என் மலர்
உலகம்
- 73 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.
73 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
- நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
காசா:
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உள்பட 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காசா பகுதி முற்றிலும் நிர்மூலமாகி விட்டது.
இதற்கிடையே காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபா அருகே தாக்குதல் நடக்கிறது. ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாகவும், ஆஸ்பத்திரியின் கீழே ஹமாசின் சுரங்கங்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசாவில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. அல்-புரேஜ் அகதி முகாம், ரபா, காசா சிட்டி மற்றும் பிற பகுதிகளில் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது.
வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசியன் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதுபோல் மற்ற ஆஸ்பத்திரிகள் பகுதிகளிலும் தாக்குதல் நடக்கிறது.
இதனால் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், தஞ்சம் அடைந்த பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள்.
போதுமான எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறை பிரசவத்தில் பிறந்த 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காசா ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் குழந்தைகள் ஏற்றப்பட்டு ரபா எல்லை வழியாக எகிப்துக்கு சென்றடைந்தன.
பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க அதிக அளவில் முதலீடு.
- கடந்த சில வருடங்களாக சுரங்கங்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளதாக தகவல்.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக உறுதியற்ற பல விசயங்கள் உள்ளன என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், "சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.
சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.
- கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
- கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்து இருக்கிறது. செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமானது.
அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் "நியாயமான இலக்கு. அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்" என்று ஹவுதி அமைப்பின் ராணுவ அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கடத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது. எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடியவர் ஹேடன்
- வெள்ளை நிற மாடலை ஹேடன் விரும்பி தேர்வு செய்துள்ளார்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் (Matthew Hayden).
தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிப்பில் பல சாதனைகளை புரிந்த ஹேடன், சுமார் 15 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.
2003 ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுடனான இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி அந்த அணி வெற்றி பெற வழி தேடி தந்தவர்களில் ஹேடனும் ஒருவர்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா ஆட்டோ. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.
கடந்த 2015ல் மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான ஆஸ்திரேலிய தூதராக மேத்யூ ஹேடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் பல கார்களை இணையதள வழியாக ஹேடன் விளம்பரப்படுத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஹேடன், மஹிந்திரா நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் ஒன்றை வாங்கினார். "எவரெஸ்ட் வைட்" (Everest White) எனும் வெள்ளை நிற ஸ்கார்பியோ மாடலை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது.
இது குறித்து ஹேடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில் ஸ்கார்பியோவின் பல அம்சங்களை ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் புகழ்ந்து பேசுகிறார்.
பயணிகளுக்கான கார்களில் எஸ்.யூ.வி. (SUV) எனப்படும் வாகன வகையை சேர்ந்த ஸ்கார்பியோ காரை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக ஹேடன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் "ஸ்கார்பியோ என்" மாடல்களில் டீஸல் எஞ்சின் பொருத்தப்பட்டவை மட்டுமே விற்கப்படுகின்றன.
ஹேடன் தேர்வு செய்துள்ள "ஸ்கார்பியோ என்", கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவின் சிம்ப்சன் பாலைவனத்தை (Simpson Desert) அதிவேகமாக கடந்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில், மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ கார்தான் அதிக விற்பனையை குவிக்கும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
- ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.
2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.
தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.
"இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.
அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.
மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.
இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை.
- துருக்கியில் இருந்து சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்தது.
- ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது
செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமாகி விட்டது.
அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும், ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த கப்பல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது ஆகும்.
கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது.
மாலத்தீவு:
மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அதிபர் அலுவலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலாளர் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். அவர்களை திரும்ப அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் முகமது மூயிஸ் தொடங்கி உள்ளார்.
இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018 வரை அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தார். அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார், அதன் பின்னர் வந்த முகமது கோலி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இந்த சூழ்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக இருப்பார் என கருதப்படுகிறது.
- மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
- இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.
காசா:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது முதலில் வான்வெளி வழியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காசாவில் மிகப்பெரிய மருத்துவ மனையாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது போர்களமாக பயன்படுத்தி வருவதாகவும், உள்ளே ஏராளமான சுரங்க பாதைகள் அமைத்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் மறுத்து வருகிறது.
இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் வெளியேறி விட்டனர். ஆஸ்பத்திரி முழுவதும் இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆஸ்பத்திரிக்குள் மிகப்பெரிய அளவில் 10 மீட்டர் ஆழத்தில் 55மீட்டர் நீளத்துக்கு சுரங்கபாதைகள் இருப்பதை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்க பாதையை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வீடியோவினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதே போல பல பதுங்குகுழிகளை கண்டுபிடித்து அழித்து விட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 நாட்களில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.
- மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி 1926ல் தயாரிக்கப்பட்டது
- மெக்ஆலன் இந்த வகை மதுபானத்தை 40 பாட்டில்கள் மட்டுமே தயாரித்தது
"ஸ்காட்ச் விஸ்கி" என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம்.
மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்ற வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ'ஸ் (Sotheby's). பன்னாட்டு நிறுவனமான சாத்பீ'ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், இரு தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி (Macallan Adami Single Malt Whiskey) மதுபானம் சுமார் ரூ.22,48,89,885.00 கோடி ($2.7 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
"இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது" என இந்த ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல் (Jonny Fowle) இதன் தரம் குறித்து கூறினார்.
இந்த விஸ்கி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 வருட காலம் கருமையான ஓக் ஷெர்ரி (black oak sherry) பீப்பாய்களில் ஊற வைக்கப்பட்டது. அதன் பிறகு 1986ல் இது பாட்டிலில் அடைக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது; ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை அளித்துள்ளது.
40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், வெவ்வேறு காலகட்டங்களில் இவை ஏலத்திற்கு வரும் போது, மிக அதிக தொகையை பெற்று தருகின்றன.
- தேர்தல் விதிமுறைகளை 2020ல் அதிபர் புதின் மாற்றினார்
- இத்தேர்தல், ஏமாற்றுவதில் வல்லுனருடன் விளையாடுவதை போன்றது என கிர்கின் கூறினார்
ரஷியாவில், 2024 மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
பதவியில் இருந்த ஒருவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ரஷிய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிமுறையில் 2020ல் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மாற்றம் கொண்டு வந்தார்.
தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி அதிபர் புதின் மீண்டும் போட்டியிட 2036 வரை தடையேதும் இல்லை.
இந்நிலையில் ரஷிய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், புதினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் (52) அதிபர் தேர்தலில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கிர்கின் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி புதின் அரசு அவரை சிறையில் அடைத்துள்ளது.
டெலிகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ட்ரெல்கோவ் எனும் பெயரில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கிர்கின் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தற்போதைய சூழ்நிலையில் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சீட்டாட்டத்தில் ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஒருவருடன் சீட்டு விளையாடுவதை போன்றது. ஆனால், நம் நாட்டின் மீது பற்றுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வரும் தேர்தலில் ஒரே மனிதரே மீண்டும் மீண்டும் தேர்தலில் எதிர்ப்பின்றி வெல்வதற்கான திட்டங்களை தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாட்டின் முன் நிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களிலிருந்து தேசத்தை இதன் மூலம் காக்கவும் முடியும். என் ஆதரவாளர்கள் என்னை முன்னிறுத்த பிரசாரத்தை தொடங்க வேண்டும்.
இவ்வாறு கிர்கின் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷியாவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வந்தவர் கிர்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1927ல் பிறந்த ரோஸலின், 1946ல் ஜிம்மி கார்டரை மணந்தார்
- என் சாதனைகளுக்கு ரோஸலின் உறுதுணையாக இருந்தார் என்றார் ஜிம்மி
அமெரிக்காவில் 1977லிருந்து 1981 வரை அதிபராக பதவி வகித்தவர், ஜிம்மி கார்டர் என அழைக்கப்பட்ட ஜேம்ஸ் எர்ல் கார்டர் (99). ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர் (96).
1927ல் அமெரிக்காவில் பிறந்த ரோஸலின், 1946ல் ஜிம்மி கார்டரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகளும், 11 பேரக்குழந்தைகளும், 14 கொள்ளுப்பேர குழந்தைகளும் உள்ளனர்.
அமெரிக்க அதிபர்களிலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து வந்த தம்பதியினரான இருவரும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கார்டர் சென்டர் (Carter Center) எனும் பெயரில் லாபநோக்கற்ற அறக்கட்டளையை நடத்தி வந்தனர்.
ரோஸலின், தன் கணவரின் பதவிக்காலம் நிறைவடந்ததும் எழுத்தாளராகவும் சமூக மற்றும் பொதுநல தொண்டுகளில் ஆர்வமுடையவராகவும் தன்னை முன்னிறுத்தி வந்தார். பெண்கள் உரிமை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
கடந்த மே மாதம் ரோஸலினுக்கு டிமென்சியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக, குடும்பத்தார் அருகில் இருக்க, ரோஸலின் கார்டர் காலமானதாக அவர்களின் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது.
"என் சாதனைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் ரோஸலின். எனக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தார். அவர் இருந்த வரையில் என் மீது அன்பு செலுத்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்திருந்தேன்" என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் தன் மனைவி குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.






