என் மலர்
விளையாட்டு
- அட்டவணையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன வெளியிட்டுள்ளார்.
- சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது.
மேலும், இப்பபோட்டி சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். 2026-ல் நடைபெறவுள்ள ஆக்கி உலகக்கோப்பை இந்தியா வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
- இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.
ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.
அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.
சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.
- 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்தார்.
- கொரோனா காலத்தில் விளையாடியபோது, ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
டி20 யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டத்தால் உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து டி20 லீக்கிலும் விளையாடி முத்திரை பதித்தார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்காக அதிகப்படியான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆர்சிபி ஒரு கட்டத்தில் ஏலத்தில் எடுக்காத நிலையில், பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் செஞ்சூரி அடித்து அசத்தினார்.
2018ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 41 போட்டிகளில் விளையாடி 1339 ரன்கள் அடித்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரின்போது கொரோனா காலம் என்பதால், வீரர்கள் பயோ-பப்பிள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களை யாரும் அணுக முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது அணி தன்னை அவமரியாதையாக நடத்தியதாக உணர்ந்ததாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் கூறியதாவது:-
என்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் முன்னதாகவே முடிந்து விட்டது. பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன். ஐபிஎல் தொடருக்கு பெரிய பங்காற்றிய சீனியர் வீரர் என்ற மரியாதை அளிக்கப்படவில்லை. சிறுபிள்ளை போல என்னை நடத்தினார்கள். இதனால் ஒரு பெரிய கட்டிடம் என்னுடைய தோளில் இருப்பது போல் உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அழுத்தத்தை எதிர்கொண்டதாக உணர்ந்தேன்.
கொரோனா பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருக்கும்போது, பணத்தை விட உடல்நலம்தான் முக்கியம் என உணர்ந்தேன். இதனால் அனில் கும்ப்ளேயிடம் விவாதித்தேன். அணியை விட்டுச் செல்வதாக கும்ப்ளேவிடம் பேசியபோது மனமுடைந்து அழுதேன். பயிற்சியாளர் மற்றும் அணி ஆகியவை தன்னை நடத்திய விதத்தினால் ஏமாற்றம் அடைந்தேன்.
போகாதீர்கள் இருங்கள், அடுத்த போட்டியில் விளையாடுங்கள் என கே.எல். ராகுல் என்னை அழைத்துப் பேசினார். உங்களுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டேன்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.
- விராட் கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10ஆம் தேதியும், பாகிஸ்தானை 14ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளரான உமர் குல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கூறியதாவது:-
இந்திய அணி பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம். கடினமான காலத்தில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணி வலுவானதாக தோன்றுகிறத. ஆனால், டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் (ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினால்) அல்லது ஒரு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால், போட்டியை மாற்ற முடியும்.
அனைத்து முக்கியமான தொடர்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வார்கள்.
இவ்வாறு உமர் குல் தெரிவித்தார்.
இந்தியா கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் விளையாடியது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் ஹென்றி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

இவருடன் இறுதிப் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடம் இடம் பிடித்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

இறுதிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது.
- சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.
- தொடர்ந்து ரன்கள் குவிக்கவில்லை என்றால், அது கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.
இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். வருங்காலத்தில் கேப்டன் ஆவதற்கான தகுதியை மேம்படுத்திக் கொள்ள பிசிசிஐ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். கடந்த சில சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அதிக அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இது தொடர்ந்தால் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாசிம் ஜாபர் கூறியதாவது:-
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவின், ரன் குவிப்பு தேய்ந்த வண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர் ரன் அடிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் லைக்-சைடு ஸ்கொயர் (square) பகுதியில் அதிக ரன்கள் அடிக்க எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய ஷாட் செலக்ஷன், அவருடைய தகுதிக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தி, ஐபிஎல் தொடரில் மாறுபட்ட வீரராக இருந்ததை பார்த்திருப்போம்.
அவர் ஆஃப்-சைடு ஸ்கோர் அடிக்க தொடங்கினார். அனைத்து திசைக்கும் பந்தை விரட்டும்போது, பந்து வீச்சாளரால் மிகப்பெரிய அளவில் ஏதும் செய்ய முடியாது. அவர் அபாயகரமான பேட்ஸ்மேன். எந்த பந்துவீச்சாளர் என்ற வித்தியாசம் இல்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அது ஆசிய கோப்பை தொடரிலும் தொட வேண்டும் என நம்புகிறேன்.
ஒவ்வொரு தொடருக்கும், துணைக் கேப்டன்களை இந்திய அணி அறிவித்துள்ளது. இதனுடைய அர்த்தம், கேப்டன் பதவி ஆபத்தில் இருக்கிறது என்பதல்ல. பும்ரா எல்லா தொடரிலும் இடம் பெற மாட்டார் என்பதை தேர்வாளர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர். ஹர்திக் பாண்ட்யாவை தற்போது நாங்கள் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போது சுப்மன் கில், ஒருவேளை ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பினால் அவர் போட்டியாக இருக்கலாம். இக்கட்டான நிலையில் மட்டுமே அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சுப்மன் கில் போன்றோரால் உதவ முடியும். ஆனால், கடைசியாக சூர்யகுமார்தான் கடினமாக முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி நாளை தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14ஆம் தேதி பாகிஸ்தானையும், 18ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். இரண்டு முறை டக்அவுட் ஆனார். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 717 ரன்கள் குவித்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்தார்.
- ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.
- சுப்மன் களம் இறங்கினால், சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா நாளைமறுதினம் (10ஆம் தேதி) முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வலுவான சாதனை வைத்துள்ளார். அவரை தொடக்க வீரர் வரிசையில் இருந்து நீக்க சுப்மன் கில்லுக்கு கூட கடினமான ஒன்றாக இருக்கும். சுப்மன் கில் மற்றொரு வீரருக்குப் பதிலாக அணியில் களம் இறங்கலாம். ஆனால், சுப்மன் கில்லை தொடக்க வீரராக தனித்து விட வேண்டும். அவர் இந்திய அணிக்காக விளையாடிய வகையில், தொடர்நது விளையாடி அனுமதிக்க வேண்டும். அதிக ரன்கள், சதங்களுடன் தொடக்க வீரர் வரிசையில் நிலையான ஆட்டத்தை கொண்டுள்ளார்.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
- லபுசேன் அணி 20 போட்டியில் 191 ரன்கள் குவித்தது.
- லபுசேன் 10 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 மேக்ஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுசேன் இறுதிப் போட்டியில ஹாட்ரிக் விக்கெட் வீழத்தி அசத்தினார்.
அவருடைய ரெட்லேண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த 191 ரன்கள் குவித்தது, லபுசேன் 10 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வேல்லி அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 32 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. மேக்ஸ் பிரையன்ட் 38 பந்தில் 76 ரன்களும், ஜெய்டன் டிராபர் 23 பந்தில் 26 ரன்களும் அடிக்க, ரெட்லேண்ட்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரையன்ட் 105 ரன்னில் ஆட்டமிழந்த உடன், வேல்லி அணியின் தோல்வி உறுதியானது.
15ஆவது ஓவரை லபுசேன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லபுசேன் விக்கெட் வீழ்த்தினார். அதன்பின் 18ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்துகளிலும் அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்நது ரேட்லேண்ட்ஸ் அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் லபுசேன் சதம் அடித்திருந்தார். பேட்ஸ்மேனாக சிறந்து விளங்கும் லபுசேன், லெக்ஸ்பின் சுழற்பந்து வீச்சில் அசத்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 183 ரன்கள் விளாசி, இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பார்.
- சச்சின் தனது 100ஆவது சதத்தை பதிவு செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி துபாயில் நடக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாறு
தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை 17ஆவது தொடராகும். இது டி20 கிரிக்கெட் வடிவிலானது. இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே டி20 வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை இந்தியா வென்றது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை இலங்கை வென்றது.
இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனியின் தலைமையில் 50 ஓவர் மற்றும் 20 வடிவிலான தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ரசிகர்கள் மனதில் அழியாத சிறந்த நினைவுகளை இதில் காண்போம்.
2012ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் விளாசிய விராட் கோலி

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முகமது ஹபீஸ் (106), நஷீர் ஜாம்ஷெத் (112) ஆகியோரின் சதங்களால் 329 ரன்கள் குவித்தது. பின்னர் 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கம்பீர் டக்அவுட் ஆனார். சச்சின் தெண்டுல்கர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3ஆவது வீரராக களம் இறங்கிய விராட் கோலி 148 பந்தில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 183 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் இந்தியா 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் 100ஆவது சதத்தை நிறைவு செய்த சச்சின் தெண்டுல்கர் (2012)

2012 ஒருநாள் வடிவிலான ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் 114 ரன்கள் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார். 99ஆவது சதத்தில் இருந்து 100ஆவது சதத்தை அடிக்க சச்சின் தெண்டுல்கருக்கு 12 மாதங்கள் தேவைப்பட்டது.
