என் மலர்
விளையாட்டு
- முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
- நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.
இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.
- ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
லாகூர்:
"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.
கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது.
ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.
தொடக்க ஆட்டம், அரைஇறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப்போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரைஇறுதி உள்பட 5 போட்டிகள், ராவல் பிண்டியிலும் நடத்த முடிவு செய்துள்ளது.
1996 உலக கோப்பைக்கு பிறகு முதல் ஐ.சி.சி. போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதால் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது.
இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை லாகூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
புளோரிடா:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்லில் 23-வது 'லீக்' ஆட்டம் இன்று நடை பெற இருந்தது. இதில் 'டி' பிரிவில் உள்ள இலங்கை-நேபாளம் அணிகள் மோத வேண்டியது.
ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2-வது போட்டி இதுவாகும். ஏற்கனவே 'பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஸ்காட் லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தாகி இருந்தது.
இலங்கை-நேபாளம் இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
வெற்றிபெற வேண்டிய ஆட்டம் மழையால் ரத்தானதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளி யேற்றப்படும் நிலையில் இருக்கிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்று இருந்தது.
1 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 17-ந் தேதி மோதுகிறது.
ஒரு புள்ளியுடன் உள்ள நேபாளம் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் வங்காள தேசம், நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.
- கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.
- சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நமீபியா வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்டு எர்சாமஸ் மட்டும் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டொயினிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
73 எனும் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 8 பந்துகளில் 20 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களை அடித்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 74 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியா சார்பில் டேவிட் வெய்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
- விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.
- போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையை பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிபா உலக கோப்பை-2026, ஆசிய கோப்பை-2027க்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை நேற்று எதிர்கொண்டது.
இந்த போட்டியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டியின் 73-வது நிமிடத்தில் கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. மேலும் இப்போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையை பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
- தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. முதலில் நடைபெறும் லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும். 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.
அந்த வகையில், இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்று போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கிய முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகளின் முடிவுகள் அமைகின்றன.

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 194 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 197 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணி 194 ரன்களை குவித்ததும், அமெரிக்கா அணி வெறும் 17.4 ஓவர்களில் 197 ரன்களை விளாசி வெற்றி பெற்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே தொடரின் 2-வது போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களில் பப்புவா நியூ கினியாவை சுருட்டியது. எனினும், இரண்டாம் பாதியில் 137 துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை 18 ஓவரின் கடைசி பந்தில் தான் எட்டியது. மேலும், எளிய வெற்றி இலக்கை துரத்துவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.

ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஓமன் 109 ரன்களை அடித்தது. 110 ரன்களை துரத்திய நமீபியா அணியும் 20 ஓவர்களில் 109 ரன்களை அடிக்க சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதலவாது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை விளாசியது. 22 ரன்களை துரத்திய ஓமன் அணி 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் நமீபியா அபார வெற்றி பெற்றது.
அடுத்ததாக இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய தொடரின் 4-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 77 ரன்களில் ஆட்டமிழந்தது. 78 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. குறைந்த ரன்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி கடைசி வரை நீடித்தது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டியின் போது கொண்டுவரப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்தது. 160 ரன்களை துரத்திய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 159 ரன்களை அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.
இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது. 19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரின் 16 ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. 104 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்கா அணி போராடி வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் போராடி வென்றது வியப்பை ஏற்படுத்தியது.
டி20 தொடர் என்றாலே சுவாரஸ்யத்திற்கு குறையில்லை என்ற வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரும் அதற்கு உதாரணமாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் அணிகள் தடுமாறுவதும், சிறிய அணிகளாக பார்க்கப்படும் அணிகள் அபாரமாக விளையாடி வருவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.
- நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பையில் நேற்றிரவு நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கனடா அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின.
அந்த அணியின் துவக்க வீரர் நவ்நீத் தலிவால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரஜத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மற்றொரு துவக்க வீரரான ஆரோன் ஜான்சன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் கனடா அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்தது. 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்தது.
பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவருடன் களமிறங்கிய சைம் ஆயுப் 6 ரன்களிலும் அடுத்து வந்த ஃபகர் ஜமான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் 33 ரன்களை சேர்த்தார்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்களை சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் - நவ்நீத் தலிவால் களமிறங்கினர். நவ்நீத் தலிவால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 2 , நிக்கோலஸ் கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0, சாத் பின் ஜாபர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஜான்சன் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.
திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம்.
- இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
தோகா:
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் 2026ல் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (13) உள்ளது. கடைசி இரு இடத்தில் ஆப்கானிஸ்தான் (5) குவைத் (4) உள்ளன.
இந்திய அணி, தனது கடைசி போட்டியில் கத்தார் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை 'டிரா' அல்லது தோல்வியடைந்தால், குவைத்-ஆப்கானிஸ்தான் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்த சுனில் சேத்ரி அண்மையில் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அண்யின் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் (32 வயது) இதுவரை இந்தியாவுக்காக 72 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
- அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடையந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். மேலும் ரன்ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.






