ளனர்
ஜூலை 27
லெபனானில் இருந்து சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள் மீது ஏவப்பட்ட ராக்கெட் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் காயம் அடைந்தனர்
ஜூலை 31
ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே , ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் தெஹ்ரானில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார் .
ஆகஸ்ட் 10
காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளித்து வந்த அல்-தபியீன் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அக்டோபர் 16
காசாவில் ஹமாஸின் தலைவரும், அக்டோபர் 7 தாக்குதலின் மூளையுமான யாஹ்யா சின்வார் , ரஃபாவில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார்.
நவம்பர் 24
காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்தும் கடந்த மாதம் மற்றும் டிசம்பரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
டிசம்பர் 22
வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை, பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு
- உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.
இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார்.
- பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன நகரமாக காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நிலையில் வடக்கு தற்போது காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசா நகரில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வடக்கு காசாவில் ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
- இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது.
- இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 2,210 உடல்கள் மாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிபாடுகளாகவும் தூசுயகவுமே மிஞ்சியுள்ளன. இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றன, இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது.
இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது காசாவில் புதிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். இது வரலாற்றில் வேறு எந்த மோதலையும் போல அல்ல. காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Euro-Med Human Rights Monitor அமைப்பு, வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மறைந்து சாம்பலாக மாறியிருக்கலாம். அவர்களின் உடல் காணாமல் போயிருப்பது இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளின் வகை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. காசா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகளில் இருந்தும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளில் இருந்தும் சுமார் 2,210 உடல்கள் மாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தெர்மோபரிக் குண்டுகள் உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதுகுறித்த சர்வதேச விசாரணை நடத்தப்பட என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் நிரப்பிய மேகமூட்டத்தை உருவாக்குகிறது. அதன் பின் இரண்டாவதாக வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேக பகுதியை பற்றவைத்து, 2500 டிகிரி செல்சியஸ் வரை மிக அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது.

இது தோல் மற்றும் உட்புற உடல் பாகங்களை கடுமையாக எரித்து சிதைகிறது. குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகும் அளவிற்கு எரிகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பெய்ரூட்:
இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுக்ள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்துள்ளது. அதேபோல், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
- வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது
பாலஸ்தீன நகரமான காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுள் காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகினர்.
மேலும் வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது. இதில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்தது. வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.
இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் [சுமார் 30,000 பேர்] பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது.






