search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்கள் மூடல்"

    • பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை ஒட்டி பார் செயல்பட்டு வந்தது. இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் 2 கடைகள் மட்டுமே, அரசு அனுமதி பெற்றுள்ளது என தெரிய வந்தது. மேலும் 2 கடைகள் அனுமதி பெறாமல், அனுமதி பெற்ற கடையை போல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுமதி பெறாமல் இயங்கிய பார்களை உடனடியாக மூட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதிகாரிகள் ஆய்வை அடுத்து அனுமதி பெறாமல், இயங்கிய வந்த 2 பார்களும் மூடப்பட்டது.மேலும் உரிய லைசென்ஸ் பெறாமல் பார் நடத்தினால் பாரில் பணி புரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ×