என் மலர்
விளையாட்டு
- ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் டாஸ் போட்டது சர்ச்சையானது.
- பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்த சர்ச்சையான சம்பங்களை இந்த செய்தியின் மூலம் காண்போம்.
1. வங்க தேச கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார்.
2. ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. அப்போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இந்த சம்பவத்தை அடுத்த போட்டியின் போது பேட் கம்மின்ஸ் உடன் டுபிளிசிஸ் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
3. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து தெரிவித்த கருத்து உள்பட பல சர்ச்சைகள் வெடித்தன.
பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்.

அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார். என்று தெரிவித்தார். இது 2024-ம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் தேசிய கிரிக்கெட் லீக்கின் (என்சிஎல்) எதிர்கால எடிஷன்களுக்குத் தடை விதித்தது. ஐசிசி விதிகளுக்கு என்சிஎல் இணங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
5. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையானது. அந்த போட்டியில் இறுதி ஓவரில் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் பவுண்டரி லைனில் பிடிப்பார். அப்போது அவரது கால் பவுண்டரி லைனை பட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
6. பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
மேல்முறையீட்டிற்குப் பிறகு ஆன்-பீல்ட் அம்பயரின் நாட் அவுட் முடிவு மாற்றியமைக்கப்பட்டது, மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தார். இது பந்து பேட் மற்றும் பேட் இரண்டிற்கும் அருகில் சென்றபோது ஒரு ஸ்பைக்கைக் காட்டியது.
ராகுலின் பேட் ஒரே நேரத்தில் மோதியதாகத் தோன்றினாலும், மூன்றாவது நடுவர் ஸ்பைக் ஒரு எட்ஜைக் குறிப்பிட்டு, ஆன்-பீல்ட் அம்பயரின் முடிவை மாற்றினார். உறுதியான ஆதாரம் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தேகத்தின் பலன் கள நடுவரின் முடிவை உறுதிப்படுத்துகிறது. ராகுல் வெளியேறுவதற்கு முன்பு நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் சில நொடிகள் பேசிவிட்டு பெவிலியன் சென்றார்.
6. அபுதாபி டி10 லீக்கின் முன்னாள் துணை பயிற்சியாளர் சன்னி தில்லானுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் 6 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டது.
2021 அபுதாபி டி10 லீக்கின் போது போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதற்காக ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மீறல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.
7. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது இன்னிங்சின் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.
இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வழங்கி வருகிறது.
- ஐசிசி வெளியிட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் பும்ரா உள்பட 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் பும்ரா உள்பட 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்-ம் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் தேர்வாகும் ஒருவருக்கு விருது வழங்கப்படும்.
இந்திய அணியின் பும்ரா இந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14.92 சராசரியில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேபோல ஜோ ரூட் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55.57 சராசரியுடன் 1556 ரன்கள் குவித்துள்ளார். ஹார் ப்ரூக் 12 போட்டிகளில் விளையாடி 55.00 சராசரியுடன் 1100 ரன்கள் குவித்துள்ளார்.
இலங்கை வீரர் கமிந்து மெண்டீஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1049 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய், இலங்கை அணியில் குசல் மெண்டீஸ் மற்றும் ஹசரங்கா, வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரூதர்போர்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜோரூட், டிராவிஸ் ஹெட், ஹாரி ப்ரூக், பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
- நிச்சயமாக இவ்வளவு பெரிய இலக்கை இங்கு துரத்த முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
- இந்த போட்டியை டிரா செய்வதற்கு விளையாடினோம். இறுதியில் எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 369 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் போட்டியை விட்டுக் கொடுப்பதற்காக உள்ளே செல்லவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோல்வி குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. நாங்கள் போட்டியை விட்டுக் கொடுப்பதற்காக உள்ளே செல்லவில்லை. நாங்கள் போராடுவதற்காக சென்றோம். துரதிஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாக போராடியது.
