என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
    • 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.

    அகமதாபாத்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இன்று மோதுவது 37-வது முறையாகும். இதுவரை நடந்த 36 ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியுடன் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன.

    'குவாலிபையர்1' ஆட்டத்தில் பஞ்சாப்பை 101 ரன்னில் சுருட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.

    3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

    • மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள்.
    • நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள் என விராட் கோலிக்கு ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கோலிக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள். நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன். கோப்பையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

    என டிவில்லியர்ஸ் கூறினார்.

    • குவாலிஃபயர் 1 போட்டியின்போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது.
    • எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சேவாக் கூறியதாவது:-

    குவாலிஃபயர் 1 போட்டியின் போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது. எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. நான் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை ஆதரித்தாலும் அப்பொழுதும் தோல்விதான் மிஞ்சுகிறது. இப்போது ஆர்சிபியை ஆதரிக்கிறேன் என சிரித்தபடி கூறியுள்ளார்.

    அவர் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதால் ஆர்சிபி அணியும் தோல்வியடைந்து விடும் என அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

    • ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இந்த போட்டியில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப்- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    • 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் காயம் காரணமாக குவாலிபையர் 1 போட்டியில் விளையாடவில்லை.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இறுதிப்போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    • 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • மும்பை அணிக்கு எதிரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் ஸ்ரேயஸ் 8 சிக்சர்கள் அடித்தார்.
    • நடப்பு ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும்.

    இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர் வீராட்கோலி 614 ரன்னுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 603 ரன்னுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். இருவரும் சாய் சுதர்சனை நெருங்குவது மிகவும் கடினமானது. இதனால் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    மும்பை அணிக்கு எதி ரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் அவர் 8 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் 39 சிக்சர்களுடன் 2-வது இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் உள்ள நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தால் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பார். பஞ்சாப் அணி தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 28 சிக்சர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

    குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பெங்களூரு அணி வீரர் ஹேசல்வுட் 21 விக்கெட் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் இடத்தை பிடிக்க இன்னும் 4 அல்லது 5 விக்கெட் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
    • பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.

    இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    • இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் வெற்றிபெற பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் ஸ்ரேயஸின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    முன்னதாக குவாலிபையர் 2 போட்டியின் வெற்றியை தனது தாய் மற்றும் தங்கையுடன் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
    • இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பில் சால்ட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பில் சால்ட் ஈடுபடவில்லை. ஆதலால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

    குவாலியையார் 1 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்த பில் சால்ட் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றால் அது ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆர்.சி.பி. அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    • கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது.
    • நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வாகை சூடி அமர்க்களப்படுத்திய பெங்களூரு அணியின் வெற்றி ரகசியம் என்னவெனில், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் ஜொலிக்கிறார்கள். அந்த அணியில் இதுவரை 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்று இருப்பதே அதற்கு சான்றாகும்.

    அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த சீசனில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை 8 அரைசதங்களுடன் 614 ரன்கள் குவித்துள்ளார். பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட் (21 விக்கெட்), குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் பலம் சேர்க்கிறார்கள்.

    பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியதுடன் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. மேலும் அந்த அணி இந்த சீசனில் 8-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது.

    கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை தனது நேர்த்தியான திட்டமிடுதல் மற்றும் அணுகுமுறையால் பஞ்சாப் அணியை கோப்பையின் பக்கம் வரை அழைத்து சென்று விட்டார். அவர் இன்னும் ஒரு தடையை வெற்றிகரமாக கடந்தால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.

    பஞ்சாப் அணியின் பிரதான பலமே இந்திய வீரர்கள் என்றால் மிகையாகாது. சர்வதேச போட்டியில் விளையாடாத 6 வீரர்களை (பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், விஜயகுமார் வைஷாக்) ஆடுல் லெவனில் கொண்டுள்ள அந்த அணி அவர்களின் அபாரமான ஆட்டத்தால் வீறுநடை போடுகிறது.

    பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (39 சிக்சருடன் 603 ரன்), பிரப்சிம்ரன் சிங் (523), பிரியான்ஷ் ஆர்யா (451), நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ்சும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், விஜய்குமார் வைஷாக், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஹர்பிரீத் பிரார்.

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன் அல்லது டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
    • இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும்.

    அகமதாபாத்:

    10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

    நாளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    ×