என் மலர்
விளையாட்டு
- சுப்மன் கில் 102 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 112 ரன்கள் விளாசினார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்களும், விராட் கோலி 55 பந்தில் 52 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.
17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.
சுப்மன் கில் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக விளையாடினார்.
சுப்மன் சில் 95 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் அய்யர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 226 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 112 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.

சுப்மன் கில் அவுட்டான சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்குார் 38.2 ஓவரில் 259 ரன்னாக இருந்தது.
கே.எல். ராகுல் 29 பந்தில் 40 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 9 பந்தில் 17 ரன்களும், அக்சார் படேல் 12 பந்தில் 13 ரன்களும் இந்தியாவின் ஸ்கோர் 350 ரன்களை தாண்டியது. 49-வது ஓவரில் ஹர்ஷித் ராணா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இந்தியா 3 ரன் எடுத்து 2 விக்கெட்டை இழக்க சரியாக 50 ஓவரில் 356 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 357 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
- டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
- தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. அரைசதம் அடித்த விராட் கோலி 55 பந்தில 52 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஆனால் அரைசதம் அடித்த சுப்மன் கில் அதை சிறப்பான வகையில் சதமாக மாற்றினார். 51 பந்தில் அரைசதம் சதம் அடித்த சுப்மன் கில் 95 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 102 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர் ஏற்கனவே இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் சதம் விளாசியுள்ளார். மேலும இந்திய அணிக்காக டெஸ்ட், டி20 போட்டிகளில் ஏற்கனவே சதம் விளாசியுள்ளார். தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரே மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- சுப்மன் கில் 25 ரன்களை எடுத்தபோது 2500 ரன்களை விரைவாக கடந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- விராட் கோலி 3 நாடுகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.
17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும் போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கியுள்ளார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.
இன்றைய போட்டியில் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5393 ரன்களும், இலங்கைக்கு எதிராக 4076 ரன்களும் அடித்துள்ளார்.
சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்களை தொட்டார். இது அவருடைய 50-வது ஒருநாள் போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2500 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- ரோகித் சர்மாவை 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளார் சுப்மன் கில்.
- விராட் கோலி 4 இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.
இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது.
கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.

அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை.
- பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியாவுடன் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், "எங்களின் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை. நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம். எல்லாம் சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதில் உள்ளது" என்று தெரிவித்தார்.
பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இங்கிலாந்து இந்தியாவிடம் 3-0 என தோற்றாலும் கவலையில்லை என்று டக்கெட் சொல்வது மிகவும் மோசமானது. இவ்வாறு ஒருபோதும் அவர் சொல்லிருக்க கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.
- இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இப்போட்டியில் சமிக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.
- சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டார்க் விலகல்
- காயத்தால் அவதிப்பட்டு வரும் பேட் கம்மின்ஸ் சாம்பியன் கோப்பை அணியில் இருந்து விலகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளனர் . மேலும், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
இந்நிலையில், சாம்பியன் கோப்பைக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட்த்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா
- ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சாம்பியன் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்படும்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ளதால் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களுடன் சாம்பியன்ஸ் கோப்பையில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
- நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இதற்காக இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலி பெண் ஒருவரை கட்டிப்பிடித்து பேசினார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்களில் ஒருசாரார் அப்பெண் கோலியின் நெருங்கிய உறவினர் என்றும் மற்றொரு சாரார் அப்பெண் "அதிர்ஷ்டசாலி" ரசிகை என்றும் கூறி வருகின்றனர்.
- அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.
- ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
- மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று, தொடரை முழுமயாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
அதே நேரத்தில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
- ரோகித் சர்மா தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங்.
- விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். அதனால் பல விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதத்தை அடித்து பார்முக்கு திரும்பினார். அதில் 12 பவுண்டரிகள் ஏழு சிக்சர்கள் அடங்கும்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது அதிக சிக்சர்கள் (337) விளாசிய கிறிஸ் கெயிலின் உலக சாதனையை ரோகித் முறியடித்தார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தானின் வீரர் அப்ரிடி 351 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகளும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு புதிய பொழுதுபோக்காளர் தேவை. நான் செய்தது போலவே இத்தனை வருடங்களாக ரோகித் சர்மா ரசிகர்களை பொழுது போக்கி வருகிறார். எனவே அவர் தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் அவர் நிறைய சிக்சர்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.
விராட் கோலி இப்போதும் உலகில் சிறந்த வீரர். பார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர். அவருடைய புள்ளி விபரங்களும் அனைத்து வகையான பார்மெட்டில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளார் என்பது அவற்றை நிரூபிக்கும். இது அனைத்து வகையான வீரர்களும் செல்லக் கூடிய ஒரு கடினமான காலமாகும்.
இது விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும். ஆனால் இது சாதாரணமாக நடக்கக் கூடியதாகும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தம்மைத்தாமே ஆதரவு கொடுத்துக் கொண்டு மீண்டும் வரவேண்டும்.
என்று கூறினார்.






