என் மலர்
ஐ.பி.எல்.(IPL)
- புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து பெங்களூரு அணி அசத்தியுள்ளது.
- பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது.
பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது.
- குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது.
புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த குஜராத், 4 ஆம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.
குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
முல்லான்பூரில் நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1ல் தோல்வி அடையும் அணியுடன் ஜூன் 1 ஆம் தேதி விளையாடும்
- ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- திக்வேஸ் ரதி, ஜித்தேஷ் சர்மாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் 16 ஆவது ஓவரை வீசிய திக்வேஸ் ரதி ஜித்தேஷ் சர்மாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த விக்கெட்டை வேண்டாம் என்று பெருந்தன்மையாக மறுத்து விடுவார். இதனையடுத்து ரிஷப் பண்ட்-ஐ ஜித்தேஷ் கட்டியணைத்து நன்றி கூறுவார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பண்ட் சதம் விளாசினார்.
- தான் சதம் அடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்துக் கொண்டாடினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர்.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தது.
- பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றன.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் வரும் வியாழக்கிழமை மோதுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்த குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்னும், மயங்க் அகர்வால் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- 29 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
- மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிட்செல் மார்ஷ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரிஷப் பண்ட் 29 பந்திலும், மிட்செல் மார்ஷ் 31 பந்திலும் அரைசதம் அடித்தனர். லக்னோ அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
16ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசிய மிட்செல் மார்ஷ் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரி 4 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அப்போது லக்னோ 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் லக்னோ 7 ரன்கள் அடித்தது. இதனால் 191 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 54 பந்தில் சதம் விளாசினார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த நிலையில் சதம் விளாசியுள்ளார். இந்த ஓவரில் லக்னோ அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 201 ரன்கள் சேர்த்தது.
19ஆவது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க லக்னோ 227 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 61 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-க்கு முன்னேறும்.
- தோல்வியடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி குவாலிபையர்-1க்கு முன்னேறும். லக்னோ ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், பிரீட்ஸ்கே, ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஹிமாத் சிங், ஷபாஷ் அகமது, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில்லியம் ஓ'ரூர்கே.
ஆர்சிபி அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணால் பாண்ட்யா, புவி, யாஷ் தயால், நுவான் துஷாரா.
- மூத்த வீரருக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் கொடுக்கப்படும்.
- ஷ்ரேயாஸ், பாண்டிங் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில்
பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது.
இந்நிலையில். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் அதிரடி வீரர் ஷஷாங் சிங் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஐ.பி.எல் தொடரில் நாங்கள் சேர்ந்த முதல் நாளில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் எங்கள் மொத்த அணிக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அதாவது இந்த அணியின் மூத்த வீரர் சாஹலுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் எல்லோருக்கும் சமமாக கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.
அவர்கள் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் பஸ் டிரைவர் முதல் அணியின் சீனியர் வீரர் வரை ஒரே மரியாதையை இதுவரையில் கொடுத்து இருக்கிறார்கள். பாண்டிங் எங்கள் அணியின் கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறார்.
அவர் எங்களின் மனநிலை மற்றும் நம்பிக்கைகளை மாற்றியிருக்கிறார். எனவே, இந்த விஷயத்திற்கு அனைத்து பெருமையும் அவருக்கே போய் சேர வேண்டும். ஏனென்றால் வெளிப்படையாக விளையாட்டுப் பற்றிய எங்களது பார்வையை மாற்றியவர் அவர்தான்.
நான் கலாச்சாரம் என்று சொல்வது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அக்கறை காட்டிக் கொள்ளுதல், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துதல் போன்றவை. இதுவெல்லாம் சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் ஆனால் செய்வதற்கு மிகவும் கடினமானது. இதைத்தான் எங்கள் அணியில் ரிக்கி பாண்டிங் வளர்த்து எடுத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திக்வேஷ் ரதிக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது.
- இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பேட்டிங், மற்றும் பந்து வீச்சு மூலம் மற்றும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமாகினர். அந்த வகையில் லக்னோ அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து அந்த கொண்டாட்டத்தினால் பலமுறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைசியாக ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட் எடுத்து அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், போட்டி நடக்கும் போதெல்லாம், நான் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்று எல்லா பெயர்களையும் எழுதுவேன் என்று ரதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் கைகுலுக்கி கொள்ளாமல் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை.
இரண்டு முறை ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி வரும் ஹர்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உள்ளது.
இருவரும் முன்னரே கைகுலுக்கி கொண்டிருக்கலாம். அதனால் மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கி சென்றிருக்கலாம். ஆனாலும் இந்த வீடியோவை வைத்து மும்பை மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இங்கிலீஸ் மட்டுமே இடம் மாறி மாறி விளையாடினார்.
- ரிக்கி பாண்டிங்கும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம்.
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்சை வீழ்த்திய பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீரரும் சரியான நேரத்தில் முன்னேறினர். முதல் போட்டியில் இருந்தே எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம். பயிற்சியாளர்கள் குழு மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்கள்.
ரிக்கி பாண்டிங் வீரர்களை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நம்பிக்கை பெறுவதும் முக்கியம். தொடக்க வெற்றிகளால் அது நடந்தது. பிரியான்ஷ் தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது. இளம் வீரர்கள் பயமற்றவர்கள்.
இங்கிலீஸ் மட்டுமே அவரது இடம் மாறி மாறி விளையாடினார். அவர் புதிய பந்தை விளையாடுவதை விரும்புவதால், அவரை அதிக பந்துகள் விளையாட வைக்க விரும்பினேன். அது அற்புதமாக வேலை செய்தது. ரிக்கி பாண்டிங்கும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






