search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரிபாகினா
    X

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரிபாகினா

    • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இந்தத் தொடரில் எலீனா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரிபாகினா எளிதில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரிபாகினா முன்னிலை பெற்றிருந்தபோது கலினினாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    கலினினா போட்டியில் இருந்து வெளியேறியதால் ரிபாகினா இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    Next Story
    ×