என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது.
- தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
இதனிடையே, தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
- நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.
- மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.
சென்னை:
மதுபான முறைகேடு புகார் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக்கில் சோதனை நடைபெற்றது.
* எந்த ஆண்டு போடப்பட்ட FIR என்பது பற்றி அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
* மதுபான டெண்டர்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை.
* டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ளது.
* பணியிடமாற்றம் பொறுத்தவரையில் எந்த தவறும் இல்லை. பணியிடமாற்றம் அவர்களது குடும்ப சூழலை பொறுத்தது.
* ரூ.1,000 கோடி முறைகேடு என பொத்தம்பொதுவாக குறைகூறுவதை ஏற்க முடியாது.
* ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக முன்னதாக ஒருவர் கூறுகிறார், பின்னர் அமலாக்கத்துறை சோதனை செய்துவிட்டு அதையே கூறுகிறது.
* டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.
* மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.
* அமலாக்கத்துறையின் வழக்குகள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும்.
* பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்க நேற்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
* ஏற்கனவே இருந்த கடைகளில் 500 கடைகளை நாம் மூடியுள்ளோம்.
* அரசின் மீது அவதூறை பரப்ப வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுகிறது.
* ஊழியர் தவறு செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுத்தால் அது தவறா?
* தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற கோஷம் மக்களின் கோஷமாக மாறியுள்ளது என்றார்.
- ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ்.
- அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். கடந்த புதன்கிழமை மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.
ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர்.
இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
- நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
- காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 25 லட்சம் பட்டாக்களை வழங்கி உள்ளேன்.
* மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் விளம்பரம் செய்வதிலே தி.மு.க. அரசு கவனமாக உள்ளது.
* முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.
* புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என்பது வெற்று அறிவிப்பு.
* கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் என பொய்யாக கூறி உள்ளனர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தை தான் தி.மு.க. அரசும் செய்கிறது.
* நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
* நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கை என்ன? அதை அரசு செயல்படுத்தியதா? என்ற வெள்ளை அறிக்கை இல்லை.
* காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
* காலை உணவுத் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் கிடையாது.
* அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்கள் என சட்டசபையில் அறிவித்துள்ளனர்.
* திடக்கழிவில் இருந்து மின்சாரம், சென்னை அருகில் புதிய நகரம் போன்ற அறிவிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை.
* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள், காலை உணவுத்திட்டம் போன்றவை புதிய திட்டங்கள் அல்ல.
* 3.5 லட்சம் காலிபணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், ஆனால் 57000 பணியிடங்களுக்கு தான் நியமனம்.
* 4 ஆண்டுகளில் 57,000 காலிப் பணியிடங்களை தான் தி.மு.க. அரசு நிரப்பி உள்ளது.
* ஓராண்டில் மட்டும் எப்படி 40,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியும்.
* ஓராண்டு காலத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்ற முடியாது.
* டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
- நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்!
- விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
சென்னை :
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
புதிய நகரம்
புதிய விமான நிலையம்
புதிய நீர்த்தேக்கம்
அதிவேக ரயில் சேவை
என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட்2025!
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.
- 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்.
* 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
* சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே?
* பெட்ரோல், டீசலுக்கான விலைக்குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது?
* மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்த அறிவிப்பு இல்லை.
* பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
* ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்ற அறிவிப்பு இல்லை.
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள தி.மு.க. அரசு.
* கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
- கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்:-
* திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கான ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை மெட்ரோ ரெயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக இது அமையும்.
* கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
* ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
- விஸ்பி கரடி இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அழைக்கப்படுகிறார்.
- விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஸ்பி கரடி ஒரு இந்திய தற்காப்புக் கலை நிபுணர், பயிற்சியாளர் மற்றும் சாதனையாளர் ஆவார். அவர் குடோ (Kudo) என்ற ஜப்பானிய தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவரது உடல் வலிமை மற்றும் சாகசங்களால் "இந்தியாவின் ஸ்டீல் மேன்" என்று அழைக்கப்படுகிறார். விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார். அவரது சாதனைகள் பெரும்பாலும் உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக, உடலைப் பயன்படுத்தி இரும்பு கம்பிகளை வளைத்தல், செங்கற்களை உடைத்தல், கைகளால் கடினமான பொருட்களை உடைப்பது போன்றவை அவரது சாகசங்களில் அடங்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். அதன்படி குஜராத்தின் சூரத்தில் ஹெர்குலஸ் தூண்களை நீண்ட நேரம் தாங்கி பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். விஸ்பி 2 நிமிடங்கள் 10.75 வினாடிகள் தூண்களைப் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த தூண் 123 அங்குல உயரமும் 20.5 அங்குல விட்டமும் 166.7 கிலோ மற்றும் 168.9 கிலோ எடை கொண்டவை ஆகும்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- வாரணாசி, சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின.
- நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும்
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று(மார்ச் 14) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு முதல் டெல்லி வரை பலவேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா வண்ணங்களைப் பூசி கட்சியினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் டெல்லியில் தத்தமது வீடுகளில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்வர்களும் ஆதரவாளர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ், சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின. திரளான மக்கள் வீதிகளில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், தமிழ்நாட்டில் திருச்சி ஆகிய பகுதிகளிலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா எல்லைகளிலும் எல்லைப்பாதுகாப்பு படையினர் வண்ணங்களை பூசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஹோலி பண்டிகைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது.
இந்த விழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தையும் குறிக்கிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பாரதத் தாயின் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் சக்தியையும் ஊட்டுவதோடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும் என்பது எங்கள் நம்பிக்கை என்று அதில் பதிவிட்டுள்ளார்
- ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் வெளியான அறிவிப்பில் சில:-
* அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.
* மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திப்பதிவுகளுக்கு இது பொருந்தும்.
* ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 2025-26-ம் நிதியாண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாயாக வரி வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2025-26-ம் நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* மாநிலத்தின் சொந்த வருவாய் 14.6 சதவீத அளவில் வளர்ச்சி பெறும்.
* அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது.
* 2024-25 நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி.
* மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.
* பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதியை மத்திய அரசு மறுப்பதால் மாநில அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
* மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டுள்ள நாம் வரியை அளிப்பதில் 9 சதவீதமாக உள்ளோம்.
* மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.
* வரும் மூலதன பணிகளுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு.
* வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும்.
* வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக இருக்கும்.
* வரியல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






