என் மலர்
விளையாட்டு
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
- இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் 5வது டெஸ்ட்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி தற்போது சிட்னி சென்றடைந்துள்ளது . இன்று மாலை இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா முதல் சுற்றில் வென்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ஜெனாடா சராசுவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை சந்திக்கிறார்.
- ஒரு தோல்வி கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
- இதன் மூலம் வைஷாலி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூ யார்க்கில் நடைபெறும் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். 23 வயதான வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள வைஷாலி, அந்த சுற்றில் ஹூ ஜினர்-ஐ எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். முதலிடத்திற்கு முன்னேறியது பற்றி கூறிய வைஷாலி அதிர்ஷ்டம் கிடைத்ததாக நினைக்கிறேன் என்று கூறினார்.
இது குறித்து பேசும் போது, "உண்மையில் நான் என்னை சிறந்த பிலிட்ஸ் வீராங்கனையாக நினைக்கவில்லை. என்னைவிட மிகவும் கடினமானவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இன்றைய போட்டிகளில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாகவே நினைக்கிறேன், அது அப்படியே நடந்துவிட்டது," என்று தெரிவித்தார்.
- ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
- மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா எந்தப் போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் விளைவாக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதில் மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியோடு, கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை.
- சைகை காண்பித்து வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் தனது கைகளுக்குள் விரலை நுழைப்பது போல் சைகை காண்பித்து வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் முகம் சுழித்ததோடு, ஹெட் ஆபாச சைகை செய்ததாக குற்றம்சாட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. போட்டிக்கு பிறகு டிராவிஸ் ஹெட் சைகை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "அய்யோ, மன்னித்து விடுங்கள். சரி, என்னால் அதற்கு விளக்கம் அளிக்க முடியும். அவரது கைவிரல் மிகவும் சூடாக இருந்தது, இதனால் அவர் அதனை ஐஸ் நிறைந்த கப்-இல் வைக்கிறார். அது சாதார நகைச்சுவை தான்."
"காபாவாக இருந்தாலும், வேறு எங்காவது இருந்தாலும், விக்கெட் வீழ்ந்ததும் அவர் ஐஸ் பக்கெட்டில் தனது கைவிரல்களை வைத்துவிடுவார். அதுபோல் தான், அவர் அது மிகவும் நகைப்பான ஒன்றாக நினைக்கிறார். இது மட்டும் தான், வேறு எதுவும் அதில் இல்லை," என்று தெரிவித்தார்.
- போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
- 22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை, டிச.31-
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பைக் கான 15-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை ஓபன் செஸ் போட்டி ஏ, பி மற்றும் சி என 3 வகை பிரிவுகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 2 ஆயிரத்துக்கு மேல் ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முன்னணி வீரர்கள் ஏ பிரிவில் இடம் பெறு வார்கள். 2 ஆயிரம் ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் பி பிரிவிலும், 1800 ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் சி பிரிவி லும் ஆடுவார்கள்.
ஏ பிரிவினருக்கான போட்டி எழும்பூரில் உள்ள ராம்தா ஓட்டலில் நடை பெறும். 'பி' பிரிவினருக்கும், (2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை) 'சி' பிரிவினருக்கும் (6-8), நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 சர்வதேச மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர் கள் இந்த போட்டியில் பங்கேற்பதை உறுதி செய் துள்ளனர்.
ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ் இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக உள்ளார். ஈரோட்டை சேர்ந்த இனி யன், சித்தார்த் ஜெகதீஷ் (சிங்கப்பூர்), ஷியாம் சுந்தர் (சென்னை) ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் உள்ளனர்.
'ஏ' பிரிவில் 167 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 44 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் கள். கொலம்பியா, பெலா ரஸ், கிர்கிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவர்கள் விளையாடுகிறார் கள்.
10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெறும். மொத்த பரிசு தொகை ரூ.40 லட்சமாகும். 'ஏ' பிரிவில் ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. சாம்பி யன் பட்டம் பெறுபவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.3 லட்சமும் கிடைக்கும்.
சென்னை ஓபன் சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை சக்தி குரூப் நிறுவனத்தின் சேர்ம னும், தமிழ்நாடு செஸ் சங்க தலைவருமான எம்.மாணிக் கம் தொடங்கி வைக்கிறார். பீடே முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர், இந்தியாவின் முதல் சர்வ தேச மாஸ்டர் மானுசெல் ஆரோன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள் கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி தெரி வித்துள்ளார்.
