என் மலர்
விளையாட்டு
- வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
- அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். 2ஆவது புதிய பந்தை எடுத்த பிறகு ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்த ஜோடி 387 ரன்னில் பிரிந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் குதிரை போன்றவர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தபோது, சாதிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
பொறுப்பு கொடுக்கும்போது அதை விரும்புகிறேன். என்னுடைய பக்கத்தில் இருந்து ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய இலக்கு. முடிந்தவரை பேட்ஸ்மேனை நெருக்கடிக்குள்ளாக்கி கட்டுக்கோப்பாக பந்து வீச முயற்சித்தேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். இதனால் இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்று சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்துக்கு 400 ரன்களுக்கு மேலாக இமாயல இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் சேஸிங் குறித்து கூறியதாவது:-
தற்போது வரை இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன். 4ஆவது நாள் காலையில் (இன்று) இந்தியாவின் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், இந்தியா எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயித்தாலும், நாங்கள் களத்தில் சென்ற சேஸிங் செய்ய முயற்சி செய்வோம் என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜடேஜா 89 ரன்களும் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து, சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை ஜெயிஸ்வால் முறியடித்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 21 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது.
இருப்பினும், 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக் உடன் ஜெயிஸ்வால் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- எம்.எஸ்.தோனி 2010 ஆம் ஆண்டு சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்சி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், திருமண நாளை ஒட்டி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கிரெனடா:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெயிட் டக் அவுட்டானார். பிராண்டன் கிங் 75 ரன்னும், ஜான் கேம்ப்பெல் 40 ரன்னும் எடுத்தனர். ஷமார் ஜோசப் 29 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 27 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- இரு அணிகள் மோதும் மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.
சோபியா டங்க்ளே 75 ரன்னும், வியாட் ஹாட்ஜ் 66 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், ஷபாலி வர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிர்தி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கவுர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்று டி20 தொடரில் 2-1 என நீடிக்கிறது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- 3வது சுற்றில் நம்பர் 2 வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 2 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜென் லேன்னர்ட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரினன் மன்னரினோவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஜெய்ஸ்வால் 87 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விரைவில் அவுட்டாகினர். 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
6வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் சதமடித்தனர்.
6வது விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேமி ஸ்மித் 184 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 1-6, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவரில் 178 ரன்களை எடுத்தது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் 81 ரன்னிலும், பாபா அபராஜித் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் விமல்குமார் அதிரடியாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். விமல்குமார் 30 பந்தில் 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபா இந்திரஜித் 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
- ஹாரி ப்ரூக்-ஸ்மித் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பல சாதனை பட்டியலில் இந்த பாட்னர்ஷிப் இடம் பெற்றுள்ளது.
அதன்படி இங்கிலாந்துக்கான 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
அந்த பட்டியல்:-
399: பென் ஸ்டோக்ஸ் & ஜானி பேர்ஸ்டோ vs ?? SA, கேப்டவுன் - 2016
303: ஹாரி புரூக் & ஜேமி ஸ்மித் vs ?? IND, பர்மிங்காம் - இன்று
281: கிரஹாம் தோர்ப் & ஆண்ட்ரூ பிளின்டாஃப் vs ?? NZ, கிறைஸ்ட்சர்ச் - 2002
இதனையடுத்து ஒரு இன்னிங்சில் குறைந்த பட்சம் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் எடுத்த நிகழ்வில் இது 5-வது முறையாகும். மேலும் முதல் 7 பேரில் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர் எடுத்த நிகழ்வு இதுவே முதல் முறை ஆகும். இந்த போட்டியில் மொத்தமாக இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் டக் அவுட் அவுட் ஆகியுள்ளது. இதன் மூலம் ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் 5 பேருக்கு மேல் அவுட் ஆவது இது 5-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 3 டக் அவுட்கள் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள்:-
ENG vs AUS, மெல்போர்ன், 1911/12
ENG vs PAK, லார்ட்ஸ், 2010
SA vs AUS, பெர்த் 2012/13
AFG vs ZIM, புலவாயோ, 2024
ENG vs IND, எட்ஜ்பாஸ்டன், 2025
- ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 184 ரன்களுடன் இருந்தார்.
- இந்தியா தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 184 ரன்களுடன் இருந்தார். இந்தியா தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையில் உள்ளது.






