என் மலர்
புதுச்சேரி
புதுவை தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகரை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலை இல்லாமல் மனவிரக்தியுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கன்னியப்பன் வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக கன்னியப்பனை அவரது குடும்பத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கன்னியப்பன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Taking responsibility for who we consume?
— Kiran Bedi (@thekiranbedi) March 19, 2020
It’s also about excercise of harmless choices.
Also about practicing non violence?
In word, deed and eat? @ANI@PTI_News@airnewsalertspic.twitter.com/bGSji93qpi
கூண்டில் மனிதர்கள் முகக்கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் கீழே ‘இது கொரோனா அல்ல. இது கர்மா’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளில், நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது? இது பாதிப்பில்லா தேர்வை பற்றியதுதான். அத்துடன் அகிம்சையை பயிற்சி செய்வது வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் உணவிலும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
வில்லியனூர் புதுநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர், தனது மனைவி மனோரஞ்சிதம் மற்றும் 2 மகன்களுடன் மூலகுளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இதனை மனோரஞ்சிதம் கண்டித்தார். அய்யப்பன் மனைவியுடன் தகராறு செய்து விட்டு கோபித்துக்கொண்டு வில்லியனூர் புதுநகரில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வந்ததால் மனவேதனை அடைந்த அய்யப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று காலை அவர் தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கொக்கியில் தாவணியால் தூக்குபோட்டு தொங்கினார்.
உடனே இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அய்யப்பனை தூக்கில் இருந்து மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் மூடப்பட்டன. மது பார்களை மூடுவது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல் (வியாழக்கிழமை) மதுபார்கள் (மது அருந்தும் இடம்) அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த மற்றும் சில்லரை மதுபான கடைகள் செயல்படும்.
மாகி பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு புனித பயணங்கள் சென்று வந்துள்ள அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாகி பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இதற்காக நானும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் மாகிக்கு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. ஆனால், புதுவை அரசு அலட்சியமாகவும், சுயநல நோக்கத்தோடும் செயல்படுவது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாய்வு, மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார்.
பள்ளி, கல்லூரி, மது பார்கள், சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளார். ஆனால், புதுவை அரசு கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எல்லைகளில் மருத்துவ முகாம்கள் கூட அமைக்கவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து கார், பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கவில்லை. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என கண்டறியும் தெர்மா மீட்டர் கூட இல்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர் வசதி இல்லை. சமீபத்தில் சகாதேவன் என்ற நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அரசு மருத்துவமனை நிலை இப்படியென்றால் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய மையங்களின் நிலை எப்படி இருக்கும்?
கொரோனா விஷயத்தில் மக்கள் லாபநோக்கத்துடன் செயல்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மது கடைகளும், சாராயக்கடைகளும் உள்ளது.
ஆனால் புதுவை அரசு இதனை மூட உத்தர விடவில்லை. தேசிய பேரிடர் போன்ற காலங்களில் கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், புதுவை கலெக்டர் முதல்-அமைச்சர் சொல்வதை மட்டும் செயல்படுத்துகிறார். மக்களின் உயிருடன் விளையாடுகிறோம் என்ற எண்ணமின்றி அரசு செயல்படுகிறது.
அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்படவில்லை. நாடு முழுவதும் 20 நகரங்களில் 144 தடை உத்தரவு போட்டுள்ளனர். தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க 2 நாள் அவகாசம் அளித்து 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராது என்றார். தற்போது அமைச்சர் மது குடித்தால் கொரோனா வராது என்கிறார். தாங்கள் வகிக்கும் பொறுப்பை உணராமல் உளறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கோட்டை மேடு காவிரி நகரை சேர்ந்தவர் மணிசேகரன் (வயது 28). தனியார் நிறுவனத்தில் உதவி மானேஜராக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று இரவு வேலை முடிந்து உடன் வேலை பார்க்கும் கண்ணன் என்பவருடன் மங்கலம் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மணிசேகரனிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார்.
இகுகுறித்து மனிசேகரன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டை அருகில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.
இதனையறிந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 3 அரிவாள்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வானரப்பேட்டையை சேர்ந்த ரவுடியான மணிகண்டன் என்கிற குட்டி மணி, நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மதியழகன் (வயது23), தேங்காய்திட்டை சேர்ந்த சரவணன் (24), பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி (60), அதே பகுதியை சேர்ந்த ஏசுராஜ்டேவிட் என்பதும் இவர்கள் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்யும் நோக்கத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கும்பலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் என்கிற குட்டி மணி என்பவர் ஜெகன் மற்றும் சாணிகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் இவர் மீது 3 கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்கள், உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், அரசு செயலர்கள் அன்பரசு, பிரசாந்தகுமார் பாண்டா, சுர்பிர்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சுற்றுலா பயணிகளை கண்காணிப்பது, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரானோ வைரஸ் தடுப்பு, சிகிச்சை தொடர்பாக புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் மருத்துவ பரிசோதனை நடத்தினோம். சோதனையில் யாருக்கும் கொரானோ வைரஸ் இல்லை என தெரியவந்தது.