* * *இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் வென்று இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிச்சேல் கேட்ச் பிடிப்பதை படத்தில் காணலாம்.
- ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருமான ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு டாப் கிளாஸ் ஃபார்மில் முடித்துக் கொள்கிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ்-இன் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதோடு, அணியிலும் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடம்பெறவில்லை. இவர்களுக்கு மாற்றாக அலெக்ஸ் கேரி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024 ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியல்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
பென் டக்கெட் (இங்கிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
ஹேரி புரூக் (இங்கிலாந்து)
கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பர் (ஆஸ்திரேலியா)
மேட் ஹென்ரி (நியூசிலாந்து)
ஜஸ்பிரித் பும்ரா - கேப்டன் (இந்தியா)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)
கேஷவ் மகாராஜ் (தென் ஆப்பிரிக்கா)
- தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
- வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.
சென்னை:
9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்கள் தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வரை ரூ.12 லட்சத்துக்கும், பாபா அபராஜித்தை ரூ. 8 லட்சத்துக்கும், என்.ஜெகதீசனை ரூ.6 லட்சத்துக்கும், லோகேஷ் ராஜ், சிலம்பரசன் ஆகியோரை தலா ரூ.2.4 லட்சத்துக்கும் தக்கவைத்துள்ளது. 5 வீரர்களை மொத்தம் ரூ.30.8 லட்சத்துக்கு தக்க வைத்துள்ளது.
நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (ரூ.16 லட்சம்), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 லட்சம்), சந்தீப் வாரியர் (ரூ.8 லட்சம்), பாபா இந்திரஜித் (ரூ.6 லட்சம்), ஷிவம் சிங் (ரூ.2.4 லட்சம் ) ஆகியோரை தக்க வைத்துள்ளது.
திருச்சி கிராண்ட்சோழாஸ் அணியில் சஞ்சய் யாதவ் (ரூ.6 லட்சம்), ஜாபர் ஜமால் (ரூ.2.4 லட்சம்), ராஜ்குமார் (ரூ.2.4 லட்சம்), வாசீம் அகமது (ரூ.2.4 லட்சம்), அதிசயராஜ் டேவிட்சன் (ரூ.2.4 லட்சம்), திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சாய் கிஷோர் (ரூ.16 லட்சம்), டி.நடராஜன் (ரூ.12 லட்சம்), துஷர் ரஹேஜா (ரூ.8 லட்சம்), முகமது அலி (ரூ.6 லட்சம்), அமித் சாத்விக் (ரூ.2.4 லட்சம்), கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான் (ரூ.16 லட்சம்), சாய் சுதர்சன் (ரூ.12 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.8 லட்சம்), சச்சின் (ரூ.6 லட்சம்), ஜதாவேத் சுப்ரமணியன் (ரூ.2.4 லட்சம்).
நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சோனு யாதவ் (ரூ.16 லட்சம்), அருண் கார்த்திக் (ரூ.12 லட்சம்), அஜிதேஷ் (ரூ.8 லட்சம்), ரித்திக் ஈஸ்வரன் (ரூ. 6 லட்சம்), ஹரிஷ் (ரூ.2.4 லட்சம்), மதுரை பாந்தர்ஸ் அணியில் முருகன் அஸ்வின் (ரூ.8 லட்சம்), குர்ஜப்னீத் சிங் (ரூ. 6 லட்சம்), சரவணன் (ரூ.2.4 லட்சம்), சதுர்வேத் (ரூ.2.4 லட்சம்), சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் அபிஷேக் (ரூ.2.4 லட்சம்), சன்னி சந்து (ரூ.2.4 லட்சம்), விவேக் (ரூ.2.4 லட்சம்), ஹரிஷ்குமார் (ரூ.2.4 லட்சம்), பொய்யாமொழி (ரூ.2.4 லட்சம்) ஆகியோர் நீடிக்கிறார்கள்.
