என் மலர்
விளையாட்டு
- கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
கயானா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
- மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
கயானா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, இங்கிலாந்து வீராங்கனை கேடி போல்டருடன் மோதினார்.
இதில் பவுலினி 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
- தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கயானா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், கயானாவில் இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.
ஆனால் கயானாவில் மழை பெய்து வருவதால் மைதானத்தைச் சுற்றி ஈரப்பதம் காணப்படுகிறது. இதையடுத்து, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஜஸ்பிரித் பும்ரா எனது காலத்தில் இருந்ததைவிட 1000 மடங்கு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா, இதுவரை வீசிய 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
"என்னை விட பும்ரா 1000 மடங்கு சிறந்தவர். தற்போது இளம் பையன்கள் எங்களை விட மிகவும் சிறந்தவர்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. அவர்கள் சிறந்தவர்கள்" என்று கபில் பிரபல செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா, இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கு குறைவாகவே விட்டுக்கொடுத்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 68 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

434 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையுடன் ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றியைப் பெற்றார். அவரது 253 விக்கெட்டுகளைப் பெற்றார்.
1983-ல் இந்தியாவை முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற 65 வயதான கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.
தற்போதைய இந்திய அணியினரை "அவர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் உடற்தகுதி உடையவர்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அற்புதமானவர்கள்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
- வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
- மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்
ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :
மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.
ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.
ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.
தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.
கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.
இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.
வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெர்லின் ஓபன் சாம்பியனான பெகுலா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை சந்தித்தார்.
இதில் எம்மா ரானுகாடு 4-6, 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜெசிகா பெகுலா சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றது.
- முதல் அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டினார்.
டிரினிடாட்:
டிரினிடாட் நகரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.
மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், இந்த போட்டி டிரினிடாடில் நடந்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி டிரினிடாட் நகரில் நடந்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. அதன்பின் அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும், புதிய மைதானத்தில் பழகவோ நேரம் இல்லை என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால், கயானாவில் 2வது அரையிறுதி நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?.
- விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி இன்று இரவு நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஒரு அணியாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:-
ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?. விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.
ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றால், ஒரு நபர் நட்சத்திரமாக ஜொலித்தால் போதும். அவரால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் தொடரை வெல்ல வேண்டுமென்றால் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் பும்ரா அல்லது அர்ஷ்தீப் போன்றோரை சார்ந்து சென்றீர்கள் என்றால், அதன்பின் நீங்கள் தோல்வியை நோக்கி செல்கிறீர்கள்.
நாம் அணியை பற்றி பேசுவோம். இது தனி நபரை விட சிறந்த கண்ணோட்டத்தை கொடுக்கும். முக்கிய வீரர் இருப்பார். நாம் அவரைச் சுற்றி வரலாம். ஆனால், உலகக் கோப்பையை வெல்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
1983 உலகக் கோப்பையை வென்றபோது ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், யாஸ்பால் சர்மா உள்ளிட்ட அனைவரும் மேட்ச் வின்னிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினர். ஒரு வீரரை சார்ந்து இருக்க தொடங்கினால், கோப்பையை கைப்பற்ற செல்லவில்லை என்று அர்த்தம்.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
- முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
- இன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
கயானா:
டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று இரவு கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைபட்டு ரத்தானால் புள்ளிப்பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்
இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதலாக 250 நிமிடம் (4 மணி நேரம், 10 நிமிடம்) தரப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 10 ஓவர் விளையாடி இருந்தால் போட்டி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுகிறது.
- இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.
கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது.
இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது.
ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தால் ரூ.2 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலப்பதக்கம் பெற்றால் ரூ.75 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.
- இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
- இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.
இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார்.






