என் மலர்
நீங்கள் தேடியது "chennai open tennis"
- கடந்த 25ஆம் தேதியில் இருந்து இன்றுவரை போட்டிகள் நடைபெற்றன.
- இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜென்- ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டிஜென் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தனர். அதன்பின் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
- இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.
சென்னை:
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் ( இந்தோனேசியா), 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்திரேலியா) , ஜோர்னா கார்லேண்ட் ( சீன தைபே), லான்லானா தராருடீ (தாய்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா போசலே ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
மற்றொரு இந்திய ஜோடியான மாயா-வைஷ்ணவி ஜோடி கால் இறுதியில் தோற்றது. முதல் வரிசையில் இருக்கும் ஸ்டார்ம் ஹண்டர் (ஆஸ்திரேலியா)-மோனிகா (ருமேனியா) ஜோடி 6-2, 6-1 என்ற கணக்கில் டாட்டியானா-யஷினா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று மாலை நடைபெறும் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்களில் லான்லானை தராருட்-ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி-ஜோர்னா கார்லேணட் மோதுகிறார்கள்.
இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.
- 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
சென்னை:
2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார். 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சஹஜா யாமலபள்ளியை (இந்தியா) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் கிம்பெர்லி பிரெலிடம் (ஆஸ்திரேலியா) பணிந்தார். இதன் மூலம் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. அரினா ரோடினோவா (ஆஸ்திரேலியா), போலினா லேட்சென்கோ (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் தியா ரமேஷ்- லட்சுமி பிரபா ஜோடி 3-6, 7-5, 8-10 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ததியானா புரோஜோரோவா- எகதெரினா யாஷினா இணையிடம் போராடி வீழ்ந்தது. பிரார்தனா தோம்ப்ரே (இந்தியா)- அரியானே ஹர்டோனா (நெதர்லாந்து) ஜோடியும் முதல் சுற்றுடன் நடையை கட்டியது.
- இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
- போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும்
சென்னை:
தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. 3 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் ஜய்னப் சோன்மெஸ் (துருக்கி), 74-ம் நிலை வீராங்கனை பிரான்செஸ்கா ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா), நடப்பு சாம்பியனான லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), லுசியா பிரான்செட்டி (இத்தாலி), ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இது தவிர இந்திய இளம் நட்சத்திரங்கள் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிதிபதி, சஹஜா யாமலபள்ளி ஆகியோருக்கு நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் 'ைவல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த 16 வயதான மாயா, முதல் ரவுண்டில் ஸ்ரீவள்ளியுடன் மோத உள்ளார்.
நேற்று நடந்த தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தோல்வி அடைந்தார். ஆனாலும் வைஷ்ணவி அத்கருக்கு பிரதான சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதாவது நெருக்கடியான போட்டி அட்டவணை காரணமாக நியூசிலாந்தின் லுலு சன் கடைசி நேரத்தில் விலகி விட்டார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் வைஷ்ணவி அத்கர் ஆடுகிறார். அவர் முதல் சுற்றில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச்சுடன் இன்று மல்லுகட்டுகிறார்.
நடப்பு சாம்பியனான புருவிர்தோவா தனது சவாலை தகுதி நிலை வீராங்கனை பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தொடங்குகிறார்.
இரட்டையர் பிரிவில் மோனிகா நிகல்சுகு (ருமேனியா)- ஸ்டோம் ஹன்டர் (ஆஸ்திரேலியா) ஜோடிக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கால்இறுதியில் கால்பதிக்கும் அவர்களுக்கே பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது.
இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.11½ லட்சம் பரிசாக பெறுவார்கள்.
முதல் நாள் ஆட்டங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை டி.டி ஸ்போர்ட்ஸ், யூரோ ஸ்போர்ட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
- சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் லின்டாவிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் 16 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பெயின் 'இளம் புயல்' கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா கிடுகிடுவென 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இறுதி ஆட்டத்தில் அவரிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் (போலந்து) 16 இடங்கள் ஏற்றம் கண்டு 51-வது இடத்தை பெற்றுள்ளார்.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.
- வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
சென்னை:
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
- இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
- அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியை ரசித்து பார்த்தனர்.
நுங்கம்பாக்கம்:
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா புருவிர்தோவாவும், போலந்து வீராங்கனை மக்டா லினெட்டும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 17 வயதான அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டார் கண்டு ரசித்தனர்.
- இறுதிப் போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி இணை வெற்றி.
- அன்னா லின்கோவா- நடிலா ஜலாமிட்ஸ் இணை தோல்வி.
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- பிரேசிலை சேர்ந்த லுசா ஸ்டெபானி இணை, ரஷியாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
- நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு நடந்தன.
முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இதில்
முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றினார்.
இறுதியில், லிண்டா 5-7, 6-2 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மக்டா லினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக சுவான் விலகினார். இதனால் லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டா லினெட்டும் மோத உள்ளனர்.
இறுதிப் போட்டியை நேரில் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தார்.
- ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி 2-வது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியவில்லை. சரிவில் இருந்து மீண்ட புசார்ட் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கர்மன் தண்டி, புசார்ட்டை விட அதிக தவறுகளை இழைத்தார்.
பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது போன்ற எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்தது. புழுக்கத்தால் வியர்த்து கொட்டி நனைந்து போனார்.
கர்மன் தண்டியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே தோல்வி அடைந்தார்.
- முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ஜெர்மனி வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.
- சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது.
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
29-வது இடத்தில் உள்ள அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), கிராசேவா (ரஷியா), மேக்டா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) உள்ளிட்ட உலகின் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான இன்று 3 டென்னிஸ் ஆடுகளத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இன்ைறய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் குளோபேக்கியூட்டை சந்திக்கிறார். இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.