8 அணிகளிலும் 39 வீரர் கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், மாநில அணிக்காக விஜய் ஹசாரே, ரஞ்சி, முஷ்டாக் அலி போன்ற போட்டிகளிலும் விளையாடிய வீரர்களுக்கு தக்கவைப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய எந்த போட்டிகளிலும் ஆடாதவர்கள் உள்ளூர் வீரர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ரூ.2.4 லட்சம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் டி.என்.பி.எல்.-ல் புதிதாக விளையாட விரும்பும் வீரர்கள் தங்களது பெயரை ஜனவரி 30-ந்தேதிக்குள் www.tnca.cricket மற்றும் www.tnpl.cricket ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.80 லட்சம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்துள்ள வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள தொகையை வைத்து தான் எஞ்சிய வீரர்களை எடுக்க முடியும்.
- ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
- ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 52.78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 61.46 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முன்னேறும் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் ஒரே போட்டி தான் மீதம் உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அந்த வகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணியின் புள்ளிகள் 57.02 ஆக மாறும். இந்த புள்ளிகளை வைத்தே ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். இப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவும் பட்சத்தில் அந்த அணி இலங்கையை ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.
இந்திய அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்ற வேண்டும். இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். அல்லது ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளும் டிரா ஆகும் போது ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். இதைவிட நிலைமை மோசமானால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
ஒருவேளை இரு அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் சமமாக இருந்தால், சீரிஸ் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும். எதுவாயினும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.
- டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார்.
- அப்போது டிராவிஸ் ஹெட் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல போர்னில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலை யில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியை டிராவிஸ் ஹெட் பிரித்தார். அவரது பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழந்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் முகம் சுழிக்கும்படி ஹெட் ஆபாச சைகை செய்ததாக குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது கொண்டாடிய ஸ்டைலில் தான் இப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தவறான சைகையை ஹெட் காண்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. 3 பேட்ஸ்மேன்கள் சதம்.
- ஆப்கானிஸ்தான் 699 ரன்கள் குவித்தது. 2 பேர் இரட்டை சதம், ஒரு பேட்ஸ்மேன் சதம்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் (154), கிரேக் எர்வின் (104), பிரியன் பென்னெட் (110 அவுட் இல்லை) ஆகியோர் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 699 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா (234), ஹஸ்மதுல்லா ஷாஹிதி (246) இரட்டை சதமும், அஃப்சர் ஜஜாய் (113) சதமும் விளாசினார்.
113 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று கடைசி நாளில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
2-வது மற்றும் 3-வது நாட்கள் ஆட்டத்தின்போது அவ்வப்போ மழை குறுக்கீடு செய்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இல்லை என்றால் ஒருவேளை போட்டியில் முடிவு கிடைத்திருக்கலாம்.

இந்த ஆண்டு டிராவில் முடிவடைந்த 3-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியிலும் அவ்வப்போது மழை குறுக்கீடு செய்தது.
ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியிலும் மழை குறுக்கீடு ஏற்பட்டது. ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெற்று எந்த போட்டியும் டிராவில் முடியவில்லை.
- அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்தார்.
- மற்ற போட்டியில் 5-0 என எதிரிகளை சுலபமாக வீழ்த்தினார்.
33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் 66 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் பெண்ணா? ஆணா? என்ற பாலினம் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்தது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலினா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் இமானே கெலிஃப் விட்ட பஞ்ச்-ல் இத்தாலி வீராங்கனையில் மூக்கு உடைந்தது. இதனால் நிலைகுலைந்து ஆட்டத்தின் 16 நிமிடத்திலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இது பெண்கள் அடிக்கும் அடியல்ல. ஆண் அடிப்பது போல் இருந்தது என இத்தாலி வீராங்கனை கரினி குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் போட்டியில் சமநிலை இருக்க வேண்டும். ஒரு ஆணுடன் விளையாட வைப்பது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.
கெரினியின் குற்றச்சாட்டு ஆதரவு அதிகமானது. இத்தாலி பிரதமர் மெலானி கெரினிக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார். என்றாலும் பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கான அவரது விசாவில் பெண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது உள்ளிட்ட சில ஆதாரங்களை காட்டிய ஒலிம்பிக் நிர்வாகம் அவரை தொடர்ந்து விளையாடி அனுமதித்தது.

கடுமையாக சர்ச்சைக்கிடையே காலிறுதியில் ஹங்கேரி வீருாங்கனையை 5-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை 5-0 எனவும், இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லியு யங்கை 5-0 என வீழ்த்தியும் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த நவம்பர் மாதம் இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கையை பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டார்
அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.
இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்து.






