search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா ஏமாற்றம் அடைந்தார்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் வெற்றி பெற்றார்.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-11 என நேர்செட் கேமில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹான் யூயே-வை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் காலிறுதிக்கு முன்னேறினார். 84-வது தரவரிசையில் உள்ள இவர் 54-வது தரவரிசையில் இருக்கும் மேட்ஸ் கிறிஸ்டன்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.

    Next Story
    ×