என் மலர்
விளையாட்டு

உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப்: தோல்வியே சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய வைஷாலி
- ஒரு தோல்வி கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
- இதன் மூலம் வைஷாலி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூ யார்க்கில் நடைபெறும் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். 23 வயதான வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள வைஷாலி, அந்த சுற்றில் ஹூ ஜினர்-ஐ எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். முதலிடத்திற்கு முன்னேறியது பற்றி கூறிய வைஷாலி அதிர்ஷ்டம் கிடைத்ததாக நினைக்கிறேன் என்று கூறினார்.
இது குறித்து பேசும் போது, "உண்மையில் நான் என்னை சிறந்த பிலிட்ஸ் வீராங்கனையாக நினைக்கவில்லை. என்னைவிட மிகவும் கடினமானவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இன்றைய போட்டிகளில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாகவே நினைக்கிறேன், அது அப்படியே நடந்துவிட்டது," என்று தெரிவித்தார்.
Next Story






