என் மலர்
விளையாட்டு
- டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
- ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 4ஆவது பந்திலேயே ஹெட்டை (6) வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிசை 1 ரன்னனில் வெளியெற்றினார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக அர்ஷ்தீப் சிங், பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிட்செல் மார்ஷ் திணறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இவர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். அவர் 23 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் 12 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னைத் தொட்டது.
தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மிட்செல் ஓவன் முதல் பந்திலேயே வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இவரின் முதல் அரைசதம் இதுவாகும்.
19ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. ஷார்ட் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 47 பந்தில் 68 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கும், தொடர் நாயகன் விருது பஹீம் அஷ்ரப்புக்கும் வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி பைசலாபாத்தில் நடக்கிறது.
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
- இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.
ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.
- ஆசிய கோப்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் டாஸ் தோற்று வருகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இருந்து இந்தியா டாஸ்-ஐ தொடர்ந்து தோற்று வருகிறது.
இந்த நிலையில்தான் இன்றைய 3ஆவது போட்டியில், சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றார். அத்துடன் வெற்றி பெற்றது போன்று கையை கட்டினார். மேலும், பூஜை போட்டது வேலை செய்துவிட்டது என்பது போன்று சைகை காட்டினார்.
பின்னர் சிரித்துக் கொண்டு மிட்செல் மார்ஷை சூர்யகுமார் யாதவ் கட்டிப்பிடித்தார்.
- அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
- தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக திடீரென மழை பெய்தது. இதனால் சரியான நேரத்தில் டாஸ் சுண்டப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படும். 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் .
- சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
- புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
- 3 ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
- சுப்மன் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் மிடில் ஆர்டர் பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்டார். இப்போது அணியில் இருந்தும் டிராப் செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி மாறியுள்ளது.
- முதல் 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
- 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2 ஆவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன
- முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் இன்று மழை பெய்ய 63% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒருவேளை மழையால் ஆட்டம் முழுமையாக தடைபட்டால் நாளைக்கு ஒத்திவைக்கப்படும். நாளையும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு 50 ஓவர் உலக கோப்பை பகிர்ந்து தரப்படும்.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன
- முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி பெங்களூருவில் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
மேலும், உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரிலும் இந்திய அணியின் வெற்றிக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
- தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது .
- ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்தி ரேலியா)-ஜோர்னா கார்லேண்ட் (சீனதைபே) மோதினார்கள். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கிம்பெர்லி 6-7 (2-7), 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
3-வது செட்டில் ஒரு கட்டத்தில் கார்லேண்ட் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வாய்ப்பை அவர் தக்க வைக்க தவறிவிட்டார். 4 முறை மேட்ச் பாயிண்ட் வந்தும் அவர் தோல்வியை தழுவினார்.
நீண்ட நேரமாக போட்டி நடைபெற்றதால் கார் லேண்ட் மிகவும் சோர்வடைந்தார். மேலும் தசைப் பிடிப்பும் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மருத்துவ உதவியை பெற்றார். தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது . அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த போட்டி 3 மணி 24 நிமிட நேரம் நடைபெற்றது.
முன்னதாக நடந்த அரை இறுதி போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென்- கிம்பெர்லி பிரெல் மோதுகிறார்கள்.
இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரியா பாட்டியா- ருதுஜா போசலே ஜோடி 7-5, 0-6, 5-10 என்ற கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென்- அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனே சியா)ஜோடியிடம் தோற்றது.
இந்த ஜோடி இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டோம் கண்டர் (ஆஸ்திரேலியா)- மோனிகா (ருமேனியா) ஜோடியுடன் மோதுகிறது.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
- முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த பேச்சு 2023 இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" என்று கூறினார்






