என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.
    • அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான்- ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுளளது.

    இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய் என்ற இடத்தில் நடைபெற்றது. பலுசிஸ்தான் துணை ராணுவப் படை அதிகாரிகள், இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், ஈரான் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை.

    ஈரான் படைகள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.

    அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பின்னர் இருநாட்டு டிப்ளோமேட்டிக் மூலமாக பதற்றத்தை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
    • கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார் நவாஸ் ஷெரீப்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் இங்கிலாந்து சென்ற அவர் 4 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் திரும்பினார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே, 6 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக, நவாஸ் ஷெரீப் கூறுகையில், 1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி பாகிஸ்தான் 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன்பிறகு வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம். கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான் என தெரிவித்தார்.

    • பனமா பேப்பர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
    • நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், பொதுத்தேர்தலுக்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப் கட்சி பொனாசீர் பூட்டோவின் மகன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நவாஸ் ஷெரீப் சகோதரர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் நவாஸ் ஷெரீப்பை தவிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • வெயில் காரணமாக பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    பாகிஸ்தானில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவானது. சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கோடை காலத்தில் அதிகபட்ச டிகிரி இதுவாகும்.

    வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலர் உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    வெயில் காரணமாக பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் சர்தார் சர்பராஸ் கூறும்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் 129.2 டிகிரி வெயில் பதிவானதே அதிகபட்சமாகும். இது ஆசியாவிலேயே இரண்டாவது மற்றும் உலகின் நான்காவது அதிக வெப்ப பதிவாகும் என்றார்.

    • பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணிகளைச் சித்திரவதை செய்து பேருந்துக்குத் தீவைத்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று (மே 26) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய TTP பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பேருந்தை தீவைத்து எரித்து சாம்பலாக்கிய பின் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

     

    • சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.
    • வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் சில பிரபலங்கள் புலிகள், பாம்புகள், முதலை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கூட அனுமதி பெற்று வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் வீடுகளில் ஏராளமான விலங்குகளை வளர்த்து அவற்றுடன் விளையாடுவது போன்று எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனவர் நவுமன்ஹாசன்.

    இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் சிறுத்தை ஒன்று திடீரென அவரை கீறும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில் நவுமன் மற்றொரு நபருடன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறார்.

    அவர்களுக்கு அருகில் நவுமன் வளர்த்து வரும் செல்ல சிறுத்தை செல்கிறது. அப்போது சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன.
    • சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவிய வீடியோவில் சயீத் அன்வரின் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சயீத் அன்வர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சயீத் அன்வர் கூறியுள்ளதாவது:-

    பெண்களை பணியில் சேர்ப்பதன் மூலம் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள். நான் உலகம் முழுவதும் பயணம் செய்தேன். நான் ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் இருந்து திரும்பி வருகிறேன். இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள். குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. தம்பதிகள் சண்டையிடுகிறார்கள். விவாகரத்துகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.


    நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் பெண்கள் பணியிடத்தில் சேருவது மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்த நிலையை எவ்வாறு சரிசெய்வது? 'எங்கள் பெண்கள் பணியிடத்தில் நுழைந்ததில் இருந்து எங்கள் கலாச்சாரம் அழிக்கப்பட்டுள்ளது' என்று கேன் வில்லியம்சனிடம் ஆஸ்திரேலிய மேயர் கூறினார்.

    பாகிஸ்தானில் பெண்கள் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் விவாகரத்து விகிதம் முப்பது சதவிகிதம் உயர்ந்துள்ளது.

    சயீத் அன்வர் கூறியது குறித்து கேன் வில்லியம்சன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

    சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவிய வீடியோவில் சயீத் அன்வர் தனது பிற்போக்குத்தனமான மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்களுக்கு கடுமையான பின்னடைவையும் கடுமையான விமர்சனத்தையும் பெற்றுள்ளார்.

    • கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
    • பாகிஸ்தானின் வருவாய் என்ஜின் கராச்சி நகரம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முட்டாஹிடா குவாமி கட்சி எம்.பி சையத் முஸ்தபா கமால் பேசியதாவது:-

    உலக நாடுகள் நிலவுக்கு செல்லும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா நிலவில் கால் பதித்த செய்திக்கு, இரண்டு வினாடிகளுக்குப் பிறகு கராச்சியில் திறந்தவெளி சாக்கடையில் ஒரு குழந்தை இறந்ததாக செய்தி வருகிறது. கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

    "பாகிஸ்தானின் வருவாய் என்ஜின் கராச்சி நகரம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன. கராச்சி முழு பாகிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நுழைவாயிலாக உள்ளது. ஆனால் 15 ஆண்டுகளாக கராச்சிக்கு சிறிதளவு கூட தூய்மையான தண்ணீர் தர முடியவில்லை. அப்படி தண்ணீர் வந்தால் கூட, டேங்கர் மாபியா கும்பல் தண்ணீரை பதுக்கி வைத்து, கராச்சி மக்களுக்கு விற்கிறார்கள் என்றார்.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது
    • முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார்.

    மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பிரபலமான நொறுக்கு தீனிகளில் ஒன்றாக வடாபாவ் திகழ்கிறது. குறிப்பாக தெருவோர உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் வடாபாவுக்கென்றே வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கராமத்கான் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், கராச்சியில் உள்ள கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே கவிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் உணவு கடை தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கவிதாவின் உணவகத்துக்கு சென்ற கராமத்கான் அந்த ஓட்டலில் வடாபாவ், பாவ் பாஜி, தால் சமோசா போன்ற உணவுப்பொருட்கள் சுவையாக இருப்பதாக கூறுகிறார்.

    கடையை நடத்தும் கவிதா கூறுகையில், வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது. இப்போது கராச்சியில் வசிப்பவர்களும் அதை விரும்புகிறார்கள் என கூறுகிறார். முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    வடமேற்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மலைப்பாங்கான அந்த பகுதியில் இருந்து விலகிய பஸ் அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு ஓடியது. பின்னர் சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மீட்பு படையினருடன் போலீசார் விரைந்தனர்.

    அப்போது விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் இறங்கினர். எனினும் அதற்குள்ளாக இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் 21 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தார் நியமனம் செய்யப்பட்டார்.
    • இவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார்.

    உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார்.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார். அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தாரை நியமனம் செய்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

    ×