என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து சாகிப் அல் ஹசன் ஓய்வு அறிவித்துவிட்டார்.
    • இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 -0 (2) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    அத்தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் துவங்குகிறது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தங்கள் அணியின் ஜாம்பவான் சாகிப் அல் ஹசனை வங்கதேச அணி மிஸ் செய்யும் என்று அந்நாட்டின் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 என்பது ரன்களை பொறுத்ததாகும். அதில் ஒவ்வொரு அணியும் பெரிய ரன்கள் குவிக்க விரும்புவார்கள். இந்த மைதானத்தில் நீண்ட காலமாக எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இது புதிய மைதானம். எனவே இங்குள்ள சூழ்நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பயிற்சி ஆடுகளத்தை பார்க்கும் போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிகிறது.

    இது போன்ற சூழ்நிலையில் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் இருக்கும். ஆனால் அதைப்பற்றி சிந்தித்தால் சிறப்பாக செயல்பட முடியாது. எப்படி அசத்த முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஷாகிப் பாய் இல்லை. அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் அனைவரும் ஒருநாள் சென்றாக வேண்டும். இருப்பினும் அவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறோம்.

    எனக் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறினார். 

    • இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக சாம்சன் களமிறங்க உள்ளார்.

    குவாலியர்:

    இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது. வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீமந்த் மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-அமெரிக்காவின் மேடக் சாண்ட்ஸ், சோபியா கெனின் ஜோடியுடன் மோதியது.

    இதில் இத்தாலி ஜோடி 6-3, 1-6, 10-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி, தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடி உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    • இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

    கராச்சி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

    இந்தத் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.

    இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன.

    இதற்கிடையே, பாகிஸ்தான் சென்றடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை.

    காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

    அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ஜாக் கிராலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இங்கிலாந்து 118 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணியை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் எடுத்தார் .

    119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர். சோபனா மோஸ்ட்ரே மட்டும் 44 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் மோதினார்.

    இதில் முச்சோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முச்சோவா, கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    • முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி இன்று பலமான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று சார்ஜாவில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் அடித்தது.

    பின்னர் 94 ரன்கள் என்ற இலக்கோடு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 14.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

    தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புள்ளிபட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி 2-ம் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடமும் தோல்வி அடைந்து புல்லிபட்டியலில் 4ம் இடத்தில உள்ளது.

    முதல் போட்டியில் மோசமான தோவலியை தழுவிய இந்திய அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில உள்ளது.

    • முதல் டி20 போட்டி மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை நடக்கிறது.
    • முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 15 முறை மோதியுள்ளன.
    • பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 3-ந்தேதி தொடங்கிய பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

    ஏ பிரிவு : நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

    பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாள் ஆட்டங்களில் வங்காளதேச அணி 16 ரன்னில் ஸ்காட்லாந்தையும், பாகிஸ்தான் 31 ரன்னில் இலங்கையும் தோற்கடித்தன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமாக தோற்று மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. மாலை 3.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12-ல் பாகிஸ்தான், 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

    பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

    நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டி யில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளதேசம் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    • மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
    • முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான இறுதி போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 5 நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் 114 ரன்களும் பிரித்வி ஷா 76 ரன்களும் அடித்தனர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த முன்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

    • சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுப்மன்கில், பும்ரா உள்ளிட்டவர்களுக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    குவாலியர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்திய அணி கடந்த ஜூலை மாதம் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று சாதித்தது. அதே நிலை இந்த தொடரிலும் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

    சுப்மன்கில், பும்ரா உள்ளிட்டவர்களுக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் மயங் யாதவ் மீது அவர் எதிர்பார்ப்பு உள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேச அணிக்கு 20 ஓவர் தொடரிலாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் மோதுவது இது 15-வது முறையாகும். இதுவரை நடந்த 14 ஆட்டத்தில் இந்தியா 13-ல், வங்காளதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளை போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ்.

    வங்காளதேசம்: நஜூமுல் உசேன் ஷான்டோ (கேப்டன்), ஜாகர் அலி, லிட்டன்தாஸ், பர்வேஷ் உசேன், தன்ஜித் ஹசன், தவ்கீத் ஹிர்தோய், மெகிதி ஹசன், மகமதுல்லா, மிராஸ், முஷ்டாபிசுர் ரகுமான், ரகிபுல் ஹசன், நிஷந்த் உசேன், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம், தக்ஷின் அகமது.

    ×