என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த முதல் அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஹோல்ஜர் ரூனே அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 6-4 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.
    • 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 149 ரன்கள் எடுத்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    மரிசான் காப் கடைசி வரை போராடினார். அவர் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.

    இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம்.
    • முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.

    இந்திய டெஸ்ட் அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்தது.

    விராட் கோலி நிச்சயமாக அந்த தொடரில் பங்கேற்பார் எனவும், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் கோலி நிச்சயமாக ஆடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் இன்னொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நான் பங்கேற்காமல் போகலாம் என்று விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பதட்டம் அடைய வேண்டாம். நான் ஒன்றும் ஓய்வு அறிவிக்கப் போவதில்லை. இப்போதைக்கு எல்லாம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

    அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம். எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் என்ன செய்வேன் என எனக்கே தெரியவில்லை. சக வீரர் ஒருவரிடம் இதே கேள்வியை கேட்டேன் அவரும் இதே பதிலைத்தான் கொடுத்தார். ஒருவேளை அதிக அளவில் பயணம் செய்வேன்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    • இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, குஜராத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • 5-வது லீக் ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின
    • இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.

    மலேசியா, ஹாங் காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஹ்ரைன் 129 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 1 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    1 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங், 3-வது பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 0 ரன்னில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை பஹ்ரைன் அணி படைத்துள்ளது.

    • நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
    • நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு ”தமிழ் சிங்கம் ரெடி” என டெல்லி அணி தலைப்பிட்டுள்ளது.

    டெல்லி:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் டெல்லி அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவருக்கு இண்ட்ரோ வீடியோ கொடுத்து அசத்தலாக வரவேற்றது டெல்லி அணி.

    நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு தமிழில் லியோ படத்தில் வெளியான நான் ரெடியா தான் வரவா பாடலை பின்னணி இசையில் இசைத்துள்ளனர். மேலும் இதற்கு "தமிழ் சிங்கம் ரெடி" என தலைப்பிட்டுள்ளது. இது தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வீரர்கள் மட்டுமே தமிழில் அவ்வபோது பேசி வந்த நிலையில் மற்ற அணிகளும் தமிழை பின்பற்ற தொடங்கி உள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் வீடியோவை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் டெல்லி அணியும் தமிழில் பதிவு செய்தது தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது 

    • சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

    நேற்றைய தினம், ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிக்களுக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSKபோட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.

    கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.

    பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2005-ம் ஆண்டில் இந்தியா போட்டியின் போது ஜாகீர் ஐ லவ் யூ என ரசிகை ஒருவர் பெயர் பலகை வைத்திருந்தார்.
    • அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அவர்களது அணியில் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் இணைந்துள்ளார். லக்னோ அணியின் முன்னாள் ஆலோசகராக இருந்த கம்பீருக்கு பதிலாக ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஜாகீர் கான் லக்னோ அணியில் இணைவதற்காக அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தார். அப்போது ஹோட்டலில் ரசிகர்கள் கையில் பெயர் பலகையுடன் அவரை வரவேற்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஜாகீர்கானின் தீவிர ரசிகையும் இருந்தார்.

    20 ஆண்டுகளுக்குப் முன்பு பெங்களூருவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் ஜாகீர் ஐ லவ் யூ என பெயர் பலகை வைத்திருந்தார். அதனை மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

    இதனை ஓய்வு அறையில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகையையும் ஜாகீர்கானை மாறி மாறி அந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர். உடனே ரசிகை ஜாகீர் கானை பார்த்து ஐ லவ் யூ என தெரிவித்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இதனை பார்த்த யுவராஜ், ஜாகீர் கான் சிரித்தனர். யுவராஜ் உடனே நீங்களும் முத்தம் கொடுங்கள் என தெரிவிக்க ஜாகீர் கானும் சிரித்தபடி பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதற்கு ரசிகை வெட்கப்பட்டும் அவர் வைத்திருந்த பெயர் பலகையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொள்வார்.

    இவர்கள் இரண்டு பேரும் செய்த செயலை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக் சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    அந்த ரசிகை அதே மாதிரி ஜாகீர் ஐ லவ் யூ என்ற பெயர் பலகையுடன் வெட்கத்தில் ஜாகீர் கானை பார்ப்பதும் அவரும் சிரித்தப்படி கடந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் லக்னோ அணி இதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    • நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன்.
    • அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது. இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எனது அணிக்காக நான் துணை நிற்பேன் என கேப்டன்சி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் மனம் திறந்த பேசினார். அதில், நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் போட்டிகளின் நிலவரங்களை உற்று நோக்குவேன். எனது அணிக்காக நான் துணை நிற்பது அவசியம். அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    என ரஜத் படிதார் கூறினார்.

    ×