என் மலர்
நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன் டென்னிஸ்"
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலியின் ஜானிக் சின்னர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
- மூன்று மாத தடையை ஜானிக் சின்னர் ஏற்றுக் கொண்டார்.
ரோம்:
இத்தாலி டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் (23), ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பை வென்றார்.
நம்பர் 1 வீரரான இவரிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட மருந்து உடலில் கலந்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சின்னரின் விளக்கத்தை சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி ஏற்றுக்கொண்டது.
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.) ஒரு ஆண்டு தடை விதிக்க கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அடுத்து நடந்த சமரச முயற்சியில், சின்னர் 3 மாத தடையை ஏற்றுக்கொண்டார். ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ரோமில் தொடங்கும் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர் மீண்டும் களமிறங்குகிறார். முதல் சுற்றில் இவருக்கு 'பை' வழங்கப்பட்டது. நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளார். இதற்கான பயிற்சியை சின்னர் தொடங்கினார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வாண்ட்ரூசோவாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசிய வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதினார். இதில் படோசா
6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடர்மெடோவா, உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கலினினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை குடர்மெடோவா 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கலினினா 6-2 என கைப்பற்றினார்.
இறுதியில், கலினினா 7-5, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா, லாத்வியாவைச் சேர்ந்த ஆஸ்டா பென்கோவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தொடரில் எலீனா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரிபாகினா எளிதில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரிபாகினா முன்னிலை பெற்றிருந்தபோது கலினினாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
கலினினா போட்டியில் இருந்து வெளியேறியதால் ரிபாகினா இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
- மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கெர்பரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் மேடிசன் கீஸ் உடன் மோத உள்ளார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 4-6, 6-1, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.
- களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் ஸ்வரேவ் மோத உள்ளார்.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று அதிகாலை நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சபலென்கா மோதுகின்றனர்.
- களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
- பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அவர் 2வது செட்டை 5-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இறுதியில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.






