என் மலர்
கனடா
- கோரிக்கையை வலியுறுத்தி பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- இதனால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஒட்டாவா:
கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் கனடா. இதில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
அவர்கள் சம்பள உயர்வு, விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என நவோமி ஒசாகா கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட எம்போகா அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.
டொராண்டோ:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பரி- நீல் ஸ்கப்சி ஜோடி உடன் மோதியது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 6-7 (5-7), 13-11 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- இங்கு கடந்த ஜூலை 9ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது
இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி இறுதிப்போட்டியில் வென்றது.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-4 என கோகோ காப் ஜோடி வென்றது. ஆனால் 2வது செட்டை 6-1 கோகோ காப் ஜோடி என இழந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி 3வது செட்டை 13-11 என போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றி அசத்தியது.
ஒற்றையர் பிரிவில் கோகோ காப் தோல்வி அடைந்தாலும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.
டொராண்டோ:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரெவெயிட்ஸ் ஜோடி உடன் மோதியது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி அரையிறுதியில் வெற்றி பெற்றது.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, செர்பியாவின் டேனிலொவிச்- தைவானின் ஹை சூ வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் கோகோ காப் ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 (8-10) எனஇழந்த ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பான் வீராங்கனை ஒசாகா 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, லாத்வியாவின் செவட்சோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 1-0 என ஸ்வரேவ் முன்னிலை பெற்றபோது, அர்ஜெண்டினா வீரர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய விக்டோரியா 6-1,6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.






