என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஸ்மிரிதி மந்தனா 45 ரன்கள் அடித்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    நவி மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியா 6.3 ஓவரில் 50 ரன்களை கடந்து, 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மிரிதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா உடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்துள்ளது. ஷபாலி வர்மா 56 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்​மனி​யில் நடை​பெற்று வருகிறது.
    • இந்தியாவின் உன்னதி ஹுடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, இந்தோனேசியாவின் புத்ரி குசுமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீராங்கனை 21-7, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹுடா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.
    • இதன் இறுதிச்சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக கிறிஸ்டினா 2வது செட்டை 7-6 (11-9)

    என போராடி வென்றார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.
    • திலக் வர்மா 29 ரன்களும், அபிஷேக் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அரைசதத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 12 பந்தில் 17 எடுத்தார்.

    அடுத்து வாஷிங்கடன் சுந்தர் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியா எளிதாக இலக்கை நெருங்கியது.

    18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

    • மழையால் 2 மணி நேரம் தாமதமாக டாஸ் சுண்டப்பட்டது.
    • ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.

    கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மழை பெய்ததால் போட்டி சரியாக 3 மணிக்கு தொடங்கவில்லை. காலதாமதம் ஆனது. இறுதியாக 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 4ஆவது பந்திலேயே ஹெட்டை (6) வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிசை 1 ரன்னனில் வெளியெற்றினார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக அர்ஷ்தீப் சிங், பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிட்செல் மார்ஷ் திணறினார்.

    3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இவர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். அவர் 23 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் 12 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னைத் தொட்டது.

    தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    மிட்செல் ஓவன் முதல் பந்திலேயே வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இவரின் முதல் அரைசதம் இதுவாகும்.

    19ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.

    இந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. ஷார்ட் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 47 பந்தில் 68 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கும், தொடர் நாயகன் விருது பஹீம் அஷ்ரப்புக்கும் வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி பைசலாபாத்தில் நடக்கிறது.

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.

    ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.

    • ஆசிய கோப்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் டாஸ் தோற்று வருகிறது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இருந்து இந்தியா டாஸ்-ஐ தொடர்ந்து தோற்று வருகிறது.

    இந்த நிலையில்தான் இன்றைய 3ஆவது போட்டியில், சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றார். அத்துடன் வெற்றி பெற்றது போன்று கையை கட்டினார். மேலும், பூஜை போட்டது வேலை செய்துவிட்டது என்பது போன்று சைகை காட்டினார்.

    பின்னர் சிரித்துக் கொண்டு மிட்செல் மார்ஷை சூர்யகுமார் யாதவ் கட்டிப்பிடித்தார்.

    • அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
    • தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.

    கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    போட்டி தொடங்குவதற்கு முன்னதாக திடீரென மழை பெய்தது. இதனால் சரியான நேரத்தில் டாஸ் சுண்டப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படும். 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் .

    • சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
    • புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.

    இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    ×