என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Blitz Championship"

    • பிளிட்ஸ் பிரிவில் 235 பேரும், ரேபிட்டில் விளையாடுவதற்கு 232 பேரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
    • முதலில் இன்று முதல் 28-ந்தேதி வரை அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறுகிறது.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது.

    மொத்தம் ரூ.10½ கோடி பரிசுத் தொகைக்கான 'பிடே' உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது. பிளிட்ஸ் பிரிவில் 235 பேரும், ரேபிட்டில் விளையாடுவதற்கு 232 பேரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

    இதில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், கிளாசிக்கல் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின், அமெரிக்காவின் பாபியானோ காருனா, லெவோன் ஆரோனியன், வெஸ்லி சோ, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி, ரஷியாவின் இயான் நிபோம்நியாச்சி, டேனில் துபோவ், உஸ்பெகினிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் களம் இறங்குவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பெண்கள் பிரிவில் சீனாவின் ஜூ வென்ஜூன், லீ டிங்ஜி, டேன் ஜோங்யி, ரஷியாவின் கேத்ரினா லாக்னோ, ரேபிட் உலக சாம்பியன் இந்தியாவின் கோனெரு ஹம்பி, ஹரிகா, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா கோஸ்டினியக், கஜகஸ்தானின் பிபிசரா அசாபயேவா உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.

    முதலில் இன்று முதல் 28-ந்தேதி வரை அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறுகிறது. ரேபிட்டில் ஓபனில் 13 சுற்றும், பெண்கள் பிரிவில் 11 சுற்றும் இடம் பெறுகிறது. இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்கள். மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சமனில் இருந்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஒவ்வொரு சுற்றும் 15 நிமிடங்கள் கொண்டது. மேலும் ஒவ்வொரு நகர்வுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும்.

    29 மற்றும் 30-ந்தேதி ஆகிய இரு நாட்கள் பிளிட்ஸ் வடிவத்துக்கான உலக போட்டி நடக்கிறது. இது ரேபிட்டை விட காய்களை மின்னல்வேகத்தில் நகர்த்தக்கூடிய சுற்றாகும். அதாவது ஒவ்வொரு ரவுண்ட் ஆட்டமும் 3 நிமிடங்கள் கொண்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி அதிகரிக்கப்படும். இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளை அடங்கியது. இதன் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். முதல் நாளில் 13 ரவுண்ட் நடக்க உள்ளது. இதன் பெண்கள் பிரிவு 15 சுற்றுகளை கொண்டது.

    2024-ம் ஆண்டு இறுதியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த குகேஷ் அதன் பிறகு பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. தனது பிரதான எதிரிகளை வீழ்த்தி மீண்டும் வலுவான நம்பிக்கையை அடைவதற்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

    ரேபிட் மற்றும் பிளிட்சில் ஓபன் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.74 லட்சமும், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.42 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    • ஒரு தோல்வி கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
    • இதன் மூலம் வைஷாலி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூ யார்க்கில் நடைபெறும் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். 23 வயதான வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.

    இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள வைஷாலி, அந்த சுற்றில் ஹூ ஜினர்-ஐ எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். முதலிடத்திற்கு முன்னேறியது பற்றி கூறிய வைஷாலி அதிர்ஷ்டம் கிடைத்ததாக நினைக்கிறேன் என்று கூறினார்.

    இது குறித்து பேசும் போது, "உண்மையில் நான் என்னை சிறந்த பிலிட்ஸ் வீராங்கனையாக நினைக்கவில்லை. என்னைவிட மிகவும் கடினமானவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இன்றைய போட்டிகளில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாகவே நினைக்கிறேன், அது அப்படியே நடந்துவிட்டது," என்று தெரிவித்தார். 

    • ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.
    • காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் வைஷாலி தோற்கடித்தார்.

    நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.

    இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு வைஷாலி முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்த வைஷாலி, அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான ஜூ வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

    இறுதிபோட்டியில் ஜூ வென்ஜுன் 3.5-2.5 என்ற கணக்கில் சகநாட்டவரான லீ டிங்ஜியை தோற்கடித்து உலக பட்டத்தை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற வைஷாலிக்கு, ஐந்து முறை உலக சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த், முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ×