என் மலர்
பாலஸ்தீனம்
- ஏழு வார போர் நிறுத்தத்தின்போது 25 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
- போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பதற்கான முன்னெடுப்பு நடைபெறாமல் உள்ளது.
பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஹமாஸ் வெளியிடவில்லை.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கண்மூடித்தனமாக தாக்குதலால் உலக நாடுகள் பணயக் கைதிகளை விடுவிக்க போர் இடைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது குற்றம் சுமத்திய இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் சுமார் 14 மாதங்களாக நீடித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 25 உயிரோடுள்ள பணயக் கைதிகளையும், 8 உயிரிழந்த பயணக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும், இதற்கு இணையாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடைசி வாரம் வரை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து வந்தது. இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
ஏழு வார ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் எல்லையை மூடியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியற்ற நிலையில் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் தற்போது ஒரு பயணக்கைதி மற்றும் உயிரிழந்த 4 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
- முதற்கட்ட போர் நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது.
- அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பணயக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு ஒரேவழி எனத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. அதோடு 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. 2023 நவம்பர் மாதம் பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பயணக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி வரை தொடர்ந்தது. இதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் (ஜனவரி) 20-ஆம் தேதி பதவி ஏற்க இருந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தனர்.
இந்த போர் நிறுத்தம் 6 வாரம் ஆகும். இந்த 6 வாரத்தில் 33 பணயக் கைதிகள் (இதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் அடங்கும்) விடுவிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமாக இன்று நான்கு பணயக் கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.
இந்த வாரம் இறுதியுடன் முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்த கட்டத்திற்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் போர் நிறுத்தம் தொடருமா? அல்லது இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் கூறுகையில் "பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேல் பணயக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பதற்கான ஒரே வழி. மாறாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முயற்சி மேற்கொண்டால், அது பணயக் கைதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் துன்பத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.
- அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும் காணலாம்.
- காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது.
கடந்த 13 மாதகால போரினால் 56,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர்.
ஆனால் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்கள் இல்லாமல் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். குளிர்காலம் தொடங்கிய காசாவில் மக்கள் வெப்பமின்மை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 குழந்தைகள் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக நேற்று காசா மருத்துவமனைகள் நிர்வாகம் தெரிவித்தது.


இதற்கிடையே காசாவை வருங்காலத்துக்கான ரியல் எஸ்டேட் தளம் என்றும் அதை விலைக்கு வாங்கி சீரமைக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார். அங்குள்ள லட்சோபலட்சம் மக்களை நிராதாரமாக வெளியேற்றி அரபு நாடுகளில் குடியேற்றம் செய்யும் திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்து வருகிறார். டிரம்பின் இந்த சுத்தப் படுத்துதல் திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு வர்ணித்துள்ளார்.
இந்நிலையில் காசாவை விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த வீடியோ பகிராப்பட்டுள்ளது.
வீடியோவின் தொடக்கத்தில், காசா மிகவும் பரிதாபகரமான நிலையில் காட்டப்பட்டுள்ளது, அங்கு மக்கள் பசியால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வீடியோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு காசா ஒரு சுற்றுலா தலமாகக் காட்டப்படுவதைக் காண்கிறோம்.
ஏஐ உருவாக்கிய வீடியோவில் காசா ஒரு 'கடற்கரை ரிசார்ட்' போல காட்டப்பட்டுள்ளது. அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும், எலான் மஸ்க் ஹம்முஸ் சாப்பிடுவதையும் காணலாம்.
வீடியோவில், காசா பப்கள், கிளப்புகள் மற்றும் ரிசார்ட்டுகளால் நிரம்பியிருப்பதைக் காணலாம். அந்த வீடியோவில் 'டிரம்ப் காசா' என்ற பெயருடைய ஒரு ஹோட்டலும் காட்டப்பட்டுள்ளது. காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது. ஒரு புறம் அத்தியாவசிய உதவிகள் இன்றி காசா மக்கள் தவித்து வரும் சூழலில் டிரம்ப் வெளியிட்ட இந்த வீடியோ பலரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

- குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது
- பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது.
காசா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசுகையில், கடுமையான குளிரால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது என்று கூறினார். மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
காசா நகரத்தில் உள்ள 'நோயாளிகளின் நண்பர்கள்' என்ற தொண்டு மருத்துவமனையின் இயக்குனர் சையத் சலா பேசுகையில், கடந்த சில மணிநேரங்களில் கடுமையான குளிர் மற்றும் தங்குமிடங்களில் வெப்பமின்மை காரணமாக மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.
காசாவில் சமீபத்திய நாட்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் மிகவும் குளிரான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை நூற்றுக்கணக்கான கூடாரங்களை அழித்துள்ளது. பல அகதி முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது.


காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

- ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது.
- அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்
'தற்காலிக' போர் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில் இடிபாடுகளால் சூழப்பட்ட காசாவுக்கு திரும்பிய லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தையும் வாழ்க்கையும் மீண்டும் கட்டமைக்க போராடி வருகின்றனர்.

இடிபாடுகளுக்கிடையில் வடக்கு காசா
ஐநா கூற்றுப்படி, காசாவில் ஒரு மாதமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்குள் மீண்டும் வந்தனர்.
அவர்களின் ஒரு குடும்பம் ராவ்யா தம்பூராவினுடையது. தனது இளம் மகன்களுடன் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.
16 மாத காலப் போருக்கு பிறகு தம்பூரா தனது இடிபாடுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். குழாய் நீர், மின்சாரம் என அத்தியாவசிய வசதிகள் இல்லாமல், சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்ற எந்த கருவிகளும் இல்லாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
இதுவே அங்கு திரும்பி வந்த 600,000 சொச்சம் மக்களின் சிரமமும் ஆகும். மறுகட்டமைப்பு வேலையைத் தொடங்க வழி இல்லை. இடிபாடுகளுக்கிடையில் என்றென்றும் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
"சிலர் போர் ஒருபோதும் முடிவடையாமல் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கொல்லப்படுவது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்," என்று தம்பூரா கூறுகிறார். "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. என் மூளை எதிர்காலத்திற்கான திட்டமிடலை நிறுத்தியது" என்று அவர் கூறுகிறார்.

எதிர்காலம் என்ன?
ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடையும் போது அமைதி நீடிக்க உத்தரவாதம் இல்லை. மீண்டும் சண்டை வெடித்தால், வடக்கு காசாவுக்கு திரும்பியவர்கள் நிலை மீண்டும் முன்போலவே நரகமாக மாறும்.
உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் முழு இடமும் அழிந்த பின்னர், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்துக்குப் பின், மனிதாபிமான உதவி அமைப்புகள் பணிகளை முடுக்கிவிட்டன. இலவச சமையலறைகள் மற்றும் நீர் விநியோக நிலையங்களை அமைத்தல் மற்றும் காசா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள் விநியோகித்தல் ஆகியவை முழு வீச்சில் நடந்தன.
காசா நகராட்சி நீர் குழாய்களை சரிசெய்யவும், தெருக்களில் இருந்து இடிபாடுகளை அகற்றவும் தொடங்கியது. ஆனால் அதை முழு வீச்சில் செய்ய கனரக உபகரணங்கள் இல்லை. நகராட்சியின் 40 புல்டோசர்கள் மற்றும் ஐந்து டம்ப் லாரிகளில் சில மட்டுமே இன்னும் வேலை செய்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் அசெம் அல்னாபிஹ் கூறுகிறார்.
காசா 50 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கட்டட இடிபாடுகளால் நிரம்பியுள்ளது. 100 லாரிகள் 15 ஆண்டுகள் முழு திறனில் இயங்கினால் மட்டுமே அதை அகற்ற சாத்தியப்படும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.
அழிக்கப்படும் அடையாளம்
காசா குடும்பங்கள் ஒவ்வொரு நாளாக வாழ்க்கையை கடந்த முயற்சிக்கின்றன. 25 வயதான பல் மருத்துவர் அஸ்மா த்வைமாவும் அவரது குடும்பத்தினரும் காசா நகரத்திற்குத் திரும்பிய மற்றொரு குடும்பம். டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள அவர்களின் வீடு அழிக்கப்பட்டது .
திரும்பி வந்த சில வாரங்களுக்குப் பிறகு, இப்போது தட்டையான மற்றும் எரிந்த இடிபாடுகளின் குவியல் போல இருக்கும் அவர்களின் நான்கு மாடி வீட்டைப் பார்த்து அவர் பெருமூச்செறிகிறார்.
இஸ்ரேல் மக்களை மட்டும் கொள்ளவில்லை. வீடு, நகரம் என்ற அவர்களுக்கு நெருக்கமானவற்றை அளிப்பதன் மூலம் அந்நகருடனான அவர்களது அடையாளத்தை அளிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
"நான் பயந்ததால் இங்கு வர முடியவில்லை. என் மனதில் என் வீட்டில் அழகு மற்றும் அரவணைப்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்ற இந்த உண்மையை எதிர்கொள்ள நான் பயந்தேன். அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

