என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வாரணாசி, சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின.
    • நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும்

    வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று(மார்ச் 14) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு முதல் டெல்லி வரை பலவேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா வண்ணங்களைப் பூசி கட்சியினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் டெல்லியில் தத்தமது வீடுகளில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்வர்களும் ஆதரவாளர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ், சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின. திரளான மக்கள் வீதிகளில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், தமிழ்நாட்டில் திருச்சி ஆகிய பகுதிகளிலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா எல்லைகளிலும் எல்லைப்பாதுகாப்பு படையினர் வண்ணங்களை பூசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது.

    இந்த விழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தையும் குறிக்கிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பாரதத் தாயின் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் சக்தியையும் ஊட்டுவதோடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும் என்பது எங்கள் நம்பிக்கை என்று அதில் பதிவிட்டுள்ளார் 

    • ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் வெளியான அறிவிப்பில் சில:-

    * அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.

    * மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திப்பதிவுகளுக்கு இது பொருந்தும். 

    * ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

    • வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * 2025-26-ம் நிதியாண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாயாக வரி வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

    * 2025-26-ம் நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    * மாநிலத்தின் சொந்த வருவாய் 14.6 சதவீத அளவில் வளர்ச்சி பெறும்.

    * அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது.

    * 2024-25 நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி.

    * மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.

    * பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதியை மத்திய அரசு மறுப்பதால் மாநில அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    * மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டுள்ள நாம் வரியை அளிப்பதில் 9 சதவீதமாக உள்ளோம்.

    * மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.

    * வரும் மூலதன பணிகளுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு.

    * வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும்.

    * வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக இருக்கும்.

    * வரியல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
    • சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் சில:-

    * தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.

    * கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.

    * சேலம், கடலூர், நெல்லையில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூடம் வசதிகளடன கட்டப்பப்படும்.

    * தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    • சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.
    • போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * வரும் நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.

    * சென்னை 950, மதுரை 100, கோவை 75 மின் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

    * தமிழகம் முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

    * 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

     

    * 120 கோடியில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.

    * போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மின்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
    • 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த மார்ச் 11 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது. 24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரெயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த ரெயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    * விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மிக அதிவேக ரெயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி,

    * சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

    * சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    * விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

    • எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது.
    • இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க. அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

    எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க. ஆதரித்தது.

    ₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் தி.மு.க. இப்போது நீக்கியிருக்கிறது.

    அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை தி.மு.க. அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை தி.மு.க. வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை தி.மு.க.வினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது தி.மு.க..

    தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
    • அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்...

    * சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்.

    * நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

    * 1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

    * சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.

    * அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

    * ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.

    * அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

    • அக்‌ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • ரூ.18 கோடிக்கு அக்‌ஷர் படேல் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் இல்லை.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும் (கடந்த சீசன் ஷ்ரேயாஸ் ஐயர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் (டுபெலிஸ்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும் (கே.எல்.ராகுல்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (ஷிகர் தவான்) புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.

    இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனங்கள் வாங்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
    • டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூ.1092 கோடி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனங்கள் வாங்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நடமாடும் மருத்துவ குழுக்களுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு.

    * காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.

    * டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூ.1092 கோடி ஒதுக்கீடு.

    * தமிழக பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.
    • சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சில:-

    * ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

    * மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.

    * திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

    * ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.

    * தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும்.

    * கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.

    * நகர்ப்புற சாலை பணிகளுக்கு ரூ.3,750கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

    * கோவை சாலைகள் ரூ.200 கோடியிலும், மதுரை சாலைகள் ரூ.130 கோடியிலும் மேம்படுத்தப்படும்.

    * 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.

    * கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

    ×