இதன் காரணமாக எங்களுக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக இவ்வளவு பெரிய இலக்கை இங்கு துரத்த முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே எங்கள் வழியில் நாங்கள் இந்த போட்டியை டிரா செய்வதற்கு விளையாடினோம். இறுதியில் எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை
பும்ரா ஒரு பிரில்லியன்ட். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் என்ன செய்கிறார் என்பதை நாங்கள் பார்த்துதான் வருகிறோம். அவர் புள்ளி விபரங்களால் பார்க்கக் கூடியவர் இல்லை. அவர் நாட்டிற்காக போட்டிகளை வெல்வதற்காக வந்து எதையும் செய்ய தயாராக இருக்கிறார். துரதிஷ்டவசமாக பந்துவீச்சில் அவருக்கு இன்னொரு முனையில் நல்ல ஆதரவு கிடைக்கவில்லை
என்று கூறி இருக்கிறார்.
- இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 3 கேட்ச்களை தவறவிட்டார்.
- ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் படுதோல்வியை சந்திந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைய முக்கிய காரணமாக விளங்கிய தருணங்களை இந்த தொகுப்பின் மூலம் காணலாம்.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்தியா 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ஜோடி அணியை மீட்டனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்தனர். இது மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 91 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் எடுத்த போது லபுசேன் கொடுத்த எளிதான கேட்ச்சை சிலிப்பில் நின்ற ஜெய்ஸ்வால் தவறவிட்டார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணி 150 ரன்களுக்குள் அடங்கியிருக்கும்.
இதனையடுத்து கம்மின்ஸ் -லபுசேன் ஜோடி 7 விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சமயத்தில் கம்மின்ஸ் ஜடேஜா பந்து வீச்சில் தடுத்து ஆடுவார். அப்போது சில்லி பாயிண்டில் இருந்த ஜெய்ஸ்வால் கேட்ச்சை தவறவிடுவார். அவர் சில்லி பாயிண்டில் இருந்து செய்த பெரிய தவறு என்னவென்றால், பந்து வரும் வரை உர்கார்ந்து இருக்காமல் உடனே எந்திருத்து விடுவார். இதனை முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா அவரிடம் காட்டமாக கூறியிருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் மீண்டும் அந்த தவறை செய்தார். அப்போது கம்மின்ஸ் 21 ரன்னில் தான் இருப்பார். இதனால் கம்மின்ஸ் தொடர்ந்து விளையாடினார்.
இதனையடுத்து 70 குவித்த லபுசென் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதுத்து வந்த ஸ்டார்க் 5 ரன்னிலும் கம்மின்ஸ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் அடுத்த விக்கெட்டும் சீக்கிரமாக எடுத்து இந்திய அணி 4-வது நாளில் 50 ரன்கள் குவித்தாலே வெற்றிக்கு வாய்ப்பாக அமையும் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் அதற்கு மாறாக பந்து வீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் போலண்ட் சிறப்பாக ஆடினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடை பெற்றது. ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தனர். இதுவும் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.
2-வது இன்னிங்சில் 3 கேட்ச் மிஸ், கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமல் 61 ரன்கள் விட்டுக்கொடுத்தது, இந்திய அணி இந்த டெஸ்ட்டில் பாதகமாக அமைந்த தருணங்களாக பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.
ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள். ரோகித் அவுட் ஆனது கூட பரவாயில்லை. விராட் கோலி அவுட் ஆனதுதான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. விராட் மீண்டும் அவுட் சைடு ஆப் பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அவர் அவுட் ஆனது எல்லாமே அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப். இதனால் அவரையும் ரோகித் சர்மாவையும் ஓய்வு பெறுமாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. வந்ததும் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். டிராவை நோக்கி இந்த டெஸ்ட் சென்று கொண்டிருந்தது.
திடீரென ரிஷ்ப பண்டிற்கு என்ன தோனுச்சு என்று தெரியவில்லை. ஹெட் பந்து வீச்சை அதிரடியாக ஆடினார். அந்த பந்து பவுண்டரி லைகுக்கு சென்றது. அங்கிருந்த மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடித்து ரிஷப் பண்டை அவுட் செய்தார். 104 பந்தில் 30 ரன்கள் எடுத்த அவர் தொடர்ந்து அப்படியே விளையாடியிருந்தால் போட்டி டிராவிலாவது முடிந்திருக்கும். அதை செய்யாமல் அதிரடியாக விளையாடி முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த ஜடேஜா 2, நிதிஷ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 7 ஓவர்கள் தடுப்பாட்டத்தில் விளையாடி வந்த ஜெய்ஸ்வால் கம்மின்ஸ் வீசிய ஷாட் பந்தை அடிக்க முற்பட்டு 84 ரன்னில் அவுட் ஆனார். இவரும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் நின்றிருந்தால் கூட ஆட்டம் டிரா செய்திருக்காலாம். ஆனால் இவர் அவுட் ஆனதும் இந்திய அணி தோல்விக்கு காரணமாகும்.
