என் மலர்
உலகம்
- காசாவில் 45 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
- இஸ்ரேல் அரசு இன்று முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.
பாரீஸ்:
காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பு தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மந்திரி சபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க மனிதாபிமான போர் நிறுத்தம் உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
- தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம்தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.
இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு 248 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதோடு 91பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
தொடர்ந்து, தென்னாப்பிரிக்க பாராளுமன்றம் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.
- விபத்திற்குள்ளான விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர்
- இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி மதிப்புடையது
மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம், ஹவாய். இதன் தலைநகரம் ஹோனோலூலு.
இங்குள்ள ஒவாஹு (Oahu) தீவுக்கு அருகே கெனோஹே (Kaneohe Bay) கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் விமான படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநில விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ (Boeing Poseidon 8-A) ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது.
விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது அது எதிர்பாராதவிதமாக ஓடுகளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர்.
கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுதளம் விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணுவ உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி ($275 மில்லியன்) மதிப்புடையது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து, சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு.
- இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் அறிவிப்பு.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.0 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம், இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறுகையில், "சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றது.
கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
- ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகள் விதித்த போதிலும், வடகொரிய அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அதன் வேலையை செய்து வருகிறது.
உச்சக்கட்டமாக உளவு பார்க்கும் செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்தது. இந்த உளவு செயற்கைக்கோள் கொரிய தீபகற்பம், ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதனால் தங்களது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள முடியும் என வடகொரிய தெரிவித்து வந்தது.
இந்த ஏவுகணையை செலுத்தினால், பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா நேரடியாக எச்சரித்து வந்தது.
ஆனால், சில மாதங்களுக்கு முன் உளவு பார்க்கும் செயற்கைக்கோளை செலுத்தியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. செயற்கைக்கோளின் பாகங்களை சேகரித்த தென்கொரியா, அது உளவு பார்க்கும் திறனற்றது எனத் தெரிவித்தது.
ஆனால், வடகொரியா தனது முயற்சியை கைவிடாமல், 2-வது முறையாக முயற்சி செய்தது. 2-வது முறையாகவும் தோல்வியடைந்தது. அப்போதும் வடகொரியா மனம் தளறவில்லை.
தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்தது. கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் உளவு செயற்கைக்கோளை செலுத்த இருக்கிறோம் என ஜப்பானுக்கு தகவல் தெரிவித்தது. இதனால், தென்கொரியா தங்களது கவலையை தெரிவித்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில்தான் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தும் என்பதால் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நுழைந்ததாக என வடகொரியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரியா பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒருபகுதியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உளவு செயற்கைக்கோள் செலுத்தியதை ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் வடகொரியா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் உறுதிப்படுத்தாத நிலையில், நாங்கள் அதுகுறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் செயல் ஐ.நா. தீர்மானத்தை மீறியது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பிற்கான பயங்கரமான ஆத்திரமூட்டல் செயல் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கான துணை மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும், 2018-ம் ஆண்டு போடப்பட்ட பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
- ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
- சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும்.
நியூயார்க்:
ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் சுக்ரம் பேசினார். இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
அவர் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு நிரந்தரப் பிரதிநிதி (பாகிஸ்தான் தூதர்) முன் வைத்து உள்ள தேவையற்ற மற்றும் வழக்கமான கருத்துக்களை நிராகரிக்க சில வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டேன். அதற்கு பதில் அளித்து நான் அவர்களை கண்ணியப்படுத்த மாட்டேன்.
சர்வதேச கவனத்தை கவர பாகிஸ்தான், ஐ.நா. கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும். கடன் பொறிகளின் தீய சுழற்சிக்கு வழிவகுக்கும் நிதியுதவியின் ஆபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா கடன்களை கொடுத்து தனது பொறியில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 50 பிணைக்கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தம்.
- அதன்பின் ஒவ்வொரு 10 பேர் விடுதலைக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம்.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.
கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதனால் இஸ்ரேல் மந்திரிசபை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
காசாவில் 14,100 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் சுமார் 6 ஆயிரம் பேர் குழந்தைகள்- சிறுவர்கள் எனவும், 4 பேர் பெண்கள் எனவும் ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.
50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- ஹமாஸ்- இஸ்ரேல் போரில் காசாவின் வடக்குப் பகுதி மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
- இருதரப்பில் உள்ள மருத்துவமனைகளும் பாதிப்படைந்துள்ளன.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஐந்து நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவின் வடக்குப் பகுதி சீர்குலைந்துள்ளது. மேலும், அல்-ஷிபா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
- பிணைக்கைதிகளை மீட்கும் வகையில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
- ஹமாஸ்- இஸ்ரேல் இடையே எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தும் ஏற்படலாம்.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 7-ந்தேதியில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவின் வடக்கு பகுதி சீர்குலைந்துள்ளது. அமெரிக்கா பலமுறை போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற 240 பேரை உயிருடன் மீட்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் உள்ளது. அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.
இதன் பயனாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஹமாஸ் தலைவர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ்க்கு எதிராக போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "நாங்கள் போரில் இருக்கிறோம். போரை தொடருவோம். எங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும்.
போர் நிறுத்த நேரத்தில் உளவுத்துறை முயற்சிகள் பராமரிக்கப்படும், இது ராணுவத்தை அடுத்த கட்ட போருக்கு தயார்படுத்த அனுமதிக்கும். காஸா இஸ்ரேலை அச்சுறுத்தும் வரை போர் தொடரும்" என்றார்.
240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வௌயாகி உள்ளது.
- காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
- காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.
பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
- பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டம்.
- காசா மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், போர் நிறுத்தம் சாத்தியமாகுமா? என்பது சந்தேகம்தான்.
இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் பலியானார்கள். அதனைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. இடைவிடாமல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தற்போது வரை தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால் வடக்கு காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்க முடியாத பரிதாப நிலை உள்ளது.
இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்தது. பிணைக்கைதிகளை விடுவிக்க கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர் என குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது. இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே "ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தததை நெருங்கி விட்டார்கள். அதிகாரிகள் தங்களது பதிலை கத்தார் மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் குறித்த முழுத் தகவல் வெளியாகவில்லை. மேலும், காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், காசாவில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், போர் நிறுத்தம் என்பது சந்தேகமே...
- தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும்.
- ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா, கடந்த ஆகஸ்டு மாதம், உளவு செயற்கைக் கோளை ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அக்டோபரில் 2-வது முறையாக ஏவிய உளவு செயற்கைக் கோளும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவி உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.
அதன்படி வருகிற 30-ந்தேதிக்குள் உளவு செயற்கைக் கோளை ஏவுவதற்கான தனது திட்டத்தை ஜப்பானிடம் வடகொரியா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பபாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறும்போது, வடகொரியா செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதே நோக்கமாக இருந்தாலும், ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் தொடர் மீறலாகும்.
இது தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும். அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயற்கைக் கோள், ஏவுகணை ஏவுவதை தொடர வேண்டாம் என்று வடகொரியாவை ஜப்பான் வலியுறுத்தும் என்றார்.






