என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும்.
    • இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    கோவா:

    11-வது 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நவம்பர் 27-ந்தேதி வரை நடக்கிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பும் இந்த செஸ் திருவிழாவில் உலக சாம்பியன்ஷிப்பை வென்றவரான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹல் சரின், அரவிந்த் சிதம்பரம் மற்றும் அனிஷ் கிரி (நெதர்லாந்து), வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன் ( இருவரும் அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), வெய் யி (சீனா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கிறாார்கள். பெண்கள் உலக சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 'வைல்டு கார்டு' மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் விளையாடும் ஒரே வீராங்கனை இவர் தான்.

    அதே சமயம் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ கருனா, ஹிகரு நகமுரா (அமெரிக்கா) போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாட மறுத்து விட்டனர்.

    இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    'நாக்-அவுட்' போட்டியான இது 8 ரவுண்டுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும். இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். சமநிலை நீடித்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஆட்டத்தில் முதல் 40 நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா 90 நிமிடங்களும், எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி அதிகரிக்கப்படும்.

    ஒவ்வொரு ரவுண்டும் 3 நாட்கள் நடைபெறும். 7-வது ரவுண்டின் போது அரைஇறுதி நடத்தப்படும். கடைசி ரவுண்டில் இறுதி ஆட்டம் மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் அரங்கேறும்.

    இதில் டாப்-50 இடங்களை பெற்றுள்ள வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுவார்கள். 'பை' சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், கேசிபெஸ் நோகர்பெக் (கஜகஸ்தான்), ராஜா ரித்விக் (இந்தியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். 19 வயதான குகேஷ் கூறுகையில், 'உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்தியாவில் எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பானது. கோவாவில் எனக்கு சில மறக்க முடியாத நினைவுகள் உண்டு. இங்கு ஜூனியர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அதனால் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்றார். குகேஷ், கடந்த முறை 2-வது இடத்தை பிடித்தவரான பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, வின்சென்ட் கீமர், வெஸ்லி சோ ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.

    பரிசு எவ்வளவு?

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17½ கோடியாகும். இதில் வாகை சூடும் வீரருக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.75 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடத்தப்படும். முதல் சுற்று ஆட்டம் நவ.1 முதல் 3-ந்தேதி வரை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    • நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன.
    • 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. அஷூ மாலிக் தலைமையிலான தபாங் டெல்லி அணி லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்றதுடன், முதலாவது தகுதி சுற்றில் டைபிரேக்கரில் (6-4) புனேரி பால்டனை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டெல்லி 2019-ம் ஆண்டில் 2-வது இடமும், 2021-22-ம் ஆண்டில் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது.

    அஸ்லாம் இனாம்தார் தலைமையிலான புனேரி பால்டன் அணி லீக் சுற்று பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது தகுதி சுற்றில் சரிவில் இருந்து மீண்டு வந்து 50-45 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. புனே அணி 2022-ம் ஆண்டு 2-வது இடமும், 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் கைப்பற்றி இருந்தது.

    நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன. 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது. இதில் டெல்லி 2 ஆட்டத்திலும், புனே ஒரு ஆட்டத்திலும் வெற்றி கண்டன. இன்றைய ஆட்டத்திலும் இரு அணிகளும் நீயா-நானா? என கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.
    • 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    சென்னை:

    2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார். 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சஹஜா யாமலபள்ளியை (இந்தியா) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் கிம்பெர்லி பிரெலிடம் (ஆஸ்திரேலியா) பணிந்தார். இதன் மூலம் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. அரினா ரோடினோவா (ஆஸ்திரேலியா), போலினா லேட்சென்கோ (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் தியா ரமேஷ்- லட்சுமி பிரபா ஜோடி 3-6, 7-5, 8-10 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ததியானா புரோஜோரோவா- எகதெரினா யாஷினா இணையிடம் போராடி வீழ்ந்தது. பிரார்தனா தோம்ப்ரே (இந்தியா)- அரியானே ஹர்டோனா (நெதர்லாந்து) ஜோடியும் முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

    • உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது.
    • சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது.

    உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (20 ஓவர்) தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் முதலாவது ஆட்டத்தில் ஹேசில்வுட், எலிஸ் பந்து வீச்சில் இமாலய சிக்சர் விரட்டி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ள இந்தியா அதிரடி அணுகுமுறையை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக மட்டையை சுழற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாகும். அத்துடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட இருப்பது நிச்சயம் பரவசமூட்டும்.

    அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் என அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் கைகொடுக்கிறார்கள்.

    மொத்தத்தில் சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

    கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழை புகுந்து விளையாட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேத்யூ குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
    • கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.

    மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.

    மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

    இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
    • மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.

    மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.

    இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    339 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் கடினமான பந்துவீச்சை லாவாகமாக எதிர்கொண்ட இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 341 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பத்து பவுண்டரி இரண்டு சிக்சர் என 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதேபோன்று நடுவரிசையில் தீப்தி சர்மா 24 ரன்களும், ரிச்சா கவுஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து நின்று விளையாடி  சதம் கடந்து 127 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்ரிகள் அடங்கும்.

     இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் மோதுகிறது.  

    • ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் முதலிடத்தை பிடித்துள்ளார்.
    • 18 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 38-வது வயதில் முதலிடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

    லண்டன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிகளில் முறையே 73 மற்றும் 121 ரன்கள் விளாசியதன் மூலம் 36 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த ரோகித் சர்மா மொத்தம் 781 புள்ளிகளுடன் இரு இடம் உயர்ந்து 'நம்பர் 1' அரியணையில் அமர்ந்துள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவர் முதலிடத்தை அலங்கரிப்பது இதுவே முதல் முறையாகும். 18 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 38-வது வயதில் முதலிடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    ரோகித் சர்மா தனது 38-வது வயதில் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை . ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார் என்று சொன்னவுடன் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி. ஏன் இதற்கு முன்பு அவர் நம்பர் 1 இடத்தை பிடித்ததே இல்லையா? என்பதுதான். ஆனால் பலரும் இப்போதுதான் ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார் என்று கூறினார்கள்.

    இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அவர் எனக்குத் தெரிந்து நீண்ட காலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் அடித்திருக்கின்றார்.

    இவ்வளவு செய்தும் ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடிக்கவில்லையா? என்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக எந்த அளவுக்கு வீரர்கள் விளையாடியிருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என நினைக்கின்றேன். ரோகித் சர்மா ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரம்மாண்டமான வீரர். அவர் உலகின் முதல் இடத்திற்கு தகுதியானவர்.

    என்று கூறினார். 

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
    • டி மினார் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.

    இதில் தொடக்கம் முதலே இருவரும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை டி மினார் போராடி கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை டியாலோ கைப்பற்றினார்.

    இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டி மினார் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் டி மினார் 7-6, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இவர் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.

    • சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி.
    • போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த செஸ் தொடரில் விளையாடினார்.

    சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

    • எலிஸ் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.

    இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா -இந்தியா அணிகள் ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஆஸ்திரேலியா தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.

    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்திய அணி தொடரை இழந்தாலும் தொடரின் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    பல விமர்சனங்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கினர். விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஆனால் 2-வது போட்டியில் அரைசதமும் 3-வது போட்டியில் சதமும் அடித்து அசத்தினார்.

    இருவரும் 38 வயதை கடந்த போதிலும் உடல்தகுதியுடன் உள்ளதாக முன்னாள் வீரர்கள் முதல் பிற நாட்டு வீரர்கள் வரை புகழாரம் சூட்டினர். இந்த தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.

     

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எந்த இந்திய வீரர் மிகவும் பொருத்தமானவர் என அந்த அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா தான் என பதிலளித்தார். அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×