என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே காங்கிரஸ்-பாரதிய ஜனதா மோதல்: 4 பேர் கைது
Byமாலை மலர்17 March 2020 10:56 AM GMT (Updated: 17 March 2020 10:56 AM GMT)
வில்லியனூர் அருகே காங்கிரஸ்-பாரதிய ஜனதாவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா பிரமுகர் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் பொது இடத்தில் சுவர் விளம்பரம் செய்தனர்.
இந்த சுவர் விளம்பரத்தின் மீது அதே பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் வில்லியனூர் போலீசார் தலையிட்டு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், மணிகண்டன், நாகராஜன், நக்கீரன் ஆகிய 4 பேர் மீதும், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், நாகராஜன், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கூடப்பாக்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா பிரமுகர் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் பொது இடத்தில் சுவர் விளம்பரம் செய்தனர்.
இந்த சுவர் விளம்பரத்தின் மீது அதே பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் வில்லியனூர் போலீசார் தலையிட்டு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், மணிகண்டன், நாகராஜன், நக்கீரன் ஆகிய 4 பேர் மீதும், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், நாகராஜன், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கூடப்பாக்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X