என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா ஏமாற்றம் அடைந்தார்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் வெற்றி பெற்றார்.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-11 என நேர்செட் கேமில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹான் யூயே-வை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் காலிறுதிக்கு முன்னேறினார். 84-வது தரவரிசையில் உள்ள இவர் 54-வது தரவரிசையில் இருக்கும் மேட்ஸ் கிறிஸ்டன்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
    • ரிக்கி பாண்டிங் அல்லது பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. சில முன்னாள் வீரர்கள் அவரை வலியுறுத்திய போதிலும் மறுத்து விட்டார்.

    விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இல்லாதபோது பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இதனால் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

    • இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை.
    • எந்த விஷயத்தையும் எட்ட முடியாமல் விட்டுவிட்டு, அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 35 வயதான இவர் தற்போதும் முழு உத்வேகத்துடன் 100 சதவீதம் பங்களிப்பை அணிக்காக கொடுத்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். இதனால் டி20 அணியில் சேர்க்கப்பட்டார்.

    டி20 கிரிக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆனால் விராட் கோலி ஒருபோதும் ஓய்வு தொடர்பாக பேசியது கிடையாது. இந்திய அணிக்காக தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    ஒரு விளையாட்டு வீரராக எங்களுடைய விளையாட்டு வாழ்க்கையும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் நான் சற்று பின்னோக்கி செல்கிறேன். இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், என்னால் எப்போது தொடர்ந்து செல்ல முடியாது.

    எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன். ஒருமுறை எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன்பின் நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதம், 30 அரைசதங்களுடன் 8848 ரன்கள் குவித்துள்ளார். 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சதம், 72 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ளார். 117 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4037 ரன்கள் அடித்துள்ளார்.

    • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
    • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.

    கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவின் கீழ் 'சகோதரரே உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.

    "உங்களின் கால்பந்து வாழ்க்கை அற்புதமானது. சந்தோசமாக ஓய்வை கொண்டாடுங்கள் லெஜெண்ட்" என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் சுனில் சேத்ரியின் இந்த வீடியோவை பிசிசிஐ மற்றும் பல்வேறு ஐபிஎல் அணிகள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்குமார் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
    • சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 66-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்தை வீழ்த்தி 8-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 3-வது அணியாக ஐதராபாத் இன்று தகுதி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்குமார் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    • பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்து ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4- வது தோல்வியை தழுவியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 145 ரன் என்ற எளிதான இலக்கு இருந்தது.

    ரியான் பராக் 34 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி ) , அஸ்வின் 19 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் சாம் கரண் 41 பந்தில் 63 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவேஷ் கான், சாஹல் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ச்சியாக 4- வது தோல்வியை தழுவியது. ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்ற அந்த அணி மொத்தத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் தொடர்ந்து 2- வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 4 போட்டியில் தோற்றதால் பேட்ஸ்மேன் களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சாடியுள்ளார்.இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 144 ரன்கள் போதுமானது கிடையாது. நாங்கள் 160 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

    கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.

    நாங்கள் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும்.

    இதை செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும் . ஆனாலும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் போராட வேண்டும்

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் இந்த அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் ஸ்வரேவ் மோத உள்ளார்.

    • பஞ்சாப் அணியில் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் அசுதோஷ் சர்மா - சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    ×