- இஸ்ரேலை சேர்ந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
- இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பிணைக்கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் தகவல்
4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர்.
இவை 2023 அக்டோபர் 7, தாக்குதலின் போது கடத்தப்பட்ட ஷிரி பிபாஸ் என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் மற்றும் 83 வயதான ஒடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்கள் என நம்பப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்த 4 பேரும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் பேனர் வைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தனர். பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
- இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியதால் சிக்கல் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி வருகிற சனிக்கிழமை பிணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
தற்போதுவரை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.
ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை வரும் சனிக்கிழமை (நாளைமறுதினம்) விடுதலை செய்ய வேண்டும்.
ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறிவிட்டதாகவும், ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுதலை செய்வோம் என்றும் ஹமாஸ் அமைப்பினர் திடீரென மிரட்டல் விடுத்தனர். மேலும், சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுவிக்கமாட்டோம் என ஹமாஸ் தெரிவித்தது.

அதேவேளை, வரும் சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு மதிப்பு கிடையாது என்று ஹமாஸ் தெரிவித்தது. இது தொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இரு தரப்புக்கும் இடையே (இஸ்ரேல், ஹமாஸ்) போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மதிக்க வேண்டும் என்பதை டிரம்ப் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டிரம்பின் மிரட்டல் மொழிக்கு மதிப்பு கிடையாது. இந்த மிரட்டல் ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கும்" எனக் கூறியிருந்தார்.

தற்போதைய 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கால அவகாசம் மார்ச் மாத முதல் வாரம் வரை உள்ளது. ஆனால் சனிக்கிழமை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் காசா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் திட்டமிட்டபடி பணயக் கைதிகள் வரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பு "எகிப்து மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்தர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் வகையில் அனைத்து தடைகளையும் விலக்குவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்துள்ளனர். இதனால் சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இது வெளிப்படையாக மிகப்பெரிய பிரச்சனையை தீர்க்கும்" எனத் தெரிவித்துள்ளது.
6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஒருவேளை போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வில்லை என்றால் மீண்டும் காசா மீது இஸ்ரேல தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளது.
- காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
- அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். நேற்று ஏர் போர்ஸ் 1 விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்.
அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன் தான் செய்லபட முடியும். காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காசாவில் எதுவும் இல்லை. அந்த இடம் ஒரு இடிபாடு தளம். மீதமுள்ளவையும் இடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் பேசியுள்ளார்.
அரபு நாடுகள் தன்னுடன் பேசிய பிறகு பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். "அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும்.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும்" என்று கூறினார்
சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் காசாவை பாலஸ்தீனத்திடம் இருந்து முற்றிலுமாக பறிக்க திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரம்ப்பின் திட்டம் அப்பட்டமான மோசடி என ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
- காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது.
- ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத், ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் அவரை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து, அவரது மார்பில் மூன்று முறை சுட்டு கொலை செய்தனர்.
- காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன.
- அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. போரில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.
காசாவை நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்.
பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ஆலோசனையை சக்தி வாய்ந்த அரபு நாடுகள் நிராகரித்துள்ளன.
- அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது.
- 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுத்துவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். எல்லையைத் திறந்தபின் வடக்கு காசாவுக்குள் நெட்சாரிம் பாதை வழியாக லட்சக்கணக்கான மக்கள் நேற்றுமுதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"அது (காசா) இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.
அதை(காசாவை) நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்" என்று டிரம்ப் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
இதனிடையே, ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தங்களின்படி 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
காசா மீதான போரில், இஸ்ரேல் கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னாள் அதிபர் ஜோ பைடன் இந்த வெடிகுண்டுகளை அனுப்பாமல் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிற பாலஸ்தீனிய நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தனியாக உள்ள காசாவை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.
- ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
- இதனால் ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப காத்திருந்தனர்.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
முதற்கட்டமாக 3 பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன் தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.






