என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு போட்டிச் சம்பளத்தில் முப்பது சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், பாகிஸ்தானி ஹரிஸ் ராஃப் விக்கெட்டை போல்டாக்கிய பும்ரா, அதன்பிறகு விமானம் மேலிருந்து கீழே விழுந்து நொறுங்குவதைப் போல சைகை செய்தார்.
ஹரிஸ் ராஃப் செய்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா அதே சைகையை செய்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல அவுட்டானது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹான் 57 ரன்னில் அவுட்டானார். பகர் சமான் 47 ரன்னில் வெளியேறினார்.
ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஆசியகோப்பை தொடர் இறுதிப்போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார்.
- சூப்பர்-4 சுற்று போட்டி யின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண் பித்தனர்.
- சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்க ளில் சர்ச்கைகள் எழுந்தது. லீக் போட்டியின்போது ஆட்டம் முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் புகார் செய்தது.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) புகார் செய்தது.
சூப்பர்-4 சுற்று போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண்பித்தனர்.
இதுதொடர்பாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது. இப்புகார் களை விசாரித்த ஐ.சி.சி, சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது. பர்ஹானுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இந்த சர்ச்கைகளுக்கு மத்தியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கோப்பை புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.
இறுதிப் போட்டிக்கு முன் அதில் மோதும் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்ப டத்துக்கு போஸ் கொடுப் பார்கள். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.
இதனால் கோப்பை புகைப்பட நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்திய அணி நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
- பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.
போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
- 2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.
அவர் 58 பந்தில் 107 ரன்கள் குவித்தார். குசால் பெரேரா 32 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஷனகா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி "டை"யில் முடிவடைந்தது.
இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 2 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.
2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
- பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உடன் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இருப்பதால், அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இலங்கைக்கு எதிராக 4 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாலும், சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசினார். இவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் டி20-யில் அர்ஷ்தீப் சிங்தான பிரீமியர் பவுலர் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.
இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- இந்தியா 202 ரன்கள் குவித்தது.
- நிஷாங்கா 107 ரன்கள் விளாசியதால் போட்டி "டை"யில் முடிந்தது.
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் பதுன் நிஷாங்காவின் சதத்தால் (107) இலங்கை இமாலய இலக்கை நெருங்கியது. சரியாக 202 ரன்கள் அடித்ததால், போட்டி "டை" யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஷனகா பேட்டிங் பிடித்தார். துல்லியமாக ஆஃப்சைடு யார்க்கராக வீசப்பட்ட ஷனாகா அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டிங் பட்டது போன்று சத்தம் கேட்டதால் நடுவர் அவுட் கொடுத்துவிடுவார்.
அதேவேளையில் ஷனகா ரன் எடுக்க ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சரியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுவார். இதனால் ரன்அவுட்டுக்கு அப்பீல் கேட்பார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கமாட்டார்.
ஐசிசி விதிப்படி அம்பயர் அவுட் என கையை உயர்த்திவிட்டால், வீசப்பட்ட பந்து அத்துடன் Dead ஆகிவிடும். அதன்பின் எந்தவிதமான செயல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதுபோன்றுதான் நடுவர் அவுட் கொடுத்த பிறகு, ரன்அவுட் செய்ததால் அவுட் கொடுக்கப்படவில்லை.
ஷனாகா உடனடியாக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வார். ரீபிளேயில் பந்து பேட்டில் படாமல் செல்லும். இதனால் நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டு, ஷனாகா பேட்டிங் செய்தார்.
இலங்கை சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுத்தது. இந்தியா அதை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
- பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் வீராட் கோலியை முந்தி பதும் நிசங்கா புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 429 ரன்கள் குவித்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. தற்போது பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அபிஷேக் ஷர்மா 6 போட்டிகளில் விளையாடி 309 ரன்கள் குவித்து இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
- ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






