என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் - இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்
    X

    சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் - இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை.
    • பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியாவுடன் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், "எங்களின் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை. நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம். எல்லாம் சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இங்கிலாந்து இந்தியாவிடம் 3-0 என தோற்றாலும் கவலையில்லை என்று டக்கெட் சொல்வது மிகவும் மோசமானது. இவ்வாறு ஒருபோதும் அவர் சொல்லிருக்க கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×