என் மலர்
நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா ஏ"
- துருவ் ஜூரெல் சதமடிக்க இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பெங்களூரு:
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துருவ் ஜூரெல் சதமடித்து 132 ரன்கள் குவித்தார்.
தென் ஆப்பிரிக்க ஏ சார்பில் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் சதமடித்து 134 ரன்கள் விளாசினார்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
34 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் மீண்டும் சதமடித்து 127 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க ஏ அணி அடித்து ஆடியது. ஜோர்டான் ஹெர்மான் 91 ரன்னும், செனோக்வானே, ஜுபைர் ஹம்சா தலா 77 ரன்னும், டெம்பா பவுமா 59 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
- இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.
ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.






