என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
- அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
கட்டாக்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.
இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.
இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:
ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34
- அயர்லாந்து 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்தது.
புலவாயோ:
ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் வெஸ்லி மாதவரே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 45 ரன்கள் சேர்த்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.
நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.
மீதம் ஒருநாள் உள்ள நிலையில் 109 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- உலக தானியங்கள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- தானியங்களைப் பயிரிடுதல், உற்பத்தி செய்தலை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அகமதாபாத்:
உலக தானியங்கள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தானியங்களைப் பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக அளவில் தானியங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் இந்தியா திகழ்கிறது. துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட முக்கிய வகைகளில் நாடு தன்னிறைவை அடைந்துள்ளது.
இந்நிலையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் இருந்து 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன என தகவல் தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காகும்.
டாலர் மதிப்பு சாதகம் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்றுமதியாளர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.
இந்த அத்தியாவசிய துறையில் தேசம் சுயசார்பில் மேம்படுவதற்கு முக்கிய பங்காற்றும் மற்றும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக, முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் தலைமையிலான குஜராத் உருவெடுத்துள்ளது.
துவரை மற்றும் கொண்டைக்கடலை உற்பத்தியில் நாட்டில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. பச்சைப்பயறு மற்றும் உளுந்து உற்பத்தியில் நாட்டில் 5-வது இடம் வகிக்கிறது. சீரான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பால், விவசாயிகளின் வருவாயும் ஊக்குவிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. இதனால் அவர்களில் பலர், நவீன வேளாண் நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர் என தெரிவிக்கின்றது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். இரண்டாவது செட்டை டி மினார் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-2 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது அந்த வகையில். நா. முத்துகுமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகி பாபு , அப்துல் மாலிக் கதாப்பாத்திரத்தில் நட்டி , மலர் கதாப்பாத்திரத்தில் காவ்யா அறிவுமணி , அபி கதாப்பாத்திரத்தில் நடிகை லவ்லின் சந்திரசேகர் , விஜி கதாப்பாத்திரத்தில் விஜி சந்திரசேகர், அதியன் கதாப்பாத்திரத்தில் ரியோ ராஜ் , அன்பு கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.
- தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூங்குபவர்களை எழுப்பலாம்... ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் 60% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத் தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டின் இன்றையத் தனிப்பெரும் தேலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சமூக நீதி சார்ந்து தமிழ்நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் முதன்முறையாக, உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மீறி, 69% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சிறப்புச் சட்டத்தின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வைத்து செயல்படுத்தி வரும். பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
ஆனால், அந்தப் பெருமை இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரக் கூடும்.
69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்பாச்.சுபாடியா தலைமையிலான அமர்வு 69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அருனடிப்படையில் இட ஒதுக்கிட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்" என்று ஆணையிட்டது.
ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கிட்டை எதிர்த்து சிவர் 2012ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? என்று வினா எழுப்பினர்.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 68%க்கும் அதிகம் என்பதை ஆதாரங்களுடன் அரசு நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்கான ஆபத்து இருக்கிறது.
அந்த ஆபத்தை முடியடிப்பதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். அவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது
என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான் என்பதை அன்பையில் பிகாரிலும், தெலுங்கானாவிலும் நடத்தப்பட்ட அதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு பட்டும் தான் அதை புரிந்து கொள்ளவும். ஏற்கவும் மறுக்கிறது.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும், சாதியாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்ற பழைய பல்லவியையே தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும். மீண்டும் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சமூகநீதியின் இம்மியளவும் அக்கறையில்லை.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்ற வினா எழுந்திருக்கிறது.
இது குறித்து சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுடன் விவாதிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.
சென்னை தியாகராயர் நவர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் நாளை, பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகிய நான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெஜான்பாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, நாடார் மகாஜன எங்கத் தலைவர் கரிக்கோல் ராஜன், யாதவ மகாசபை சங்கத்தின் தலையர் நாசே இராமச்சந்திரன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர், வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடிய கில் 60 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் - ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
- 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடிய கில் 60 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் கேப்டன் ரோகித் 3வது இடம் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ள டிராவிட்டின் சாதனையை முறியடித்து 49 ஆவது சதத்தை ரோகித் இன்று பதிவு செய்தார்.
சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள்
1. சச்சின் - 100
2. விராட் கோலி - 81
3. ரோகித் - 49
4. டிராவிட் - 48
5. சேவாக் - 38
- மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்.
- கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் அஜிகுமாருக்கு படத்தில் மாஸ் சீன்கள் இல்லை என அவர்களது கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதெற்கெல்லாம பதிலளிக்கு வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சண்டை இயக்குனர் சுப்ரீம் சுந்தர் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் திரைப்படம் போல் இல்லை, மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் எதையெல்லாம் ரசிகர்கள் மிஸ் செய்தார்களோ. அதை விட 10 மடங்கு அதிகமான மாஸ் காட்சிகள் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருக்கும்.
நீங்கள் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு செல்லும் போது உங்களுக்கு விக்ஸ் மற்றும் ஹால்ஸ் தேவை, ஏனென்றால் திரைப்படம் முழுக்க அத்தனை வாவ் மொமண்ட்ஸ் இருக்கிறது. நீங்கள் கத்தி கத்தி உங்களுக்கு தொண்டை வலி வந்துவிடும்." என கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் ரோகித் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி, ரோகித் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 337* சிக்ஸர்களை விளாசியுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
- உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.
மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






