search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தென்அமெரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் பலி
    X

    கோப்புப்படம்

    தென்அமெரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் பலி

    • அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க அதிக அளவில் முதலீடு.
    • கடந்த சில வருடங்களாக சுரங்கங்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளதாக தகவல்.

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுதொடர்பாக உறுதியற்ற பல விசயங்கள் உள்ளன என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், "சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.

    சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.

    Next Story
    ×