என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
    • மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (பிப்ரவரி 12) நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் 'ஒயிட்வாஷ்' செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

    அதே நேரத்தில் வீராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

    • இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
    • தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்.

    டி20 லீக் போட்டிகளால் சர்வதேச கிரிக்கெட் தரம் குறைந்து வருகிறது. தலைசிறந்த முன்னாள் வீரர்களை போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று இலங்கை அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனான அர்ஜுன ரனதுங்கா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரனதுங்கா கூறியதாவது:-

     நான் 1990களின் தொடகத்தில் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்ற பேட்டிங் ஆர்டர்களை பெற்றிருந்தது. அவர்களை எங்களால் இரண்டு முறை (டெஸ்ட் போட்டி) ஆட்மிழக்க செய்ய முடியவில்லை. அவர்களை தொடர்ந்து அசாருதீன், தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் பின்தொடர்ந்து வந்தார்கள்.

    அவர்களிடம் அற்புதனமாக தரமான வீரர்கள் இருந்தனர். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். தற்போது அதை போன்ற கிளாஸ் பிளேயர்கள் இந்தியாவில் உள்ளனரா? நான் அப்படி நினைக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். நான் என்னுடைய 1990 இலங்கை அணியுடன், இந்த இந்திய அணிக்கு எதிரான விளையாடினால், என்னால் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்ய முடியும். இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பேன்.


    நாம் இளைஞர்களுக்கு முறையாக கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கிறோமா?. இந்தியாவில் கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்றோரை உருவாக்க முடியுமா?. ஒருவேளை தெண்டுல்கர், டிராவிட் போன்று? வெளிப்படைய நீங்கள் சொல்லுங்கள். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.

    தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பிரான்சிஸ் கிரிக்கெட்டுகளை விரும்புகின்றனர். நாட்டிற்காக விளையாடவில்லை என்றாலும், பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு போய்விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டும்தான் இருக்கும்.

    இவ்வாறு ரனதுங்கா தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் 2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது.
    • மைதானங்களை அணிகள் மற்ற நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

    ஐபில் 2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் பல மைதானங்களில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ ஒரு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

    பவுண்டரி லைன் அருகே நிகழ்ச்சி நடத்தப்படலாம். அப்படி நடத்தும்போது மைதானம் போட்டி நடத்துவதற்கு ஏற்ப தரத்தில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளும் குறிப்பிட்ட மைதானங்களை தங்களுடைய சொந்த மைதானங்களை கருதும். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன கார்டன் மைதானத்தையும் சொந்த மைதானங்களாக கொண்டு விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் விளாசினார்.
    • 1 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன், 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் (133 நாட்அவுட்), கான்வே (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து 304 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4-வது இடத்தில் உள்ளார்.

    • கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
    • கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.

    லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.

    அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.

    கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

     கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

    என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
    • பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.

    இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.

    பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.

    வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.

    ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

    • முதல் இன்னிங்சில் 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
    • 2-வது இன்னிங்சில் 76 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார்.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 3-வது காலிறுதி போட்டியில் மும்பை- ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    மும்பை அணியில் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முலானி 91 ரன்களும், தனுஷ் கோட்டியான் 97 ரன்களும் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் முதல் இன்னிங்சில் 315 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரகானே 31 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 301 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான அங்கித் குமார் சிறப்பாக விளையாடி 136 ரன்கள் விளாசினார். இவரது சதத்தால் ஹரியானா 300 ரன்களை தாண்டியது.

    பின்னர் 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான விளையாடினார். அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரகனுனே 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல உள்ள மும்பை 4 விக்கெட் இழப்பிற்க 238 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    சூர்யகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் ரன்கள் குவிக்க திணறி வருகிறார். அவர் ஃபார்ம் அவுட்டில் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் விளாசியது அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

    • குரூப் டி பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
    • 12-ந்தேதி மக்காவு சீனா அணியையும், 13-ந்தேதி தென்கொரிய அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

    ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான பெண்கள் அணியில் பி.வி. சிந்து இடம் பிடித்திருந்தார். தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக கவுகாத்தியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    பயிற்சியின்போது அவருக்கு காயம் (hamstring) ஏற்பட்டது. இதனால் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளார். பி.வி. சிந்து வலகியுள்ளதால் பெண்கள் அணிக்கு மாளவிகா பன்சாட் தமைமை ஏற்பார். இவர் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ளார்.