புதுவையில் இதுவரை கொரானோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
திருச்சி, சென்னை விமான நிலையங்களில் இருந்து தகவல் பெற்று புதுவை வருபவர்கள் கண்காணிக்கப்படுவர். மாநில எல்லைகளில் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மருத்துவக்குழுவினர் அவர்களை பரிசோதனை செய்து புதுவைக்குள் அனுமதிப்பர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம். நாளை (புதன்கிழமை )முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வரும் 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் ஆகியவையும் மூடப்படும். போட்டிகள் எதனையும் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தவும் 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாக்களில் உற்றார், உறவினர், நண்பர்களை குறைந்தளவில் அழைத்து நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். மறு அறிவிப்பு வரை சண்டே மார்க்கெட் இயங்காது. உள்ளாட்சித்துறை மூலம் பஸ்நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கை கழுவிவிட்டு செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஆஷா ஊழியர்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.
கல்லூரி மாணவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பஸ்கள், ரெயில்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.11 கோடியும், சுகாதாரத்துறையிலிருந்து ரூ.7.50 கோடியும் உபகரணங்கள் பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் தேவையானவற்றை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை 50 சதவீதம் குறைந்துள்ளது. மதுபார்களை மூடுவது குறித்து 2 நாட்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருபுவனை அருகே சன்னியாசிக்குப்பம் குயவர் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 20). பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை சக்திவேல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சசிக்குமார் என்பவர் சக்தி வேலுவை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார்.
அதற்கு சக்திவேல் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கருங்கற்களால் சக்தி வேலுவை தாக்கினார். மேலும் இதுபற்றி போலீசில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை தேடி வருகிறார்.
வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா பிரமுகர் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் பொது இடத்தில் சுவர் விளம்பரம் செய்தனர்.
இந்த சுவர் விளம்பரத்தின் மீது அதே பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் வில்லியனூர் போலீசார் தலையிட்டு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், மணிகண்டன், நாகராஜன், நக்கீரன் ஆகிய 4 பேர் மீதும், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், நாகராஜன், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கூடப்பாக்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் முதன்மையான பொருளாதாரமாக இருப்பது சுற்றுலா மற்றும் அதனை சேர்ந்த தொழில்களுமே. இந்த நிலையில் கடந்த வாரம் சுற்றுலா வந்த பயணிகளிடம் மிரட்டி பணம் பறித்ததுடன் அவர்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட சம்பவம் கொடூரமானது. இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
வெளியூரிலிருந்து புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளை பாதுகாக்க வேண்டிய போலீசாரே தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்படுவது புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே இது போன்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது.
தற்போது புதுவை அரசு விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியக்கடை போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் சதீஷ் குமார் மற்றும் ரிசர்வ் பட்டாலியன் போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோரை கைது செய்ய வேண்டும். மேலும் இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படும் போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள் மீது உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அருள்செல்வம். இவரது மகன் சுதர்சனம் (வயது 21). இவர் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சுதர்சனம் கல்லூரி செல்லும் நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் வில்லியனூரில் உள்ள ஒரு காய்கறி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அதுபோல் இன்று காலை சுதர்சனம் காய்கறி கடையில் வேலை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்ல கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
வில்லியனூர் ஆச்சாரியாபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் தன்னுடன் படித்து வரும் மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி வாகனம் சென்றது.
அவர்களை பார்த்ததும் சுதர்சனம் உற்சாகம் அடைந்து மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து கைகாட்டியபடி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி வாகனம் உரசியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த சுதர்சனம் மீது கல்லூரி வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுதர்சனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இதனை பார்த்ததும் பஸ்சில் வந்த சுதர்சனத்துடன் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது கண் எதிரே கல்லூரி தோழர் விபத்தில் பலியானதை கண்டு கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தான் படிக்கும் கல்லூரி வாகனத்திலேயே மாணவர் சுதர்சனம் மோதி பலியான சம்பவம் அக்கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி மாணவரின் உறவினர்கள் கல்லூரிக்கு சென்று முறையிட்டனர். இந்த சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கல்லூரி நிர்வாகம் தகுந்த பதிலை அளிக்கவில்லை.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் மாணவர்கள் ஆத்திரம் அடைந்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி முறையாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






