என் மலர்
விளையாட்டு
- குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
- சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார்.
- கடைசி 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர். இதனால் குஜராத் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 8.3 ஓவரில் 78 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அப்போது குஜராத் 15.3 ஓவுரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி 10.5 ஓவரில் 100 ரன்னையும், 15.5 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். 17-ஆவது ஓவரில் 2 சிக்சருடன் குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தன.
18-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். குஜராத் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் அடித்தது. சாய் சுதர்சன் 41 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
19-ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்டியா ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். ரபாடா ஒரு சிக்ஸ் அடிக்க, குஜராத் 2 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சத்தியநாராயண ராஜூ வீசினார். குஜராத் இந்த ஓவரின் ஒரு விக்கெட்டை இழந்தது, ஆனால் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் அடித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
- 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.
நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
- மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.
- இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராட இருக்கிறது.
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கெதிராக விளையாடாத நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளார்.
குஜராத் அணி விவரம்:-
சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-
ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், முஜீப் உர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்யநாராயண ராஜூ.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
- ஒரு போட்டியிலாவது 300 ரன்னைத் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.
ஐபிஎல் 2025 சீசனில் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோவிற்கு எதிராக 200 ரன்களை தொடமுடியவில்லை. லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொத்தம் 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தயார். அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டம் வைத்துள்ளோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விப்ராஜ் நிகம் கூறுகையில் "சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறந்த அணி என்பது உண்மைதான். சிறந்த பேட்டிங் ஆர்டர் வைத்துள்ளனர். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் எங்களுடைய அணி ஆலோசனைகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் போட்டியின்போது வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆகவே, நாளைய போட்டிக்கு அதுபோன்ற சில சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வரும் போட்டிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போட்டியிலேயே விப்ராஜ் நிகம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். மார்கிராம் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி 210 இலக்கை எட்டி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற காரணமாக இருந்தார். அஷுடோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 7 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விப்ராஜ் நிகம்- அஷுடோஷ் சர்மா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.
- இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக தொடங்குகிறது. இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர் குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-
எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், இந்தியா போன்ற அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வரும்போது அப்படி சொல்வதற்கு ஏதும் இல்லை. இது நீண்ட் நாட்கள் கொண்ட தொடர். தொடர்ந்து நிலையான பார்ஃம் பெற்றிருப்பது அவசியம். நேரத்திற்கு நேரம் மீண்டும் மீண்டும் போட்டி வெற்றிக்கான செயல்பாட்டை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்.
ஜோ ரூட் இங்கிலாந்தின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். கடந்த வரும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் குக்கை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது தலைமையில் இங்கலாந்து அணி 2017 முதல் 2022 வரை 64 போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2021 அவருக்கு கடினமானதாக இருந்தது, 17 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை இழந்தது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
- இந்திய அணி மூன்று ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றி பெற்றுள்ளது.
- 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது.
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு அதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ அவர் தொடர்ந்து கேப்டனாக செயல்பட அனுமதிக்குமா? என்பது சந்தேகம்தான். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒய்வு பெறவில்லை. ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அப்போது ரோசித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்பது தெரியும்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில் ரோகித் சர்மா பேசிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு. இந்திய அணி கடந்த 9 மாதங்களில் ஏற்றம் இறக்கத்தை சந்தித்தது. இறுதியில் சாதனைப் படைத்தது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரோகித் சர்மா அதில் கூறியிருப்பதாவது:-
எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஏற்றம், இறக்கம் மற்றம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் காலம் இருக்கும். இதை எல்லா வீரர்களுக்கும் பொருந்தும். அவர்கள் ஏற்றம் இறக்கத்தை எதிர்த்துப் போராட விரும்புகிறார்கள். மீண்டு எழுகிறார்கள். அவர்கள் முன் உள்ள சாவல்களை எதிர்கொண்டு உச்சத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
நாங்கள் நியூசிலாந்து எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்தோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை. இதனால் எங்களுக்கு சற்று இறக்கம் ஏற்பட்டது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி கோப்பையை வென்றுர்மு். இந்த 9 மாதங்களும் வாழ்க்கை எப்போதும் ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.
மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி என்ன சாதனைப் படைத்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மூன்று தொடரில் ஒரேயொரு முறை, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் அணி தோல்வியடைந்துள்ளது.
மூன்று ஐசிசி தொடர்களிலும் தோல்வியை சந்திக்காமல் சென்றிருந்தால் அதை கற்பனை செய்து பாருங்கள். மிகவும் கிரேசியாக இருக்கும். ஏனென்றால், இதைப்பற்றி நாம் கேள்வி பட்டிருக்கமாட்டோம். ஆனால், 24 போட்டிகளில் 23-ல் வெற்றி பெற்றதையும் கேள்வி பட்டிருக்கமாட்மோம் என நான் எடுத்துக்கொள்வேன்.
வெளியில் இருந்து பார்க்கும்போது இது சிறப்பானதாக தெரியும், ஆனால், அணி ஏராளமான ஏற்றம் இறக்கத்தை சந்தித்துள்ளது.
நீங்கள் வெற்றியை கொண்டாடும்போது அணிக்கு கடினமான நேரமும் இருந்தது. இதுபோன்ற சாதனைகள் செய்தால் நீங்கள் கொண்டாட வேண்டும். மூன்று தொடர்களிலும் விளையாடிய அனைத்து வீரர்களும் மரியாதைக்கு தகுதியானர்கள் என உணர்கிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- சென்னை அணிக்கு எதிராக ஜித்தேஷ் 12 ரன்கள் எடுத்தார்.
- சென்னை என்றவுடன் தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் என போட்டிக்கு முன்னர் ஜித்தேஷ் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது களத்தில் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆகி வெளியே செல்லும் போது தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் ஒலித்தது. இதனை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்து அவரை கிண்டலடித்து கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ஆர்சிபி எடுத்த வீடியோவில் சென்னை என்றால் உங்களுக்கு நியாபகம் வருவது என்ன என்று கேள்வி எழுப்பிய போது இந்த பாடல் தான் எனக்கு நியாபகம் வரும் என ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார்.
அதனால் தான் அவர் அவுட் ஆகி வரும் போது டிஜே இந்த பாடலை ஒலித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது.
இருவரும் அரை சதம் கடந்தனர். டேரில் மிட்செல் 76 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மேன் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.
அடுத்து வந்த அப்பாஸ் அரை சதம் அசத்தினார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் 344 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- உஸ்மான் கான் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்தது. 39 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மானும் 36 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான பாபர் அசாம் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 78 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சல்மான் ஆகா 58 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.
- சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- சென்னையில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அஷ்வினுக்கு பிறகு தோனி 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
7 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நிலையில் சிவம் தூபே அவுட் ஆனதும் தோனி வராதது ஏன்? வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பே துளியும் இல்லாமல் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே விளையாடியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி வருவதற்கு முன்னதாகவே அஸ்வின் (8 பந்தில் 11 ரன்கள்), ஜடேஜா (19 பந்தில் 25 ரன்கள்) களமிறங்கினர். அவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக விளையாடவில்லை. 9-வது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்தில் 30 ரன்கள் குவித்தார்.
அவர்கள் இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருந்தால் அவர் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருப்பார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிஎஸ்கே அணி வெற்றிக்காக விளையாடவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் தீவிர ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. தோனி சிக்ஸ் அடித்ததே போதும் எனவும் அவர் ஆட்டத்தை பார்த்ததே சந்தோஷம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
- நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார்.
ஐபிஎல்லில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்:-
ரவீந்திர ஜடேஜா - 3001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்
ஆண்ட்ரே ரசல் - 2488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்
அக்சர் படேல் - 1675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்
சுனில் நரைன் - 1578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்
டுவைன் பிராவோ - 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்






