என் மலர்
நீங்கள் தேடியது "தனுஷ் கோட்யான்"
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
- இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.
ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.
- மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது.
- முதல் இன்னிங்சில் பரோடா அணி 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து.
78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது.
- அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதி வருகின்றனர். முதல் 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் பாதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு இளம் வீரரை அணியில் சேர்ந்துள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு விசா இல்லை. அவர் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் ரெடியாக இருப்பார்களா என்பது கேள்வி குறிதான். ஆனால் தனுஷ் ரெடியாக இருந்தார். அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்த 2 டெஸ்ட் போட்டியிலும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். இதனால் பேக் அப் வீரராக இவரை அணியின் சேர்த்துள்ளோம்.
இவ்வாறு ரோகித் கூறினார்.