இதனையடுத்து வரும் வீரர்களாக ஆகாஷ் தீப், பும்ரா சிராஜ் இருந்தனர். தடுப்பாட்டம் ஆடிய சுந்தர், இவர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அதிகமாக அவரே விளையாடியிருக்க வேண்டும். அதை செய்யாமல் ஓவரின் முதல் பந்தையே 1 ரன் எடுத்து கொடுத்து இந்த வீரர்களை பேட்டிங் செய்ய வைத்தார். மேலும் ஓவரின் கடைசி பந்தை 1 ரன் எடுக்க அவர் முயற்சி செய்யவில்லை. யாராக இருந்தாலும் அதனை செய்திருக்க முயற்சிப்பார்கள். சுந்தர் அதனை முயற்சி செய்யவில்லை. மீதம் 15 ஓவர்கள் தான் இருந்தது. முயற்சி செய்திருக்காலம். இதுவும் இந்திய அணி தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- 2-வது இன்னிங்சில் இந்தியா 155 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல போர்னில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலை யில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடை பெற்றது. 333 ரன்கள் முன்னிலை, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது.
ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது.
போலண்டு 15 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக் கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.
ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. குறிப்பாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியை காப்பாற்றும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 127 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் (82 ரன்) அடித்து இருந்தார். 18-வது டெஸ்டில் விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு இது 10-வது அரை சதமாகும்.
மறுமுனையில் இருந்த ரிஷப்பண்ட் நிதானமாக ஆடினார். 49-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது. தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.
இதனையடுத்து ரிஷப் பண்ட் 30, ஜடேஜா 2, நிதிஷ் 1, ஜெய்ஸ்வால் 84, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, சிராஜ் 0 என வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- ரோகித் சர்மா கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
- ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் அவரது பேட்டிங் சொல்லும்படி இல்லை.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 333 ரன்கள் முன்னிலை, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது.
பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.
இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வரை அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அதன் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முதல் முறையாக இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முறையே தடுமாறி வருகிறது.
இதனால் அவரது கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. முதல் டெஸ்ட்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்திருந்தார். அவரையே முழு நேர கேப்டனாக நியமிக்கும்படி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் அவரது பேட்டிங் சொல்லும்படி இல்லை. அவரது கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார். மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சராசரி 10.93 ஆகும்.
பார்டர் கவாஸ்கர் டிராபில் 10 ரன்களே அதிகபட்ச ரன் ஆகும். இன்று வெற்றி பெற வேண்டிய நிலையில் ரோகித் சர்மா மீண்டும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை ஓய்வை அறிவிக்கும் படி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ரோகித் ரசிகர்களே அவரை செஞ்சதெல்லாம் போதும் நீங்களே ஓய்வை அறிவிப்பது பெருந்தன்மையாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
- ஜெய்ஸ்வால் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- அவரது விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது. இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.
அதனை தொடர்ந்து ரிஷ்ப பண்ட் 30, ஜடேஜா 2, நிதிஷ் குமார் 1 என வெளியேறினர். இதனையடுத்து ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தார் ஜோடி சேர்ந்து பொறுமையுடன் விளையாடினர்.
இந்நிலையில் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.
இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
- இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாதனையை முறியடிப்பார்.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான அவர் முதல் டெஸ்டில் 8 விக்கெட்டும் (5+3), 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டும், 3-வது டெஸ்டில் 9 விக்கெட்டும் (6+3) கைப்பற்றினார்.
4-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு பும்ரா 21 விக்கெட் எடுத்து இருந்தார். மெல்போர்னில் தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட் கைப்பற்றினார். 2-வது இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
5-வது விக்கெட்டாக இன்று நாதன் லயனை அவுட் செய்தார். இதன் மூலம் பும்ரா இந்த தொடரில் 30 விக்கெட்டை வீழ்த்தினார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் ஹர்பஜன்சிங் சாதனையை முறியடிப்பார்.
சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 32 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
பும்ரா 3-வது முறையாக இந்த தொடரில் 5 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் பிபுன்சிங் பெடி, பி.எஸ்.சந்திரசேகர், கும்ப்ளே ஆகியோரை அவர் சமன் செய்தார். மெல்போர்ன் மைதானத்தில் 9 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 44 டெஸ்டில் 203 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவர் 13 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்தார் பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 200-வது விக்கெட்டாக (44 டெஸ்ட்) அமைந்தது. இதன் மூலம் பும்ரா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
200 விக்கெட்டுகள் வீழ்த்திய உலக அளவில் 85-வது வீரர், இந்திய அளவில் 12-வது வீரர் ஆவார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை ஜடேஜாவுடன், பும்ரா பகிர்ந்துள்ளார். இந்திய பவுலர்களில் இந்த இலக்கை அதிவேகமாக தொட்டவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். அவர் 37 டெஸ்டுகளிலேயே 'டபுள்செஞ்சுரி' விக்கெட்டை எடுத்து விட்டார்.
பும்ரா சராசரியாக 19.56 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளார். 20-க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டை வீழ்த்திய ஒரே பவுலர் பும்ரா தான்.
200 விக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர் 3,912 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்திய வகையிலும் பும்ராவுக்கே முதலிடம். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் ஜோயல் கார்னெர் 4,067 ரன்கள் வழங்கி இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது.
குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டை மகசூல் செய்த சாதனையாளர் பட்டியலில் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். இதற்காக அவர் 8,484 பந்துகள் வீசி இருக்கிறார். முதல் 3 இடங்களில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (7,725 பந்து), தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (7,848 பந்து), ககிசோ ரபடா (8,154 பந்து) உள்ளனர்.
புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் மட்டும் பும்ரா 23 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கினார். அனில் கும்பிளே சிட்னி ஸ்டேடியத்தில் 20 விக்கெட் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.
- நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- ஆஸ்திரேலியா அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை துவங்கிய ஐந்தாம் நாளில் ஆஸ்திரேலியா அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இLன் மூலம் அந்த அணி இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பேட்டிங்கில் ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஷேன் 70 ரன்களையும், பேட் கம்மின்ஸ் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயன் 41 ரன்களை அடித்தார். இவருடன் ஆடிய ஸ்காட் போலண்ட் 15 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி 340 ரன்கள் எனும் இலக்கை துரத்தி ஆடி வருகிறது.
இந்த தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று 40 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடினார். எனினும், இந்த இன்னிங்ஸிலும் ஆஃப் ஸ்டம்ப்-ஐ விட்டு வெளியே சென்ற பந்தை அடிக்க முயன்று விராட் கோலி அவுட் ஆகி வெளியேறினார். இந்த தொடர் முழுக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இதே போன்ற பந்துவீசி விராட் கோலியை அவுட் ஆக்கி வந்துள்ளனர்.
ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து வந்தவர்கள் அவுட் ஆக இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. உணவு இடைவெளிக்குப் பிறகு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிக்கு அடுத்த விக்கெட் இழக்கக்கூடாது என நிதானமாக ஆடி வருகின்றனர்.
துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தோல்வியை தவிர்க்கவும், போட்டியை டிரா செய்யும் முனைப்பிலும் விளையாடி வருகிறது.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மெல்போர்ன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் ரெட்டி 114 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 70 ரன்னும், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 41 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நாதன் லயன் 41 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தென் ஆப்பிரிக்கா சென்றது.
துபாய்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.
இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (58.89 சதவீதம்), இந்தியா (55.88 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்), இங்கிலாந்து (43.18 சதவீதம்), வங்கதேசம் (31.25 சதவீதம்) அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.
- நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹஷ்மதுல்லா 179 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
புலவாயோ:
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா 234 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி பொறுப்புடன் ஆடி வருகிறார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 364 ரன்கள் சேர்த்துள்ளது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 515 ரன்கள் குவித்துள்ளது. ஹஷ்மதுல்லா 174 ரன்னும், அப்சர் சசாய் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முதல் இன்னிங்சே இன்னும் முடிவடையாததால் இந்தப் போட்டி டிராவில் முடியும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.