2018ஆம் ஆண்டில் டையில் முடிவடைந்த இந்தியா- ஆப்கானிஸ்தான் போட்டி
50 ஓவர் வடிவில் நடைபெற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டோனி கேப்டனாக செயல்பட்டார். முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது, பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியாலும் 252 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி டையில் முடிவடைந்தது. இந்த போட்டியின் வெற்றித் தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்த இந்தியா
2008ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சனத் ஜெயசூர்யா (125) சதம் அடிக்க இலங்கை 273 ரன்கள் விளாசியது. பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, அஜந்தா மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் சிக்கித் திணறியது. அஜந்தா மெண்டிஸ் 8 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்தியா 39.3 ஓவரிலேயே 173 ரன்னில் சுருண்டு 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. விரேந்தர் சேவாக் அதிகபட்சமாக 60 ரன்களும், எம்எஸ் டோனி 49 ரன்களும் அடித்தனர்.
2012 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 2 ரன்களில் வெற்றி நழுவ விட்ட வங்கதேசம்
50 ஓவரில் வடிவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. வங்கதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.
இந்தியா- வங்கதேசம் இறுதிப் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி
50 ஓவர் வடிவிலான இறுதிப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வங்கதேசம் நேர்த்தியாக பந்து வீசியதால் இந்திய வீரர்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் லெக்-பை மூலம் ஒரு ரன் கடைக்க இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
2014-ல் இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டி
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்தது. பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. 39 பந்தில் 46 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகித் அப்ரிடி அபாரமாக விளையாடி 18 பந்தில் 34 ரன்கள் விளாசினார். கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின் பந்தில் சிக்ஸ் விளாசி அப்ரிடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, அன்றைய தினம் இந்தியாவுக்கு சிறந்ததாக அமையவில்லை.
2008-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்த ஹர்பஜன் சிங்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி, இறுதி போட்டி இல்லை என்றாலும் அந்த அளவிற்கு பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 267 ரன்கள் அடித்தது. இந்தியா சேஸிங்கில் ரன்களை நெருங்கிய போதும், விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டு பந்தில் 4 ரன்களை தேவைப்பட்டது, முகமது ஆமிர் பந்தை சிக்சருக்கு விளாசி ஹர்பஜன் சிங் அணியை வெற்றி பெற வைப்பார். இந்த வெற்றி மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி 15 வருடத்திற்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றது.
- முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2027-ம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெறாத ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறியுள்ளன.
அந்த வகையில் கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 41.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக கனடா அணி முதலில் பேட்டிங் செய்கையில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர்.
இந்த போட்டியின் முதல் பந்தில் கனடா அணியை சேர்ந்த தொடக்க வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இரண்டாவது பந்தின் போது எதிர்புறம் இருந்த புதிய பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட் மூலம் 2-வது தொடவக்க வீரரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு தொடக்க வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. இப்படி ஒரு அரிதான மோசமான சாதனையை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக கனடா அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது.
துபாய்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன். 31 வயதான அவர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
அப்போது சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை பந்துவீச்சு மதிப்பீடு என்ற பெயரில் இந்த சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அவர் பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி அளவுக்குள் இருப்பதாகவும், அது ஐ.சி.சி.-யின் பந்துவீச்சு விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ராயன் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
- சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடருக்கு தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சியை முடித்து இந்திய வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்தனர். சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சுப்மன் கில் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் சஞ்சு சாம்சன் என முழங்கினர்.
அப்போது, சூர்யகுமார் யாதவ் சாம்சனை 'உள்ளூர் பையன்' என்று நகைச்சுவையாக அழைத்தார். உடனே சஞ்சு ரசிகர்களிடம் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அங்கு வந்த சுப்மன் கில் ரசிகர்களை கண்டு கொள்ளாமல் முகத்தை திரும்பி கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல ரசிகர்கள் சுப்மன் கில்லுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட கூடிய ஜித்தேஷ் சர்மாவும் அணியில் உள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அணியின் லெவனில் இடம்பெருவாரா என்ற கேள்விகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






