என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார்.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியில் வழக்கமான வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

    இதன் காரணமாக நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், பென் சீயர்ஸ் மற்று, ஃபின் ஆலன் ஆகியோருக்கு இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து டி20 அணி:

    மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன்.
    • அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கடைசியாக இடம் பிடித்தவர் வருண் சக்கரவர்த்தி.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்துடன் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தை வருண் ஈர்த்தார். இதனையடுத்து ஒருநாள் தொடரில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

    அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். ஆனால் லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கடினம் என பேசப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை நாக் அவுட் போட்டிகளில் களமிறங்கி அசத்தினார்.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பு குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன். அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர். பின் ஒருநாள் தொடர் முடிந்து வீட்டிற்கு கிளம்பலாம் என இருந்தபோது சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாட துபாய் செல்ல போகிறோம் என்றனர். இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இவ்வாறு வருண் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
    • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை வென்றது வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கோப்பையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பு முடிந்த பின்னர் அங்கிருந்து கிளம்பிய ரோகித், சாம்பியன்ஸ் கோப்பையை மறந்து விட்டு சென்றார். இதனை கவனித்த அதிகாரி ஒருவர் கோப்பையை எடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கொடுப்பதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு வெள்ளை நிற கோட் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களாக அந்த கோட்டை வாங்கினர். அப்போது கேஎல் ராகுல் மறந்துபோய் பேட்டிங் பேட்களுடன் அதை வாங்க சென்றார். இதனை பார்த்த இந்திய அணி வீரர்கள் ராகுலை பார்த்து சிரித்தனர். உடனே சுதாரித்து கொண்ட கேஎல் ராகுல் பேட்களை கழற்றினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



     


    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
    • மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.

    இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சில பாதிகளை தவரவிட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகுல் மனைவிக்கு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க விரும்பும் லோகேஷ் ராகுல் ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

    இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

    அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளது. மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நேற்றிரவு இந்தியா வந்தடைந்தது. தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளனர். வருகிற 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் வருண் மற்றும் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுகின்றனர்.

    அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த தொடருக்காக வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணியுடன் இருவரும் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    • மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத் அணிக்கு வலு சேர்த்தனர்.
    • மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.

    இறுதியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. அமன்ஜோத் கவுர் 27 ரன்களிலும், சஜீவன் சஜனா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.

    • துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையவில்லை.
    • ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது. ஒரு மைதானத்தில் தோல்வியடையாமல் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளது.

    அதன்படி துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாமல், 10 முறை வெற்றி பெற்று, ஒரு முடிவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன் நியூசிலாந்து அணி டுனெடினில் விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் வெற்றியைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்திய அணி அதனை சமன்செய்துள்ளது.

    ஒரு மைதானத்தில் தோற்காமல் அதிக வெற்றிகள் பெற்ற விவரங்கள்:-

    10 - இந்தியா, துபாய் (11 போட்டிகள், 1 முடிவில்லை)

    10 - நியூசிலாந்து, டுனெடின்

    7 - இந்தியா, இந்தூர்

    7 - பாகிஸ்தான், ஹைதராபாத் (பாகிஸ்தான்)

    இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 99 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அதில் 73 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே வீசப்பட்டன. இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.

    முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் 65.1 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    • பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சான்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

    ஐ.சி.சி.-தேர்வு செய்த அணி விவரம்:

    ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்டர் (கேப்டன்), முகமது சமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி.

    12-வது வீரர்: அக்சர் படேல்

    • இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
    • இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகி

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று மோதினர். இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.

    இந்நிலையில்

    இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது எங்களது இலக்காக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

    இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்கள். கடந்த கால ஐசிசி தொடர்களின் முக்கியமான போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்த தொடர்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.

    இளம் வீரர்களுடன் விளையாடியது புது அனுபவமாக இருந்தது. அவர்கள் உடன் விளையாடி எனது அனுபவத்தை அதிகரித்து கொள்ள விரும்புகிறேன். இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகிறது.

    நான்கு ஐசிசி பட்டங்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடி இதைச் சாதித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நான் கருதுகிறேன்

    இவ்வாறு விராட் கோலி கூறினார்.

    • ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    18-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ந் தேதி முடிகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறியதாவது:-

    இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார்.
    • ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தொடருடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார். அதனையடுத்து அந்த போட்டியுடன் அஸ்வின் ஓய்வு அறிவித்து விடுவார். அதுபோல ஜடேஜாவையும் கட்டியணையத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

     

    இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.

    ×