    "சீனாவிற்கு என்னால் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கவுகாத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது, எனது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக உணர்ந்தேன். இருந்தபோதிலும் நாட்டிற்காக கடுமையாக உழைக்க முயற்சி எடுத்த போதிலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் நான் எதிர்பார்த்ததைவிட குணமடைய அதிக நாட்கள் பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

    அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியில் இருந்து அணியை உற்சாகப்படுத்துவேன்" என பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

    இந்திய ஆண்கள் அணியில் லக்சயா சென், ஹெச்.எஸ். பிரனோய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர். அர்ஜுன், சதீஷ் கமார் கருணாகரன் இடம் பிடித்துள்ளனர்.

    பெண்கள் அணியில் மாளவிகா பன்சாட், காயத்திரி கோபிசந்த், திரீஷா, அஷ்வினி பொன்னப்பாக, தனிஷா கிராஸ்டோ, ஆத்யா வாரியாத் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி குரூப் "டி" யில் இடம் பிடித்தள்ளது. இந்த அணியில் தென்கொரியா, மக்காவு சீனா அணிகள் இடம் பிடித்துள்ளது.

    12-ந்தேதி மக்காவு சீனா அணியையும், 13-ந்தேதி தென்கொரிய அணியையும் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
    • இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ரன்கள் விளாசி அவுட்டானார்.

    இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், 150 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ படைத்தார்.

    இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ரன்கள் தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19 ஆவது வீரர் என்ற சாதனையையும் மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்துள்ளார்.

    • சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.
    • 16வது ஓவரில் ஐடன் மார்க்ரம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் SA20 2025 கிரிக்கெட் பிரீமியர் லீக் சீசன் பரபரப்பான முடிவை எட்டியுள்ளது.

    நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில் MI கேப் டவுன் வெற்றி பெற்று தங்கள் முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இரண்டு முறை சாம்பியனான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.

    இந்நிலையில் போட்டியின் போது ஹோவர் மைதானத்தில் நடந்த ஒரு வினோத சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆட்டத்தின் 16வது ஓவரில் ஐடன் மார்க்ம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார். பார்வையாளர்கள் அரங்கை நோக்கி வந்த அந்த பந்தை தீவிர ரசிகர் ஒருவர் பிடிக்க பிரயர்த்தனப்பட்டார்.

    ஆனால் அவர்  நின்றிருந்த மேல் டெக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். அவ்வாறு அவர் விழும்போது அவரின் கால் சட்டை (டவுசர்) அவிழ்ந்து விலகி நிலைமையை மேலும் மோசமாகியது. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

    • எல்லா விடிவிலான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 98 போட்டிகளில் வெற்றி.
    • 50 ஒருநாள் போட்டிகளில் 36-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 119 ரன்கள் விளாச, இந்தியா 44.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.

    எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் கங்குலி தலைமையில் இந்திய அணி 97 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 98 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வரிசையில் எம்.எஸ். டோனி முதல் இடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், முகமது அசாருதீன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    எம்.எஸ். டோனி தலைமையில் இந்திய அணி 332 போட்டிகளில் விளையாடி 179-ல் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 213 போட்டிகளில் விளையாடி 137-ல் வெற்றி பெற்றுள்ளது. முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 221 போட்டிகளில் விளையாடி 104-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 136 போட்டிகளில் விளையாடி 98-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 50 போட்டிகளில் விளையாடி 36-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இதன்மூலம் ஒருநாள் போட்டியில் வெற்றி சராசரி அதிகம் வைத்துள்ள கேப்டன்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்டு 76.19 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 72 சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 71.73 சராசரியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260 ரன்களும், 2-வது இன்னிங்சில் 298 ரன்களும் சேர்த்தது.
    • முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 6-ந்தேதி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஆண்டி மெக்பிரைன் 90 ரன்களும், மார்க் அடைர் 78 ரன்களும சேர்த்தனர். ஒரு கட்டத்தில் அயர்லாந்து 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் நிக் வெல்ச் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். முசாரபானி 47 ரன்கள் எடுத்தார்.

    7 ரன்கள் முன்னிலையுடன் அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆண்டி பால்பிரைன் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 58 ரன்களும் அடிக்க அயர்லாந்து 298 ரன்கள் குவித்தது.

    இதனால் ஜிப்பாப்வே அணிக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்லி மாதவேரே 61 ரன்களுடனும், நியாம்குரி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 3 விக்கெட், 109 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வெஸ்லி மாதவேரே 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் அயர்லாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்த ஆண்டி மெக்பிரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    ×